NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 1000 நாய்களை பட்டினி போட்டு கொன்ற தென் கொரிய ஆசாமி
    1000 நாய்களை பட்டினி போட்டு கொன்ற தென் கொரிய ஆசாமி
    1/2
    உலகம் 0 நிமிட வாசிப்பு

    1000 நாய்களை பட்டினி போட்டு கொன்ற தென் கொரிய ஆசாமி

    எழுதியவர் Sindhuja SM
    Mar 09, 2023
    10:40 am
    1000 நாய்களை பட்டினி போட்டு கொன்ற தென் கொரிய ஆசாமி
    இறந்த நாய்கள் இந்த வாரம் அகற்றப்படும் என்று யாங்பியோங்கில் உள்ள உள்ளூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    தென் கொரிய நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள ஒருவரது வீட்டில் 1000 நாய்கள் இறந்து கிடந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. தென் கொரியாவை சேர்ந்த 60 வயது நபர் ஒருவர் இந்த நாய்களை பட்டினி போட்டு கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. "கைவிடப்பட்ட நாய்களை அழைத்து சென்று அவைகளை இறக்கும் வரை பட்டினி போட்டதாக" குற்றம் சாட்டப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார் என்று தென்கொரிய காவல்துறை தெரிவித்துள்ளது. ஆனால், இனப்பெருக்க வயதைக் கடந்த நாய்கள் பணம் கொடுத்து கொல்லப்பட்டதாக விலங்கு உரிமை ஆர்வலர்கள் கூறி இருக்கின்றனர். மேலும், நாய்களை "உற்பத்தி" செய்து விற்கும் உரிமையாளர்கள் தான் இந்த காரியத்தை செய்ய சொல்லி இருக்க வேண்டும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    2/2

    சித்திரவதையில் இருந்து தப்பி சிகிச்சை பெற்று வரும் நாய்கள்

    2020ஆம் ஆண்டு முதல், நாய் ஒன்றை "கவனித்து கொளவதற்கு" அவருக்கு 10,000 வோன்(620 ரூபாய்) வழங்கப்பட்டதாக விலங்கு உரிமை ஆர்வலர்கள் கூறியுள்ளனர். தென் கொரியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட ஜியோங்கி மாகாணத்தில் உள்ள யாங்பியோங்கில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. தன் தொலைந்த நாயை தேடி கொண்டிருந்த ஒரு நபர் இதை கண்டறிந்து காவல்துறையில் புகாரளித்துள்ளார். நாய்களின் சிதைந்த சடலங்கள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருந்தன என்றும், பட்டினியால் வாடிய நாய்கள் கூண்டு, சாக்கு, ரப்பர் பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன என்றும் செய்திகள் கூறுகின்றன. இறந்த நாய்கள் இந்த வாரம் அகற்றப்படும் என்று யாங்பியோங்கில் உள்ள உள்ளூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது. நான்கு நாய்கள் மட்டும் இந்த சித்திரவதையான சூழ்நிலையில் இருந்து தப்பித்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தென் கொரியா
    உலக செய்திகள்
    உலகம்

    தென் கொரியா

    தம்பதியருக்கான மருத்துவ காப்பீடு ஒரே-பாலின தம்பதியருக்கும் வழங்கப்பட வேண்டும் உலகம்
    மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    ஜப்பானிற்குள் இறங்கிய வட கொரியாவின் ஏவுகணை: என்ன நடக்கிறது வட கொரியா
    ராணுவ நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்த வடகொரிய அதிபர் வட கொரியா

    உலக செய்திகள்

    வாழ்வாதாரம் வேண்டி நிற்கும் காடுகள் சுற்றுச்சூழல்
    அலெஸ் பியாலியாட்ஸ்கி: நோபல் பரிசு பெற்ற ஆர்வலருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை உலகம்
    நித்யானந்தாவை இந்தியா தொடர்ந்து துன்புறுத்துகிறார் - ஐநா.,வில் கைலாசா பிரதிநிதி புகார் ஐநா சபை
    பிரதமர் மோடியுடன் பயணம் மேற்கொண்டதை நினைவுகூரும் பியர் கிரில்ஸ் பிரதமர் மோடி

    உலகம்

    பெண்களின் கதைகளை டாட்டூவாக வரையும் சீன கலைஞர் சீனா
    பசிபிக் பெருங்கடல் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு சொந்தமல்ல: வட கொரியா வட கொரியா
    திடீரென தலைவரையே பணிநீக்கம் செய்த ஜூம் நிறுவனம்! காரணம் என்ன? தொழில்நுட்பம்
    ஈரான் விஷவாயு பிரச்சனை: மன்னிக்க முடியாத குற்றம் என்கிறார் ஈரான் தலைவர் ஈரான்
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023