
பிரான்சில் உயர்நிலைப் பள்ளியில் மாணவருக்கு கத்திக்குத்து: ஒருவர் கொலை, மூவர் படுகாயம்
செய்தி முன்னோட்டம்
பிரான்சில் உயர்நிலைப் பள்ளி மாணவர் ஒருவர் நான்கு மாணவர்களைக் கத்தியால் குத்தியதில், குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டார் எனவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
கத்தியால் குத்திய நபர் பின்னர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். எனினும் தாக்குதலுக்கான சூழ்நிலைகள் உடனடியாகத் தெரியவில்லை.
வியாழக்கிழமை தாக்குதல் பிரான்சின் அட்லாண்டிக் கடற்கரையில் நான்டெஸுக்கு அருகிலுள்ள டூலோனில் உள்ள தனியார் நோட்ரே-டேம்-டி-டவுட்ஸ்-எய்ட்ஸ் பள்ளியில் நடந்ததாக தேசிய காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விசாரணை
மாணவரை சுற்றிவளைத்து பிடித்த ஆசிரியர்கள்
சக மாணவர்களை தாக்கிய மாணவனை ஆசிரியர்கள் மடக்கி பிடித்துள்ளனர். பின்னர் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்று விசாரணை அதிகாரி கூறினார்.
தாக்குதலில் ஈடுபட்ட 15 வயது மாணவர், போலீசார் வருவதற்கு முன்பே ஆசிரியர்களால் தாக்கப்பட்டார் என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பயங்கரவாத நோக்கம் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஒப்பீட்டளவில் பிரான்சில் இது போன்ற தாக்குதல் சம்பவங்கள் அரிதாக கருதப்படுகின்றன. குறிப்பாக பள்ளி மாணவர்கள் இடையே. அதனால் இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.