NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இந்தியாவில் கலப்பு எரிபொருளில் இயங்கும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது டொயோட்டா
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் கலப்பு எரிபொருளில் இயங்கும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது டொயோட்டா
    இந்தியாவில் கலப்பு எரிபொருளில் இயங்கும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது டொயோட்டா

    இந்தியாவில் கலப்பு எரிபொருளில் இயங்கும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது டொயோட்டா

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 29, 2023
    03:12 pm

    செய்தி முன்னோட்டம்

    கலப்பு எரிபொருளில் (Flex Fuel) இயங்கும் வகையிலான இன்ஜினைக் கொண்ட டொயோட்டாவின் இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட் கார் மாடலை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறார் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி.

    பெட்ரோல் டீசலில் மட்டுமல்லாது, எத்தனாலில் இயங்கக்கூடிய வாகனங்களை கலப்பு எரிபொருள் வாகனங்கள் என அழைக்கின்றனர்.

    தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட் மாடலானது, கலப்பு எரிபொருளில் மட்டுமல்லாது எலெக்ட்ரிக் வாகனமாகவும் பயன்படுத்தப்படும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

    நான்கு சிலிண்டர்கள் கொண்ட 2.0-லிட்டர் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருக்கும் இந்த இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட் மாடலானது, E100 எனப்படும், கிட்டத்தட்ட 100 சதவிகித எத்தனால் கலந்த எரிபொருளில் இயங்கும் வகையிலான இன்ஜினைக் கொண்டிருக்கிறது.

    டொயோட்டா

    டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட்: 

    தற்போது கலப்பு எரிபொருளில் இயங்கக்கூடிய இந்தப் புதிய இன்னோவா ஹைகிராஸ் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், இந்த காரின் தயாரிப்பு வடிவத்தை எப்போது டொயோட்டா அறிமுகப்படுத்தும் என்பது குறித்த தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.

    எனினும், விரைவில் இந்தியாவில் இந்த கலப்பு எரிபொருள் வாகனத்தை அந்நிறுனம் தங்கள் லைன்அப்பில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், உலகில் 100 சதவிகிதம் கலப்பு எரிபொருளில் இயங்கக்கூடிய வகையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் முதல் வாகனம் இதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இந்தியாவில் தற்போது அதிகபட்சமாக 20% வரை எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறது மத்திய அரசு. இந்திய வாகனங்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களும், அதற்கேற்ற வகையில் மேம்படுத்தப்பட்ட இன்ஜினை தங்கள் வாகனங்களில் வழங்கத் தொடங்கிவிட்டன.

    ஆட்டோமொபைல்

    கலப்பு எரிபொருள் என்றால் என்ன? அதனால் நமக்கு என்ன லாபம்? 

    பெட்ரோலில் குறிப்பிட்ட அளவு எத்தனால் கலந்து பயன்படுத்தப்படும் எரிபொருளே கலப்பு எரிபொருள் என அழைக்கப்படுகிறது.

    தற்போது உலகிலேயே, அதிக அளவாக பிரேசிலில் தான் 48% எத்தனால் கலந்த எரிபொருள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்தியாவில் தற்போது தான் 20% எத்தனால் கலந்த எரிபொருள் பயன்பாட்டை பரவலாக்கத் திட்டமிட்டு வருகிறது மத்திய அரசு.

    விவசாயப் பொருட்களின் மிச்சங்களில் இருந்து தயாரிக்கப்படும் எத்தனாலை பெட்ரோலில் கலந்து பயன்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதுடன், பெட்ரோல் இறக்குமதிக்கு ஆகும் செலவையும் கட்டுப்படுத்தி வருகிறது இந்தியா.

    இந்தியாவில் 2013-14ல் 1.53% என்ற அளவிலிருந்து தற்போது 11.5% என்ற அளவிற்கு பெட்ரோலில் எத்தனால் கலப்பு உயர்ந்திருக்கிறது. இதன் மூலம், கடந்த எட்டாண்டுகளில் ரூ.41,500 கோடி வரை எரிபொருள் செலவைக் குறைத்திருக்கிறது இந்தியா.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கார்
    ஆட்டோமொபைல்
    இந்தியா

    சமீபத்திய

    இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று ஸ்பெயினில் கேட்டவருக்கு MP கனிமொழி அளித்த நச் பதில்! கனிமொழி
    பென்ட்லியின் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யூவி வெளியாகியுள்ளது: விவரங்கள் இதோ எஸ்யூவி
    வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான மத்திய அரசின் வெப்சைட் இந்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளது வக்ஃப் வாரியம்
    தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு தமிழ்நாடு

    கார்

    இந்தியாவில் மாருதியின் அடுத்த லைன்-அப் என்ன? மாருதி
    இந்தியாவில் வெளியானது மெர்சிடீஸின் புதிய AMG SL 55 ரோட்ஸ்டர் மெர்சிடீஸ்-பென்ஸ்
    நான்கு சக்கர வாகன காப்பீட்டுத் திட்டங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் விலக்குகள் காப்பீட்டுத் திட்டங்கள்
    30,000 கேரன்ஸ் மாடல் கார்களை திரும்பப்பெறும் கியா கியா

    ஆட்டோமொபைல்

    இந்த ஆகஸ்ட் 2023-ல் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கும் கார்கள் கார்
    15 நிமிடங்களில் முழுமையான எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங்கை சாத்தியப்படுத்திய பெங்களூரு ஸ்டார்ட்அப் எலக்ட்ரிக் வாகனங்கள்
    இந்தியாவில் புதிய அலுவலகத்தை அமைக்கும் டெஸ்லா, இந்தியாவில் அதன் திட்டம் என்ன? டெஸ்லா
    ரூ.3.14 லட்சம் வரை மெரிடியன் மாடலின் விலையை உயர்த்தி ஜீப் கார்

    இந்தியா

    சந்திரயான் 3: வீரமுத்துவேலின் தந்தை பழனிவேல் உணர்ச்சிவசப்படும் காணொளி இணையத்தில் வைரல் சந்திரயான் 3
    விரைவாக, தட்கல் முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி ? வாழ்க்கை
    3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் உலக சாம்பியன்ஷிப்பில் சாதனை படைத்த இந்திய வீராங்கனை உலக சாம்பியன்ஷிப்
    சந்திரயான் 3யின் வெற்றியைக் கொண்டாட குழந்தைகளுக்கு சந்திரயான் எனப் பெயர் சூட்டிய பெற்றோர்கள் சந்திரயான் 3
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025