LOADING...
இலங்கை அருகே ஈரான் கப்பல் மீது தாக்குதல்: 101 பேர் மாயம், 32 பேர் மீட்பு
இலங்கை அருகே ஈரான் கப்பல் மீது தாக்குதல்

இலங்கை அருகே ஈரான் கப்பல் மீது தாக்குதல்: 101 பேர் மாயம், 32 பேர் மீட்பு

எழுதியவர் Venkatalakshmi V
Mar 04, 2026
04:06 pm

செய்தி முன்னோட்டம்

இலங்கை கடற்பரப்புக்கு மிக அருகாமையில் ஈரான் நாட்டின் போர்க்கப்பல் மீது நடத்தப்பட்ட நீர்மூழ்கித் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல் மத்திய கிழக்கு போர் பதற்றத்தை இந்திய பெருங்கடல் பகுதிக்கும் விரிவுபடுத்தியுள்ளது. ஈரான் கடற்படைக்குச் சொந்தமான 'IRIS Dena' என்ற போர்க்கப்பல், புதன்கிழமை அன்று இலங்கையின் தெற்குப் பகுதியான காலி கடற்பரப்பிற்கு வெளியே சர்வதேச கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு உள்ளானது. இந்தத் தாக்குதலில் கப்பல் மூழ்கியதாக தெரிகிறது. இதுவரை 32 மாலுமிகளை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் பலத்த காயங்களுடன் காலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிப்பு

உயிரிழப்பு மற்றும் பாதிப்பு

இலங்கை கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்களின்படி, இந்த சம்பவத்தில் குறைந்தது 101 பேர் மாயமாகியுள்ளனர் மற்றும் 78 பேர் காயமடைந்துள்ளனர். ஈரான் கப்பலில் இருந்து வந்த அவசர அழைப்பை அடுத்து இலங்கை கடற்படை விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டது. இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சர்வதேச விதிமுறைகளின்படி இலங்கை அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் தெரிவித்தார். இருப்பினும், இந்த நீர்மூழ்கித் தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Advertisement