Page Loader
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக் ரேஸிங் சாம்பியன்ஷிப் தொடங்குவதாக டிவிஎஸ் நிறுவனம் அறிவிப்பு
இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் பைக் ரேஸிங் சாம்பியன்ஷிப் தொடங்குவதாக டிவிஎஸ் நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக் ரேஸிங் சாம்பியன்ஷிப் தொடங்குவதாக டிவிஎஸ் நிறுவனம் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Sep 21, 2023
03:39 pm

செய்தி முன்னோட்டம்

இரு சக்கர வாகன விற்பனையாளரான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், இந்தியாவின் முதல் ஒன் மேக் எலக்ட்ரிக் பைக் ரேஸிங் சாம்பியன்ஷிப்பை (இ-ஓஎம்சி) தொடங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இந்த அறிவிப்பின் மூலம் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள் பந்தய உலகில் நுழைந்த முதல் இந்திய வாகன உற்பத்தியாளர் என்ற பெருமையை டிவிஎஸ் நிறுவனம் பெறுகிறது. இந்தப் போட்டி இந்திய தேசிய மோட்டார் சைக்கிள் சாலை பந்தய சாம்பியன்ஷிப்பின் (ஐஎன்எம்ஆர்சி) நான்காவது சுற்றில் தொடங்க உள்ளது. டிவிஎஸ் ரேசிங் இ-ஓஎம்சி இந்திய மின்சார மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது. இந்நிலையில், இந்த பந்தயத்திற்காக டிவிஎஸ் நிறுவனம் அப்பாச்சி ஆர்டிஇ என்ற மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது.

TVS starts India first E-OMC Racing Championship

அப்பாச்சி ஆர்டிஇ ரேஸ் பைக்கின் சிறப்பம்சங்கள்

அப்பாச்சி ஆர்டிஇ பைக்குகள், அதிக திறன் கொண்ட லிக்விட்-கூல்டு மோட்டாருடன் வருவதால், இந்த மாடலில் அதிக பவர்-எடை விகிதத்தை கொண்டுள்ளது. மேலும் உயர்-பவர் பேட்டரி செல்கள் போதுமான பைக்கிற்கு சக்தியை வழங்குகின்றன. ரேஸ்-ஸ்பெஷல் அல்காரிதம்கள் கொண்ட தனிப்பயனாக்கப்பட்ட BMS உகந்த செயல்திறனை உறுதி செய்கிறது. சரியான சஸ்பென்ஷன் திறனுக்காக முன், மற்றும் பின்பக்க பகுதிகள் ஓஹ்லின்களால் நிர்வகிக்கப்படுகிறது. அதே நேரத்தில் பிரேக்கிங் 320 மிமீ டிஸ்க் மூலம் முன் மற்றும் பின்புற பகுதிகளில் கையாளப்படுகிறது. சிறப்பாக உருவாக்கப்பட்ட டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஇ பைக்குகளில் தேர்வு செய்யப்பட்ட எட்டு ரைடர்கள் மட்டுமே போட்டியிடுவதால், இந்த ரேஸிங் நிகழ்வு மோட்டார் ஸ்போர்ட்ஸில் பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.