NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று
    சீனாவில் இருந்து வந்தோருக்கு கொரோனா உறுதி

    சீனாவில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று

    எழுதியவர் Nivetha P
    Dec 28, 2022
    12:57 pm

    செய்தி முன்னோட்டம்

    சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் தற்போது மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.

    இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நேற்று காலை 9.40 மணியளவில் இலங்கையில் இருந்து மதுரைக்கு வந்த ஏர் லங்கா விமானத்தில் 70 பயணிகள் வந்தடைந்தனர்.

    இவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் சீனாவில் இருந்து இலங்கை வந்தடைந்து, மதுரைக்கு வந்த தாய்-மகள் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதனையடுத்து அவர்கள் தற்போது தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

    மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது

    கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடோருக்கு பிஎப் வைரஸ் பாதிப்பு குறித்து பரிசோதனை

    சீனாவில் இருந்து வந்து கொரோனா பாதிப்பிற்க்கு உள்ளாகிய பெண் பிரதிபா மற்றும் அவரது 6 வயது மகள் பிரித்தியங்கார ரிகா அவர்களது தாயகம் திரும்பியுள்ளனர்.

    பிரதிபாவின் கணவர் சுப்பிரமணியம் சீனாவில் பணி புரிந்து வந்துள்ளார், அவருடன் அவர் மனைவி பிரதிபா மற்றும் மகள் ரிகா வசித்து வந்துள்ளார்கள்.

    வேலை காரணமாக சுப்பிரமணியம் ஜெர்மனி சென்றதால் இவர்கள் இருவரும் தமிழகம் திரும்பியுள்ளதாக விசாரித்ததில் தெரியவந்துள்ளது.

    தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரையும் சுகாதார துறை தொடர்ந்து கண்காணித்து வரும் நிலையில், இவர்களுக்கு புது உருமாறிய பிஎப்7 வைரஸ் இருக்கிறதா என்பதை கண்டறிய தாய்-மகள் இருவரின் மாதிரிகளும் எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து, மதுரை நிலையம் முழுவதும் கொரோனா பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கொரோனா
    தொற்று
    கோவிட்
    வைரஸ்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    கொரோனா

    கொரோனா எப்படி பரவியது? உலக சுகாதார அமைப்புக்கு பதிலளிக்குமா சீனா? கோவிட்
    பிரதமர் மோடியை சந்தித்த இமாச்சல் முதல்வருக்கு கொரோனா! இந்தியா
    மீண்டும் கொரோனாவா? எச்சரிக்கும் மத்திய அரசு! இந்தியா
    இந்தியாவிற்குள் வந்த சீனாவில் பரவும் BF.7 கொரோனா! இந்தியா

    தொற்று

    பகலில் தூங்கினால் என்ன ஆகும் தெரியுமா? உடல் நலம்

    கோவிட்

    கொதித்தெழும் சீனா: போராட்டங்களுக்கு காரணம் என்ன? உலகம்
    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! இலங்கை
    10 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படலாம்: சீனாவுக்கு எச்சரிக்கை! சீனா
    சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா-60% பேர் அடுத்த 3 மாதங்களில் பாதிக்கப்படும் அபாயம் உலக செய்திகள்

    வைரஸ்

    'மெட்ராஸ் - ஐ' பருவகாலங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடதாவை உடல் நலம்
    கர்நாடகாவில் பரவும் ஜிகா வைரஸ் - 5 வயது சிறுமிக்கு தொற்று உறுதி இந்தியா
    மகாராஷ்டிராவில் தட்டம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்த போதுமான அளவு தடுப்பூசிகள் வேண்டும் - எம்.பி. வேண்டுகோள் இந்தியா
    இந்தியாவுக்குள் நுழைந்த புதிய வகை 'பிஎப்7' கொரோனா-3 பேருக்கு தொற்று உறுதி கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025