LOADING...
ஈரான் வான்பரப்பில் அமெரிக்காவின் எப்-35 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தகவல்
அமெரிக்காவின் எப்-35 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தகவல்

ஈரான் வான்பரப்பில் அமெரிக்காவின் எப்-35 போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 03, 2026
02:01 pm

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவின் அதிநவீன எப்-35 (F-35) ரக ஸ்டீல்த் போர் விமானத்தை ஈரானிய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரானின் மெஹ்ர் செய்தி நிறுவனம் அதிரடித் தகவலை வெளியிட்டுள்ளது. ஈரானின் மத்திய வான்பரப்பில் பறந்து கொண்டிருந்த இந்த விமானம், ஈரானியப் புரட்சிகர காவல்படையின் (IRGC) நவீன வான் பாதுகாப்பு அமைப்பால் தாக்கப்பட்டதாகவும், இதில் விமானம் முற்றிலும் சிதைந்ததால் விமானி உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. அமெரிக்காவின் 'ஸ்டீல்த்' தொழில்நுட்ப ஆதிக்கத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாக இந்தச் சம்பவம் பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

எப்-35

எப்-35 வீழ்த்தப்பட்டதும் ஈரானின் உரிமைக்கோரலும்

ஈரானின் காதம் அல்-அன்பியா தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் அளித்த தகவலின்படி, அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானமான எப்-35, ஈரானிய ஏவுகணையால் தாக்கப்பட்டு நடுவானில் வெடித்துச் சிதறியது. இது தொடர்பான வீடியோ ஒன்றையும் ஐஆர்ஜிசி (IRGC) வெளியிட்டுள்ளது. ரேடார்களின் கண்களில் படாமல் தப்பிக்கும் திறன் கொண்ட இந்த ரகசிய விமானம், ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பால் கண்டுபிடிக்கப்பட்டுத் தாக்கப்பட்டிருப்பது, அமெரிக்க ராணுவ வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் இத்தகைய இரண்டாவது தாக்குதல் இதுவென ஈரான் தரப்பு கூறுகிறது.

Advertisement