NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு முதல்முறையாக ஒரு பெண்ணை தூக்கிலிட தயாராகும் சிங்கப்பூர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு முதல்முறையாக ஒரு பெண்ணை தூக்கிலிட தயாராகும் சிங்கப்பூர்
    ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெண்ணை சிங்கப்பூர் அரசாங்கம் தூக்கிலிட இருக்கிறது.

    இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு முதல்முறையாக ஒரு பெண்ணை தூக்கிலிட தயாராகும் சிங்கப்பூர்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 25, 2023
    06:30 pm

    செய்தி முன்னோட்டம்

    சிங்கப்பூர் இந்த வாரம் ஒரு பெண் உட்பட இரண்டு போதைப்பொருள் குற்றவாளிகளை தூக்கிலிட உள்ளது.

    ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெண்ணை சிங்கப்பூர் அரசாங்கம் தூக்கிலிட இருக்கிறது.

    இதற்கு சமூக ஆர்வலர்களும், உரிமைக் குழுக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    சாரிதேவி ஜமானி(45) என்ற பெண் குற்றவாளியை வரும் வெள்ளிக்கிழமை தூக்கிலிட சிங்கப்பூர் திட்டமிட்டுள்ளது.

    சுமார் 30 கிராம் ஹெராயின் கடத்தியதற்காக 2018இல் சாரிதேவி ஜமானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் 20 ஆண்டுகளுக்கு பிறகு தூக்கிலிடப்படும் முதல் பெண்ணாக அவர் இருப்பார்

    ஓக்

    தூக்கிலிடப்பட இருக்கும் இரண்டு கைதிகளும் சிங்கப்பூர்காரர்கள் தான் 

    இதற்கு முன்னதாக, 2004ஆம் ஆண்டில், சிகையலங்கார நிபுணரான யென் மே வொன்(36) போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக தூக்கிலிடப்பட்டார்.

    இந்த வாரம், தூக்கிலிடப்பட இருக்கும் இரண்டு கைதிகளும் சிங்கப்பூர்காரர்கள் என்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் தேதி குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்றும் உள்ளூர் உரிமைகள் அமைப்பான டிரான்ஸ்ஃபார்மேட்டிவ் ஜஸ்டிஸ் கலெக்டிவ்(TJC) தெரிவித்துள்ளது.

    சாரிதேவிக்கு வரும் வெள்ளிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், இந்த வாரம் இன்னொரு நபரும் தூக்கிலிடப்பட உள்ளார்.

    50 கிராம்(1.76 அவுன்ஸ்) ஹெராயின் கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட 56 வயது நபரை, தென்கிழக்கு ஆசிய நகர-மாநிலத்தின் சாங்கி சிறைச்சாலையில் வரும் புதன்கிழமை தூக்கிலிட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் என்று TJC தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிங்கப்பூர்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    தலை முடியை விரித்து போட்டு ஆடினால் தான் மரியாதையாம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸில் டிரம்பை வரவேற்க பெண்கள் Al-Ayyala நடனம்! ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
    ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு மத்திய பாதுகாப்பு பட்ஜெட் அதிகரிப்பு: ரூ.50,000 கோடி ஒதுக்கியதாக தகவல் மத்திய அரசு
    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு

    சிங்கப்பூர்

    இந்தியாவின் யூபிஐ சிங்கப்பூரின் PayNow இணைப்பு! தொடங்கி வைத்த பிரதமர்கள் தொழில்நுட்பம்
    இன வெறுப்பு: இந்திய-இஸ்லாமியர்களை விரட்டிவிட்ட சிங்கப்பூர் சூப்பர் மார்க்கெட்  இந்தியா
    1 கிலோ கஞ்சா கடத்த முயற்சித்தவரை தூக்கிலிட்டது சிங்கப்பூர்   உலக செய்திகள்
    முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்

    உலகம்

    சர்வதேச சாக்லேட் தினம்: ஒவ்வொரு சாக்லேட் பிரியர்களும் பார்க்க வேண்டிய இடங்கள் வாழ்க்கை
    சர்வதேச முத்த தினம் - முத்தங்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்  உறவுகள்
    டச்சு பிரதமர் ராஜினாமா: நெதர்லாந்தில் என்ன நடக்கிறது? ஐரோப்பா
    உக்ரைன் போரில் இதுவரை 9,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐநா உக்ரைன்

    உலக செய்திகள்

    அட்லான்டிக் பெருங்கடலில் டைட்டானிக் கப்பலைக் காணச் சென்ற நீர்மூழ்கி 5 பேருடன் மாயம் அமெரிக்கா
    ஆள்-கடத்தல் மற்றும் கற்பழிப்பு குற்றச்சாட்டுகளில் குற்றம் சாட்டப்பட்டார் ஆண்ட்ரூ டேட்  ஆண்ட்ரூ டேட்
    பாகிஸ்தான் பல்கலைக்கழங்களில் 'ஹோலி' கொண்டாட தடை  பாகிஸ்தான்
    உலக மொழியான 'இசை'யின் தினம் இன்று  உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025