Loading...
'ஒரு டாலரும் கிடைக்காது': ஈரானை முடக்க அமெரிக்கா வீசிய புதிய பொருளாதார அஸ்திரம்
ஈரானை முடக்க அமெரிக்கா வீசிய புதிய பொருளாதார அஸ்திரம்

'ஒரு டாலரும் கிடைக்காது': ஈரானை முடக்க அமெரிக்கா வீசிய புதிய பொருளாதார அஸ்திரம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 25, 2026
07:27 am

செய்தி முன்னோட்டம்

ஈரான் மீது ராணுவத் தாக்குதல்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கில் அமெரிக்கா புதிய மற்றும் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசண்ட் திங்கள்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில், ஈரானுடன் வணிகத் தொடர்பில் இருக்கும் அனைத்து நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் பொருளாதாரத்தை முற்றிலுமாக முடக்கும் வகையிலான 'ஆபரேஷன் எகனாமிக் அவுட்காஸ்ட்' திட்டத்தின் கீழ், பூஜ்ஜிய கசிவு என்ற கொள்கையை அமெரிக்கா கையில் எடுத்துள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் சொத்துக்கள், தொழில்நுட்பம், தங்கம், விமானப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து ஆகிய ஈரானின் மிக முக்கியமான ஐந்து வணிகத் துறைகள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

டாலர் அமைப்பு

டாலர் அமைப்பில் இருந்து நீக்கப்படும் எச்சரிக்கை

ஈரானுக்கு பணமோசடி செய்ய உதவும் அல்லது அந்நாட்டு வங்கிக் கிளைகளுக்கு இடம் அளிக்கும் சர்வதேச நிதி நிறுவனங்கள், அமெரிக்க டாலர் அமைப்பில் இருந்து முற்றிலுமாக நீக்கப்படும் என ஸ்காட் பெசண்ட் எச்சரித்துள்ளார்.

இதன் மூலம் ஈரானுடன் வர்த்தகம் தொடரும் நிறுவனங்கள் உலகளாவிய நிதி அமைப்பில் இருந்து துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த தடைகளால் ஈரானிய நாணயமான ரியால், ஒரு அமெரிக்க டாலருக்கு 2 மில்லியன் ரியால்கள் என்ற வரலாற்று அளவிலான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

சர்வதேச கடற்படை தடைகளால் எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு, அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள சூழலில், ஈரானின் பொருளாதார பிரச்சனை மேலும் தீவிரமடைந்துள்ளது.

தற்போதைய நிலை

ஈரானின் தற்போதைய நிலையும்

சீனா, ரஷ்யா, துருக்கி மற்றும் கத்தார் போன்ற முக்கிய நாடுகள் ஈரானுடன் வர்த்தக உறவைத் தொடர்வதால், இந்தத் தடைகளை நடைமுறைப்படுத்துவது அமெரிக்காவிற்குச் சவாலாகவே இருக்கும்.

இருப்பினும், ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் நாட்டிற்குள் நிலவும் பொருளாதார நெருக்கடிகளை ஒப்புக்கொண்டுள்ளதோடு, தற்போதைய நிலையில் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT