NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / சென்னையில் கட்டமைக்கப்படவிருக்கும் புதிய F4 ஸ்ட்ரீட் சர்க்யூட்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் கட்டமைக்கப்படவிருக்கும் புதிய F4 ஸ்ட்ரீட் சர்க்யூட்
    சென்னையில் கட்டமைக்கப்படவிருக்கும் புதிய F4 ஸ்ட்ரீட் சர்க்யூட்

    சென்னையில் கட்டமைக்கப்படவிருக்கும் புதிய F4 ஸ்ட்ரீட் சர்க்யூட்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Aug 17, 2023
    01:25 pm

    செய்தி முன்னோட்டம்

    F4 ஸ்ட்ரீட் ரேசிங் பந்தையங்களை நடத்து வகையில் புதிய ஸ்ட்ரீட் ரேசிங் சர்க்யூட் ஒன்றைப் பெறவிருக்கிறது சென்னை. ஆம், கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் ஏற்கனவே இரண்டு ரேசிங் ட்ராக்குகள் இருக்கும் நிலையில், சென்னையில் புதிய ரேசிங் ட்ராக் ஒன்றும் அமைக்கப்படவிருக்கிறது.

    சென்னையின் தீவுத்திடல் மற்றும் அதனைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் 3.5 கிமீ நீளத்தில் இந்தப் புதிய ஸ்ட்ரீட் சர்க்யூட்டானது அமைக்கப்படவிருக்கிறது.

    தீவுத்திடல், விக்டோரியா போர் நினைவகம் மற்றும் நேப்பியர் பாலம் வரை நீளும் இந்த ஸ்ட்ரீட் சர்க்யூட்டின் பிட் மற்றும் பேடாக் கட்டமைப்பானது தீவுத் திடலிலேயே கட்டமைக்கப்படவிருக்கிறது.

    இந்தத் திட்டம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை Racing Promotions Private Limited (RPPL) நிறுவனத்துடன் கையெழுத்திட்டிருக்கிறார் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

    சென்னை

    சென்னையின் புதிய ஸ்ட்ரீட் சர்க்யூட் ரேசிங் ட்ராக்: 

    இரவு நேர பந்தையங்களை நடத்தும் வகையில் இந்த புதிய ரேஸ் ட்ராக்கை வடிவமைக்கவிருக்கின்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அமைப்பு, இந்தத் திட்டத்தில் ரூ.42 கோடி முதலீடு செய்யவிருக்கும் நிலையில், RPPL நிறுவனம் சுமார் ரூ.200 கோடி முதலீடு செய்யவிருக்கிறது.

    ஹைதராபாத் ஸ்ட்ரீட் சர்க்யூட், நானோலி ஸ்பீடுவே மற்றும் யாஸ் மரீனா சர்க்யூட் ஆகியவற்றின் வடிவமைப்பில் ஈடுபட்ட ட்ரைவன் இன்டர்நேஷனலே, சென்னையின் புதிய ஸ்ட்ரீட் சர்க்யூட்டையும் வடிவமைக்கவிருக்கிறது.

    இந்த ஆண்டுத் தொடக்கத்தில் ஃபார்முலா E போட்டி நடைபெற்ற ஹைதராபாத் ஸ்ட்ரீட் சர்க்யூட்டின் கட்டமைப்புக்குப் பின்னணியிலும் RPPL நிறுவனமே இருக்கிறது.

    இரண்டு மாதங்களில் இந்த ட்ராக்கின் கட்டுமானத்தை முடித்து, வரும் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிதகளில் F4 இந்தியா பந்தையத்தை நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    ஃபார்முலா ஒன்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சென்னை

    வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டணம் இரட்டிப்பாக உயர்வு  சுற்றுலா
    தக்காளியின் விலை திடீர் சரிவு - வரத்து அதிகரிப்பு  தமிழ்நாடு
    சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு; குற்றவாளியை தேடும் போலீஸ் ரயில்கள்
    சர்ச்சையில் சிக்கிய சென்னையின் புகழ்பெற்ற பாகுபலி தாலி மீல்ஸ்! உணவு பிரியர்கள்

    ஃபார்முலா ஒன்

    ஃபார்முலா ஒன் : ரெட் புல் அணிக்கு 100வது வெற்றியை பெற்றுக் கொடுத்த மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் விளையாட்டு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025