NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காணாமல் போய் 73 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குடும்பத்துடன் இணைந்த நபர்; கண்டுபிடிப்பிற்கு உதவிய டிஎன்ஏ சோதனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    காணாமல் போய் 73 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குடும்பத்துடன் இணைந்த நபர்; கண்டுபிடிப்பிற்கு உதவிய டிஎன்ஏ சோதனை
    காணாமல் போய் 73 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குடும்பத்துடன் இணைந்த நபர்

    காணாமல் போய் 73 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குடும்பத்துடன் இணைந்த நபர்; கண்டுபிடிப்பிற்கு உதவிய டிஎன்ஏ சோதனை

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 23, 2024
    02:58 pm

    செய்தி முன்னோட்டம்

    லூயிஸ் அர்மாண்டோ அல்பினோ 1951இல் அமெரிக்காவின் கலிபோர்னியாவின் ஓக்லாண்ட் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டார். அப்போது அவருக்கு 6 வயது.

    இந்த சம்பவம் நடந்து 73 ஆண்டுகள் ஆன நிலையில், ஆன்லைன் வம்சாவளி சோதனை, பழைய புகைப்படங்கள் மற்றும் செய்தித்தாள்களில் அப்போது வெளியான செய்திகளின் மூலம் மீண்டும் தனது குடும்பத்தை கண்டுபிடித்துள்ளார்.

    ஓக்லாந்தில் உள்ள அல்பினோவின் மூத்த சகோதரரின் மகள் போலீஸ், எஃப்பிஐ மற்றும் நீதித்துறை ஆகியவற்றின் உதவியுடன் கிழக்கு கடற்கரையில் வசிக்கும் சித்தப்பாவை கண்டுபிடித்துள்ளார்.

    அல்பினோ ஒரு ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர் மற்றும் வியட்நாமில் பணியாற்றிய மரைன் கார்ப்ஸிலும் இருந்துள்ளார் என்று அவரது அண்ணன் மகளான 63 வயதான அலிடா அலெக்வின் கூறியுள்ளார்.

    கடத்தல்

    ஆறு வயதில் கடத்தப்பட்ட சிறுவன்

    பிப்ரவரி 21, 1951 அன்று, ஒரு பெண் 6 வயது அல்பினோவை வெஸ்ட் ஓக்லாண்ட் பூங்காவில் இருந்து தனது மூத்த சகோதரனுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​அவருக்கு மிட்டாய் வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.

    ஆனால், ஏமாற்றி அல்பினோவை கடத்தி கிழக்குக் கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு அல்பினோவை ஒரு தம்பதியினர் கண்டெடுத்து தங்கள் சொந்த மகனாக வளர்த்துள்ளனர்.

    இதற்கிடையே, காணாமல் போய் 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், அல்பினோவின் சிறுவயது புகைப்படங்கள் இன்னும் அவரது உறவினர் வீடுகளில் இருந்துள்ளன.

    மேலும், அவரது தாயார் 2005இல் இறக்கும் வரையிலும் தனது மகன் உயிரோடுதான் உள்ளார் என்ற நம்பிக்கையை கைவிடாமலேயே இருந்தார்.

    கண்டுபிடிப்பு

    அல்பினோவைக் கண்டுபிடித்தது எப்படி?

    தனது சித்தப்பா இன்னும் உயிருடன் இருக்கக்கூடும் என்பதை 2020இல் வெறும் வேடிக்கைக்காக அலெக்வின் கூறியுள்ளார்.

    மேலும், இதன் அடிப்படையில் அவர் ஆன்லைனில் டிஎன்ஏ பரிசோதனையையும் மேற்கொண்டுள்ளார். யாரும் எதிர்பாராத வகையில், இது ஒரு நபருடன் 22 சதவீத பொருத்தத்தைக் காட்டியது.

    இதனால் ஆச்சரியமடைந்த குடும்பத்தினர் அந்த நபரை தேட முயற்சித்தும் அப்போது கண்டறிய முடியவில்லை.

    இதைத் தொடர்ந்து 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அலெக்வினும் அவருடைய மகள்களும் மீண்டும் தேட ஆரம்பித்தனர்.

    இதைத் தொடர்ந்து போலீஸ் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளுடன் இணைந்து லூயிஸ் அர்மாண்டோவை கண்டுபிடித்தனர்.

    தான் காணாமல் போய் 70 ஆண்டுகளுக்கு பிறகு தனது குடும்பத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்து அவர் மிகவும் நெகிழ்ச்சியடைந்து விட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    அமெரிக்கா

    இந்தியாவுக்கான $52.8 மில்லியன் மதிப்புள்ள நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கருவி விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல் இந்தியா
    குற்றங்களை எதிர்த்துப் போராட அட்லாண்டாவில் தன்னாட்சி கண்காணிப்பு ரோபோ  ரோபோ
    தொழில் முதலீடுகளை ஈர்க்க இன்று அமெரிக்காவிற்கு பறக்கும் முதல்வர் ஸ்டாலின்; யாரையெல்லாம் சந்திக்கிறார்? மு.க ஸ்டாலின்
    டொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட்டவர் நோக்கம் இன்னும் தெளிவாக இல்லை: FBI  டொனால்ட் டிரம்ப்

    உலகம்

    உலகளாவிய IT செயலிழப்பு: $500M இழப்புக்கு CrowdStrike, மைக்ரோசாப்ட் காரணம் என டெல்டா குற்றச்சாட்டு மைக்ரோசாஃப்ட்
    பனிப்போருக்கு பிந்தைய மிகப்பெரிய கைதி பரிமாற்றம்; ரஷ்ய உளவாளிகளின் சுவாரஸ்ய பின்னணி ரஷ்யா
    கணினி செயலிழப்பிற்கு நாங்கள் காரணமல்ல; குற்றச்சாட்டிற்கு கிரவுட்ஸ்ட்ரைக் மறுப்பு தொழில்நுட்பம்
    உலகளாவிய கணினி செயலிழப்பிற்கான காரணத்தை வெளியிட்டது கிரவுட்ஸ்ட்ரைக் தொழில்நுட்பம்

    உலக செய்திகள்

    உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் கருவியாக மெட்டா AI மாறும்: மார்க் ஸூக்கர்பெர்க் மெட்டா
    வண்ணங்கள் நிறைந்த வானம்: நியூ மெக்சிகோவின் அல்புகெர்கியின் ஹாட் ஏர் பலூன் விழா சுற்றுலா
    மொராக்கோவின் கம்பீரமான சஹாரா பாலைவன ஒட்டக மலையேற்றம், போலாமா ஒரு ரைடு! மொராக்கோ
    பெண்களுக்கான திருமண வயதை 9 ஆகக் குறைக்கும் சட்டத்தை முன்மொழியவுள்ள ஈராக் ஈராக்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025