உலகிலேயே பலமான ராணுவம், ஆனால் பசியில் வாடும் வீரர்கள்: ஈரான் போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்க வீரர்களின் அவல நிலை
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மீதான கடல்சார் முற்றுகையை (Blockade) வலுப்படுத்த நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க கடற்படை வீரர்கள், கப்பல்களில் போதிய உணவின்றிப் பசியால் வாடி வருவதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக 'USA Today' நாளிதழ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த செய்தியில் ஈரான் போரில் ஈடுபட்டுள்ள USS Tripoli மற்றும் USS Abraham Lincoln போன்ற பிரம்மாண்டப் போர்க்கப்பல்களில் உள்ள வீரர்களின் குடும்பத்தினர், தங்கள் அன்புக்குரியவர்களின் நிலை குறித்துக் கண்ணீருடன் பேட்டியளித்துள்ளனர்.
பசி
பசியில் வாடும் வீரர்கள்: அதிர்ச்சிப் பின்னணி
கப்பல்களில் புதிய காய்கறிகள் மற்றும் பழங்கள் தீர்ந்துவிட்டதால், தற்போது இருக்கும் குறைந்தபட்ச உணவை வீரர்கள் ரேஷன் முறையில் (பகிர்ந்து) உண்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் கசிந்த புகைப்படங்களில், ஒரு சிறிய துண்டு இறைச்சி மற்றும் காய்ந்து போன ரொட்டி மட்டுமே வீரர்களுக்கு இரவு உணவாக வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. "உலகிலேயே வலிமையான ராணுவம் நம்முடையது. ஆனால் நம் வீரர்கள் பசியில் வாடுவது இதயத்தை உடைக்கிறது," என USS Tripoli கப்பலில் பணியாற்றும் ஒரு வீரரின் தந்தை கவலையுடன் தெரிவித்துள்ளார்.
தபால் சேவை
துண்டிக்கப்பட்ட தபால் சேவை
வீரர்கள் பசியால் வாடுவதை அறிந்த அவர்களது குடும்பத்தினர், அமெரிக்காவிலிருந்து பிஸ்கட், உலர் உணவுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை 'கேர் பேக்கேஜ்' மூலம் அனுப்பி வருகின்றனர். ஆனால், தற்போது அவை வீரர்களை சென்றடைய முடியாத சூழல் நிலவுகிறது அமெரிக்க தபால் துறை, பாதுகாப்பு காரணங்களுக்காக போர் நடைபெறும் பகுதிகளுக்கு செல்லும் தபால் சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஏற்கனவே அனுப்பப்பட்ட ஆயிரக்கணக்கான பார்சல்கள் ராணுவ மையங்களில் தேங்கியுள்ளன. போர் நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வந்து, வான்வெளிப் போக்குவரத்து சீரானால் மட்டுமே இவை வீரர்களுக்குக் கிடைக்கும் என ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு டெக்சாஸ் தாய், தனது மகனுக்காக சுமார் 2,000 டாலர்கள் (சுமார் ₹1.6 லட்சம்) செலவழித்து அனுப்பிய பார்சல்கள் இன்னும் அவரைச் சென்றடையவில்லை.
போர்நிறுத்தம்
போர் நிறுத்தம் இருந்தாலும் வீரர்களை சென்றடையாத கடிதங்கள்
தற்போது ஈரானுடன் இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்தம் அமலில் இருந்தாலும், கடல்சார் முற்றுகை மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் நீக்கப்படவில்லை. இதனால் போர்க்கப்பல்களுக்கு தேவையான புதிய உணவுப் பொருட்கள் மற்றும் வீரர்களுக்கான கடிதங்கள் செல்வதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. அமெரிக்க வரலாற்றில் புரட்சிப் போர் முதல் ஒவ்வொரு போரிலும் இத்தகைய தபால் மற்றும் உணவுத் தட்டுப்பாடுகள் ஒரு பகுதியாகவே இருந்துள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டாலும், நவீன காலத்தில் இத்தகைய சூழல் ஏற்படுவது அமெரிக்க ராணுவத்தின் நிர்வாகத் திறமை குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளது. ஈரான் போர் நீண்டுகொண்டே போனால், அது வீரர்களின் மனநலத்தையும் உடல்நலத்தையும் வெகுவாகப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Pictures published by USA Today show meals served recently to Sailors onboard the Nimitz-class aircraft carrier, USS Abraham Lincoln (CVN-72), as well as Marines serving on the USS Tripoli (LHA-7), an America-class amphibious assault ship, both of which are currently deployed to… pic.twitter.com/gZY2vvn9wq
— OSINTdefender (@sentdefender) April 16, 2026