
பாகிஸ்தானின் ஆபத்பாந்தவன் அமெரிக்கா இப்போது உதவ மறுப்பது ஏன்?
செய்தி முன்னோட்டம்
கடந்த கால முன்னுதாரணத்திலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் விலகி, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் அதிகரித்து வரும் இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்களில் தலையிட வேண்டாம் என்று அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
வழக்கமாக நெருக்கடி காலங்களில் பாகிஸ்தானின் ஆபத்பாந்தவனாக இருந்து வந்த வரலாற்றைக் கொண்ட அமெரிக்காவின் இந்த முடிவு பாகிஸ்தானை கதிகலங்கச் செய்துள்ளது.
அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தை அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
அவர் ஃபாக்ஸ் நியூஸிடம் இந்த மோதலில் எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்று கூறி, அமெரிக்காவின் தலையீட்டை உறுதியாக நிராகரித்தார்.
தலையீடுகள்
கடந்தகால தலையீடுகள்
வான்ஸின் கருத்துக்கள் தெற்காசியாவின் மோதல்களின் போது நெருக்கடி மத்தியஸ்தராக அமெரிக்காவின் முந்தைய பங்கிலிருந்து தெளிவான முறிவைக் குறிக்கின்றன.
1971 பங்களாதேஷ் விடுதலைப் போர், 1999 கார்கில் மோதல் மற்றும் 2001 நாடாளுமன்றத் தாக்குதல் மோதல் வரை அனைத்திலும், அமெரிக்கா சமரசம் பேசியுள்ளது.
வரலாற்று ரீதியாக, உலகளாவிய தலையீட்டை கட்டாயப்படுத்த தனது அணு ஆயுதத்தைக் காட்டுவது உட்பட, ராஜதந்திர ஆதரவிற்காக பாகிஸ்தான் அமெரிக்காவை பெரிதும் நம்பிய நிலையில், தற்போதைய சூழல் பாகிஸ்தானை முழுவதுவாக தனிமைப்படுத்தி உள்ளது.
சீனா, துருக்கி மற்றும் அஜர்பைஜான் போன்ற நட்பு நாடுகளின் ஆதரவு மட்டுமே தற்போதுஉள்ளது.
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற பாரம்பரிய கூட்டாளிகள் கூட நடுநிலை அல்லது இந்தியா சார்ந்த நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ளன.
இந்தியா
இந்தியாவிற்கு ஆதரவு
இதற்கிடையில், இந்தியாவின் வளர்ந்து வரும் ராணுவ உத்தி 2016 சர்ஜிக்கல் தாக்குதல்கள் மற்றும் 2019 பாலகோட் வான்வழித் தாக்குதல்களால் எடுத்துக்காட்டப்பட்ட தற்காப்பு நடவடிக்கையிலிருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு மாறுதல் மூலம் மிகவும் உறுதியான நிலைப்பாட்டை பிரதிபலிக்கிறது.
ஜி20 மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இராஜதந்திர விளக்கங்கள் இந்தியாவின் பயங்கரவாத எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு உலகளாவிய ஆதரவை வலுப்படுத்தியுள்ளன.
அமெரிக்கா நடுநிலையாக இருப்பதாலும், பாகிஸ்தானின் பொருளாதார மற்றும் அரசியல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாலும், பாகிஸ்தான் சாத்தியமான வெளிப்புற ஆதரவு இல்லாமல் இருக்கிறது.