NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக கைது வாரண்ட் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக கைது வாரண்ட் 
    கடந்த 5 மாதங்களில் டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்படும் நான்காவது குற்றச்சாட்டு இதுவாகும்.

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக கைது வாரண்ட் 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 15, 2023
    03:19 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது 18 கூட்டாளிகளுக்கு எதிராக திங்கள்கிழமை இரவு(உள்ளூர் நேரப்படி) கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

    அவர்கள் தானாக முன்வந்து சரணடைய வெள்ளிக்கிழமை மதியம் 12:00 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தோல்வியடைந்ததை மாற்றியமைக்க முயன்றது தொடர்பாக 13 குற்றசாட்டுகள் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சுமத்தப்பட்டது.

    இதற்கான விசாரணை இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது டிரம்புக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கடந்த 5 மாதங்களில் டொனால்ட் டிரம்ப் மீது சுமத்தப்படும் நான்காவது குற்றச்சாட்டு இதுவாகும்.

    இதற்கிடையில், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரத்திலும் அவர் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தஜிகிவெ

    டிரம்புக்கு எதிராக 97 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை

    டிரம்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 97 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் அவர் தேர்தல் மோசடி செய்ததாகவும், போலி ஆவணங்களை சமர்பித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    டிரம்ப் மற்றும் அவரது உதவியாளர்கள் ஜார்ஜியாவில் உள்ள ஒரு மாகாணத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து தரவுகளை திருடியதாக கூறப்படுகிறது.

    தேர்தலில் வெற்றி பெற, டிரம்ப் மற்றும் அவரது கூட்டாளிகள் ஜார்ஜியா குடியரசுக் கட்சியின் மாநிலச் செயலாளருக்கு அழுத்தம் கொடுத்து, வாக்காளர் மோசடி செய்ய முயன்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    வெள்ளை மாளிகையின் முன்னாள் தலைமை அதிகாரி மார்க் மெடோஸ் மற்றும் டிரம்பின் தனிப்பட்ட வழக்கறிஞர் ரூடி கியுலியானி ஆகியோரும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் அடங்குவர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    டொனால்ட் டிரம்ப்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    அமெரிக்கா

    அமெரிக்காவில் வெளியாகும் 'Project-K' படம் குறித்த அப்டேட்ஸ்  பிரபாஸ்
    வேற்றுகிரக விண்வெளிப் பொருட்களைக் கண்டறிந்த ஹார்வார்டு ஆராய்ச்சியாளர்கள் விண்வெளி
    ஏன் நொறுங்கியது டைட்டன் நீர்மூழ்கி? யூடியூபில் ட்ரெண்டாகும் விளக்கக் காணொளி உலகம்
    அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: அலாஸ்காவிற்கு சுனாமி எச்சரிக்கை  உலகம்

    டொனால்ட் டிரம்ப்

    ரகசிய ஆவணங்கள் குறித்த விசாரணை: டொனால்டு டிரம்ப் மீது 7 குற்றச்சாட்டுகள் உலகம்
    ரகசிய ஆவணங்கள் வழக்கு: இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிறார் டொனால்டு டிரம்ப்  அமெரிக்கா
    ரகசிய ஆவணங்கள் வழக்கு: நிபந்தனைகளுடன் டிரம்ப் விடுவிக்கப்பட்டார்   அமெரிக்கா
    2020 தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக டிரம்ப் மீது குற்றச்சாட்டு  அமெரிக்கா

    உலகம்

    கனடாவின் ஆல்பர்ட்டாவில் விமான விபத்து: 6 பேர் பலி  கனடா
    அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய-அமெரிக்கர்: யாரிந்த ஹிர்ஷ் வர்தன் சிங்? அமெரிக்கா
    பாகிஸ்தான் அரசியல் கூட்டத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்: 44 பேர் பலி பாகிஸ்தான்
    தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு 'இஸ்லாமிக் ஸ்டேட்'தான் காரணம்: பாகிஸ்தான் காவல்துறை  பாகிஸ்தான்

    உலக செய்திகள்

    பாகிஸ்தானில் உள்ள இந்து கோவில் மீது ராக்கெட் தாக்குதல் பாகிஸ்தான்
    அமெரிக்காவில் கனமழை: 2,600க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து அமெரிக்கா
    பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறதா? பாகிஸ்தான்
    உருகுவே கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 2,000 பெங்குயின்கள் உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025