LOADING...
ஈரான் 'பி1' பாலம் மீது தாக்குதல்: காலம் கடக்கும் முன் ஒப்பந்தம் செய்யுங்கள் என டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
ஈரான் 'பி1' பாலம் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈரான் 'பி1' பாலம் மீது தாக்குதல்: காலம் கடக்கும் முன் ஒப்பந்தம் செய்யுங்கள் என டொனால்ட் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை

எழுதியவர் Venkatalakshmi V
Apr 03, 2026
09:39 am

செய்தி முன்னோட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் மேலும் கருக்கட்டியுள்ள சூழலில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானையும், மேற்கத்திய நகரமான கராஜையும் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைப் பாலமான 'பி1' (B1 Bridge) மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், "காலம் கடந்து போவதற்கு முன்பாக ஈரான் ஒரு உடன்படிக்கைக்கு வர வேண்டும்" என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு காலத்தில் சிறந்த நாடாக திகழ வேண்டிய ஈரானில் இனிமேல் எஞ்சியிருக்கப்போவது எதுவுமில்லை என்ற தொனியில் அவர் பதிவிட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

பி1 பாலம் தகர்ப்பு

பி1 பாலம் தகர்ப்பும் ட்ரம்ப்பின் அதிகாரப்பூர்வமற்ற உறுதிப்படுத்தலும்

வியாழக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், பாலம் தீப்பிழம்புகளுடன் வெடித்துச் சிதறுவதும், அடர்ந்த புகை மூட்டமும் எழுவது போன்ற காட்சிகள் ட்ரம்ப் பகிர்ந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. இந்தத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக ஃபார்ஸ் நியூஸ் (Fars News) தெரிவித்துள்ளது. இதுவரை எந்த நாடும் அதிகாரப்பூர்வமாக இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்காத நிலையில், இது அமெரிக்காவின் தாக்குதல் என்று 'தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் இந்தத் தாக்குதல் குறித்துத் தங்களுக்குத் தெரியாது என்று தெரிவித்துள்ள நிலையில், ட்ரம்ப்பின் இந்தப் பதிவு அமெரிக்காவே இதனை நடத்தியிருக்கலாம் என்ற ஊகத்தை உறுதிப்படுத்துகிறது.

Advertisement