NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 1000 நாய்களை பட்டினி போட்டு கொன்ற தென் கொரிய ஆசாமி
    அடுத்த செய்திக் கட்டுரை
    1000 நாய்களை பட்டினி போட்டு கொன்ற தென் கொரிய ஆசாமி
    இறந்த நாய்கள் இந்த வாரம் அகற்றப்படும் என்று யாங்பியோங்கில் உள்ள உள்ளூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    1000 நாய்களை பட்டினி போட்டு கொன்ற தென் கொரிய ஆசாமி

    எழுதியவர் Sindhuja SM
    Mar 09, 2023
    10:40 am

    செய்தி முன்னோட்டம்

    தென் கொரிய நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள ஒருவரது வீட்டில் 1000 நாய்கள் இறந்து கிடந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

    தென் கொரியாவை சேர்ந்த 60 வயது நபர் ஒருவர் இந்த நாய்களை பட்டினி போட்டு கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    "கைவிடப்பட்ட நாய்களை அழைத்து சென்று அவைகளை இறக்கும் வரை பட்டினி போட்டதாக" குற்றம் சாட்டப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார் என்று தென்கொரிய காவல்துறை தெரிவித்துள்ளது.

    ஆனால், இனப்பெருக்க வயதைக் கடந்த நாய்கள் பணம் கொடுத்து கொல்லப்பட்டதாக விலங்கு உரிமை ஆர்வலர்கள் கூறி இருக்கின்றனர்.

    மேலும், நாய்களை "உற்பத்தி" செய்து விற்கும் உரிமையாளர்கள் தான் இந்த காரியத்தை செய்ய சொல்லி இருக்க வேண்டும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    தென் கொரியா

    சித்திரவதையில் இருந்து தப்பி சிகிச்சை பெற்று வரும் நாய்கள்

    2020ஆம் ஆண்டு முதல், நாய் ஒன்றை "கவனித்து கொளவதற்கு" அவருக்கு 10,000 வோன்(620 ரூபாய்) வழங்கப்பட்டதாக விலங்கு உரிமை ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

    தென் கொரியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட ஜியோங்கி மாகாணத்தில் உள்ள யாங்பியோங்கில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

    தன் தொலைந்த நாயை தேடி கொண்டிருந்த ஒரு நபர் இதை கண்டறிந்து காவல்துறையில் புகாரளித்துள்ளார்.

    நாய்களின் சிதைந்த சடலங்கள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருந்தன என்றும், பட்டினியால் வாடிய நாய்கள் கூண்டு, சாக்கு, ரப்பர் பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன என்றும் செய்திகள் கூறுகின்றன.

    இறந்த நாய்கள் இந்த வாரம் அகற்றப்படும் என்று யாங்பியோங்கில் உள்ள உள்ளூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    நான்கு நாய்கள் மட்டும் இந்த சித்திரவதையான சூழ்நிலையில் இருந்து தப்பித்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தென் கொரியா
    உலக செய்திகள்
    உலகம்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    தென் கொரியா

    ராணுவ நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்த வடகொரிய அதிபர் வட கொரியா
    ஜப்பானிற்குள் இறங்கிய வட கொரியாவின் ஏவுகணை: என்ன நடக்கிறது வட கொரியா
    மீண்டும் ஒரு ஏவுகணையை ஏவிய வடகொரியா வட கொரியா
    தம்பதியருக்கான மருத்துவ காப்பீடு ஒரே-பாலின தம்பதியருக்கும் வழங்கப்பட வேண்டும் உலகம்

    உலக செய்திகள்

    கிசா பிரமிடுகளுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட 4,300 ஆண்டுகள் பழமையான மம்மி உலகம்
    சீனாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9ஆக பதிவு சீனா
    ஜி-20 கருத்தரங்கம் நாளை சென்னையில் துவக்கம் சென்னை
    பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: இந்தியா கடும் கண்டனம் பாகிஸ்தான்

    உலகம்

    ரஷ்ய அதிபர் பேசி கொண்டிருக்கும் போது காதில் நூடுல்ஸை தொங்கவிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஷ்யா
    பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் சீனா: உள்குத்து இருக்குமோ என்று கவலைப்படும் அமெரிக்கா இந்தியா
    சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிக பழமையான ஃப்ளஷ் டாய்லெட் சீனா
    கேமரூனில் ஓட்டப்பபந்தயத்தில் குண்டுவெடிப்பு : 19 வீரர்கள் படுகாயம்! விளையாட்டு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025