LOADING...
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் தண்டனை: இந்தியா மீது 500% வரி விதிக்க ட்ரம்ப் ஒப்புதல்
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் அமெரிக்காவின் நேரடி வரி பாதிப்பிற்கு ஆளாக நேரிடும்

ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் தண்டனை: இந்தியா மீது 500% வரி விதிக்க ட்ரம்ப் ஒப்புதல்

எழுதியவர் Venkatalakshmi V
Jan 08, 2026
08:28 am

செய்தி முன்னோட்டம்

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை தண்டிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மசோதாவிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ஒப்புதலை வழங்கியுள்ளார். இதனால் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் அமெரிக்காவின் நேரடி வரி பாதிப்பிற்கு ஆளாக நேரிடும் என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தியா மற்றும் சீனா மீதான அமெரிக்க வரிகள் அடுத்த வார தொடக்கத்தில் 500 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும். குடியரசு கட்சியின் மூத்த செனட்டர் லிண்ட்சே கிரஹாம் மற்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையே நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, இந்தத் வரி விதிப்புகளுக்கான மசோதாவிற்கு அதிபர் பச்சைக்கொடி காட்டியுள்ளார். இது குறித்து கிரஹாம் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

வரி

ஏற்கனவே இந்தியா, சீனா அதிக வரிகளை எதிர்கொள்கிறது

கடந்த ஆண்டு, டிரம்ப் தனது வரி பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினார். இந்திய இறக்குமதிகளுக்கு 25 சதவீத பரஸ்பர வரியையும், ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு கூடுதலாக 25 சதவீத அபராதத்தையும் விதித்தார். இது சில பொருட்களின் மீதான மொத்த வரிகளை 50 சதவீதமாக உயர்த்தியது. இந்த நடவடிக்கை இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவுகளை கடுமையாக பாதித்தது. வர்த்தக பேச்சுவார்த்தையில் தொய்வை ஏற்படுத்தியது. மறுபுறம், தொடர்ச்சியான வரிகள் அதிகரித்த பிறகு சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகளும் மோசமடைந்தன. சீன பொருட்களுக்கு அமெரிக்கா, 145 சதவீத வரியை விதித்தது, அதே நேரத்தில் சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு 125 சதவீத வரி விதித்து பதிலடி கொடுத்தது.

Advertisement