NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / அமெரிக்காவில் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கடும் புயல் வெள்ளம்; 16 பேர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவில் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கடும் புயல் வெள்ளம்; 16 பேர் பலி
    அமெரிக்காவை வாட்டி வதைக்கும் புயல், வெள்ளத்தில் சிக்கி 16 பேர் பலி

    அமெரிக்காவில் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கடும் புயல் வெள்ளம்; 16 பேர் பலி

    எழுதியவர் Sekar Chinnappan
    Apr 06, 2025
    10:41 am

    செய்தி முன்னோட்டம்

    தெற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளில் கடுமையான புயல்கள், வெள்ளம் மற்றும் சூறாவளி தொடர்ந்து தாக்கும் நிலையில், இதில் சிக்கி அமெரிக்கா முழுவதும் 16 பேர் இறந்துள்ளனர்.

    உயிரிழந்தவர்களில், டென்னசியில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பல மாநிலங்களில் பரவலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும், ஆறுகள் பெரும் வெள்ளப்பெருக்கு நிலையை எட்டியுள்ளதாகவும், முக்கியமான உள்கட்டமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் அமெரிக்காவின் தேசிய வானிலை சேவை எச்சரித்துள்ளது.

    டெக்சாஸ் முதல் ஓஹியோ வரையில் கனமழை ஏற்கனவே பல பகுதிகளை மூழ்கடித்துள்ளது, இதனால் திடீர் வெள்ள அவசரநிலைகள் ஏற்பட்டுள்ளன, சாலைகள், பாலங்கள் மற்றும் வீடுகள் சேதமடைந்துள்ளன.

    டஜன் கணக்கான பகுதிகள் ஆபத்தான வெள்ள அபாய எச்சரிக்கையில் உள்ளன என்று தேசிய வானிலை சேவை தெரிவித்துள்ளது.

    உள்கட்டமைப்பு

    உள்கட்டமைப்பு சீர்குலைவால் விநியோகத்தில் சிக்கல்

    வெள்ளம், முக்கியமான போக்குவரத்து வழித்தடங்களில், குறிப்பாக லூயிஸ்வில்லி மற்றும் மெம்பிஸில் உள்ள கப்பல் மையங்களைச் சுற்றியுள்ள வர்த்தகத்தை பாதிக்கிறது.

    உள்கட்டமைப்பு சீர்குலைவு காரணமாக விநியோகச் சங்கிலி தாமதங்கள் ஏற்படக்கூடும் என்று அக்யூவெதர் எச்சரிக்கிறது.

    இதற்கிடையில், டிரம்ப் நிர்வாகத்தின் போது ஏற்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து அதன் அலுவலகங்களில் கிட்டத்தட்ட 20% காலியிட விகிதங்களை எதிர்கொள்வதால், தேசிய வானிலை சேவையின் பணியாளர்கள் குறித்து கவலைகள் எழுந்துள்ளன.

    லூயிஸ்வில் மேயர் கிரெய்க் க்ரீன்பெர்க் கூறுகையில், ஓஹியோ நதி 24 மணி நேரத்தில் ஐந்து அடி உயர்ந்ததாகவும், நகர வரலாற்றில் முதல் பத்து வெள்ள நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    வெள்ளம்
    கனமழை
    உலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    அமெரிக்கா

    ஹமாஸ் ஆதரவு பேச்சால் விசா ரத்து செய்யப்பட்ட இந்திய மாணவி அமெரிக்காவிலிருந்து தானாக வெளியேற்றம் ஹமாஸ்
    உக்ரைன் வீரர்களின் உயிரைக் காப்பாற்ற டிரம்ப் வேண்டுகோ; ஓகே சொன்ன புடின்; ஆனால் ஒருகண்டிஷன் விளாடிமிர் புடின்
    சீனாவின் உய்குர் மக்களை கட்டாய நாடுகடத்துவதில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது அமெரிக்கா விசா கட்டுப்பாடு விதிப்பு சீனா
    43 நாட்டினருக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அமெரிக்கா திட்டம் எனத் தகவல் டொனால்ட் டிரம்ப்

    வெள்ளம்

    நெல்லையில் கொட்டி தீர்த்த கனமழை - இதுவரை 9 பேர் உயிரிழந்ததாக தகவல் திருநெல்வேலி
    மீட்பு பணிகள் குறித்து விமர்சித்தவர்களுக்கு, இயக்குனர் மாரி செல்வராஜ் நெத்தியடி உதயநிதி ஸ்டாலின்
    நிவாரண பொருட்களை இலவசமாக அரசு விரைவு பேருந்துகளில் அனுப்பலாம் - தமிழக அரசு  தமிழக அரசு
    ஆயன்குளம் அதிசய கிணறு நிரம்பிய காரணம் என்ன?-ஊர்மக்கள் கோரிக்கை என்ன? கனமழை

    கனமழை

    ஃபெங்கல் புயல் உருவாவதில் தாமதம்; 12 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை புயல் எச்சரிக்கை
    தொடர்ந்து வெளுத்து வாங்கும் மழை; பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்டங்கள் லிஸ்ட் பள்ளிகளுக்கு விடுமுறை
    ஃபெஞ்சல் புயலால் தமிழகத்தில் அதிக மழையை எதிர்கொள்ளும் வட தமிழகம்; எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் வானிலை எச்சரிக்கை
    கொட்டித் தீர்க்கும் கனமழை; சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடல் சென்னை

    உலகம்

    உலகிலேயே முழுமையான செயற்கை இதயம் பொருத்தப்பட்ட 40 வயது ஆஸ்திரேலிய நபர்! ஆஸ்திரேலியா
    2024 ஆம் ஆண்டில் கடல் மட்டம் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்ததாக நாசா தெரிவித்துள்ளது நாசா
    உலக தண்ணீர் தினம் 2025: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் இந்த ஆண்டின் கருப்பொருள் உலக செய்திகள்
    214 பாகிஸ்தான் பணயக்கைதிகளை தூக்கிலிட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு; சர்வதேச சட்டத்திற்கு இணங்கி செயல்பட்டதாக அறிக்கை பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025