NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ஏப்ரல் 22: இந்தியாவில் டெஸ்லாவின் தொழில் திட்டங்களை பற்றி அறிவிக்கிறார் எலான் மஸ்க்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஏப்ரல் 22: இந்தியாவில் டெஸ்லாவின் தொழில் திட்டங்களை பற்றி அறிவிக்கிறார் எலான் மஸ்க்
    பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் பின்னர் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும்

    ஏப்ரல் 22: இந்தியாவில் டெஸ்லாவின் தொழில் திட்டங்களை பற்றி அறிவிக்கிறார் எலான் மஸ்க்

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 17, 2024
    01:43 pm

    செய்தி முன்னோட்டம்

    டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், அந்நிறுவனம் இந்தியாவில் நுழைவதை பற்றிய திட்டங்கள் குறித்து, ஏப்ரல் 22 அன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் பின்னர் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்த அறிவிப்பு ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டு தளத்தைக் குறிப்பிடாமல், இந்திய சந்தைக்கான டெஸ்லாவின் திட்டங்களை விரிவுபடுத்தும் என்று அந்த அதிகாரி கூறினார்.

    மஸ்க் தனது இந்தியா வருகை பற்றியும், மோடியை சந்திப்பது குறித்தும் ஏற்கனவே, ஏப்ரல் 10 அன்று X-இல் உறுதிப்படுத்தியுள்ளார்.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவர்கள் இருவரும் நியூயார்க்கில் சந்தித்த பிறகு நடைபெறும் முதல் சந்திப்பு இதுவாகும்.

    வரி குறைப்பு 

    இந்திய அரசு மின் வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை குறைப்பு

    முன்னதாக, இந்தியாவில் தொழிற்சாலையை அமைப்பது குறித்து பரிசீலிக்கும் போது, ​​மின்சார வாகனங்கள் (EVகள்) மீதான இறக்குமதி வரிகளை குறைக்க, டெஸ்லா பல மாதங்களாக இந்திய அரசாங்கத்தை வற்புறுத்தி வந்தது.

    அதன் தொடர்ச்சியாக, இந்திய அரசாங்கம் சில மின்சார வாகன மாடல்களின் மீதான இறக்குமதி வரிகளை 100% முதல் 15% வரை குறைக்கும் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.

    இந்த வரிக் குறைப்பினால், டெஸ்லா குறைந்தபட்சம் $500 மில்லியன் முதலீடு செய்து இந்தியாவில் ஒரு தொழிற்சாலையை நிறுவவுள்ளது.

    இந்தியாவில் மலிவு விலையில் EV களுக்கான டெஸ்லாவின் உற்பத்தித் திட்டங்கள் டெஸ்லா, ₹20-25 லட்சம் விலையுள்ள மலிவு விலை EV-க்கான உற்பத்தித் தளமாக இந்தியாவைப் பயன்படுத்த மஸ்க் விரும்புவதாக பெயர் வெளியிடாத அதிகாரி தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெஸ்லா
    எலான் மஸ்க்
    பிரதமர்
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    டெஸ்லா

    உலக பணக்காரர்கள் பட்டியல்.. மீண்டும் முதலிடத்தைப் பிடித்த எலான் மஸ்க்! எலான் மஸ்க்
    டெஸ்லா நிறுவனத்தின் மீது தொடர்ந்து குவியும் 'இனப் பாகுபாடு' குற்றச்சாட்டுக்கள்! எலான் மஸ்க்
    இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை: கார்களின் ஆரம்ப விலை ரூ.20 லட்சம் இந்தியா
    இந்தியாவில் புதிய அலுவலகத்தை அமைக்கும் டெஸ்லா, இந்தியாவில் அதன் திட்டம் என்ன? எலான் மஸ்க்

    எலான் மஸ்க்

    புதிய மாற்றங்களைப் பெறும் எக்ஸ், என்ன செய்கிறார் எலான் மஸ்க்? எக்ஸ்
    எக்ஸில் பரவும் போலி தகவல்கள்.. எலான் மஸ்க்கை எச்சரித்த ஐபோப்பிய ஒன்றியம்! எக்ஸ்
    டெஸ்லா சூப்பர்சார்ஜர்கள் இஸ்ரேலில் இலவசம்.. எலான் மஸ்க் அறிவிப்பு! டெஸ்லா
    இனி எக்ஸ் தளத்தை பயன்படுத்த ஆண்டுக்கு 1 டாலர் கட்டணம்? எக்ஸ்

    பிரதமர்

    கேப்டன் விஜயகாந்த் மரணம்: முதல்வர் ஸ்டாலின் முதல் பிரதமர் மோடி வரை இரங்கல் விஜயகாந்த்
    கத்தாரில் 8 முன்னாள் இந்திய வீரர்களின் மரண தண்டனை சிறைத் தண்டனையாக குறைப்பு- தகவல் கத்தார்
    அயோத்தியில் புதிய விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்படுகிறது- தகவல் அயோத்தி
    பாகிஸ்தான்: பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்த காபந்து பிரதமர் பாகிஸ்தான்

    பிரதமர் மோடி

    மக்களவை வேட்பாளர்களை முடிவு செய்வதற்கு பிரதமர் மோடி தலைமையில் விடிய விடிய விவாதித்த பாஜக மக்களவை
    25 தனியார் துறை நிபுணர்களை முக்கிய பதவிகளில் சேர்க்க மோடி அரசு முடிவு  மத்திய அரசு
    தேர்தலுக்கு முன்னதாக பாஜக கட்சிக்கு ரூ.2,000 நன்கொடை வழங்கினார் பிரதமர் மோடி: இந்தியா
    பிரதமர் மோடி இன்று சென்னை வருகை; மாலை பொதுக்கூட்டத்தில் உரை சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025