NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 8 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 8 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள்
    20,000 பேர் வரை இறந்திருக்கலாம் என WHO அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

    துருக்கி-சிரியா நிலநடுக்கம்: 8 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 08, 2023
    11:30 am

    செய்தி முன்னோட்டம்

    துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள் அன்று(பிப் 6) ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் கிட்டத்தட்ட 8400 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் தரைமட்டமாகியது.

    இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளவர்களை மீட்டெடுக்க மீட்பு படையினர் போராடி வருகின்றனர்.

    7.8 ரிக்டர் அளவிலான முதல் நிலநடுக்கத்தை அடுத்து 100க்கும் மேற்பட்ட அதிர்வுகள் உணரப்பட்டது. இதில், பல்வேறு பெரும் நிலநடுக்கங்களும் அடங்கும்.

    சிரியாவில் மீட்பு பணியின் போது பிறந்த குழந்தை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது மக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

    குழந்தைக்கு தொப்புள் கொடியை அறுக்கும் முன்பே நிலநடுக்கம் ஏற்பட்டதால், அந்த குழந்தை தாயுடன் தொப்புள் கொடியால் பிணைந்து இருக்கும் நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

    அந்த குழந்தையின் பெற்றோர்கள் உயிரிழந்துவிட்டனர். அதன் குடும்பத்தில் அந்த குழந்தை மட்டுமே உயிர் பிழைத்துள்ளது.

    சிரியா

    20,000 பேர் வரை உயிரிழந்திருக்கலாம்: உலக சுகாதார அமைப்பு

    சிரியாவில் 2400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அரசாங்கமும் மீட்புப் படையினரும் தெரிவித்துள்ளனர்.

    துருக்கியின் புதிய உயிரிழப்பு எண்ணிக்கை 5,894ஆக அதிகரித்துள்ளது. எனவே, இரு நாடுகளிலும் ஏற்பட்ட மொத்த உயிரிழப்புகள் 8400ஐ எட்டியுள்ளது.

    20,000 பேர் வரை இறந்திருக்கலாம் என WHO அதிகாரிகள் மதிப்பிட்டுள்ள நிலையில், பலி எண்ணிக்கை தவிர்க்க முடியாமல் உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    இந்த நிலநடுக்கத்தால் 23 மில்லியன் மக்கள் பாதிக்கப் பட்டிருக்காலம் என்று WHO எச்சரித்ததிருக்கிறது. அதனால், பேரழிவு நடந்த துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவி செய்ய உலக நாடுகள் விரைந்து செயல்பட வேண்டும் என்று WHO வலியுறுத்தி உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலக செய்திகள்
    உலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025

    உலக செய்திகள்

    கல்வி சான்றிதழ்களைக் கிழித்தெரிந்த ஆப்கான் பேராசிரியர்! உலகம்
    ஸ்பெஷல் பரிசு ஒன்றை தோனி மகளுக்கு அனுப்பிய கால்பந்து விளையாட்டு வீரர் மெஸ்ஸி-வைரலாகும் புகைப்படம் வைரல் செய்தி
    'இனி குழந்தைகள் வேண்டாம்' - 102 குழந்தைகளின் தந்தை முடிவு உலகம்
    நாயாக மாற 12.18 லட்சம் செலவு செய்த ஜப்பானியர் - நடந்தது என்ன? வைரல் செய்தி

    உலகம்

    கிசா பிரமிடுகளுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட 4,300 ஆண்டுகள் பழமையான மம்மி உலக செய்திகள்
    சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9ஆக பதிவு உலக செய்திகள்
    ஜி-20 கருத்தரங்கம் நாளை சென்னையில் துவக்கம் சென்னை
    பாகிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு: 25 பேர் பலி; 120 பேர் படுகாயம் பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025