LOADING...
சவுதி அரேபியா கஃபாலா முறைக்கு முற்றுப்புள்ளி: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கிடைத்த சுதந்திரம்!
13.4 மில்லியன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்

சவுதி அரேபியா கஃபாலா முறைக்கு முற்றுப்புள்ளி: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கிடைத்த சுதந்திரம்!

எழுதியவர் Venkatalakshmi V
Oct 22, 2025
12:12 pm

செய்தி முன்னோட்டம்

சுமார் 50 ஆண்டுகளாக தொடர்ந்த கஃபாலா தொழிலாளர் ஸ்பான்சர்ஷிப் அமைப்பை சவுதி அரேபியா அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த தீர்மானம், நாட்டில் உள்ள 13.4 மில்லியன் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முக்கியமான படியாக கருதப்படுகிறது. கஃபாலா முறையின் கீழ், வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்களை வேலைக்கு அமர்த்திய முதலாளியின் கட்டுப்பாட்டில் இருந்தனர் - வேலை மாற்றம், நாட்டை விட்டு வெளியேறும் அனுமதி, சட்ட உதவி போன்றவை அனைத்து ஸ்பான்சரின் (கஃபீல்) ஒப்புதலுக்கு உட்பட்டிருந்தது. இதனால் "நவீன அடிமைத்தனம்" எனக் குற்றஞ்சாட்டபட்ட இம்முறை, தொழிலாளர் அடிப்படை சுரண்டலுக்கு வாய்ப்பளித்தது.

புதிய சீர்திருத்தங்கள்

இந்த கஃபாலா முறை நீக்கத்தால் வரவிற்கும் சீர்திருத்தங்கள் என்ன?

தொழிலாளர்கள் இப்போது முதலாளியின் ஒப்புதல் இல்லாமல் வேலை மாறலாம். நாட்டை விட்டு செல்லவும், விசா பெறவும் சுதந்திரம் அளிக்கப்படும். தொழிலாளர் நீதிமன்றங்கள் மற்றும் புகார் மையங்களுக்கான அணுகல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் 'விசன் 2030' திட்டத்தின் ஒரு பகுதியாக, சவுதி பொருளாதாரத்தை உலகளாவிய அளவில் திறந்த, நவீன நாடாக மாற்றும் நோக்கில் செய்யப்பட்டுள்ளது. இது, சர்வதேச வேலைவாய்ப்பு தரங்களை பின்பற்றும் முக்கியமான கட்டமாகவும், திறமையான தொழிலாளர்களையும் முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் முயற்சியாகவும் அமைந்துள்ளது. சமீபத்தில் கத்தார் உலகக் கோப்பைக்கு முன்னோடி சீர்திருத்தங்களை மேற்கொண்டதை தொடர்ந்து, சவுதியின் இந்த முடிவும் வளைகுடா நாடுகளில் மனித உரிமை முன்னேற்றத்தை சுட்டிக்காட்டுகிறது.