NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தானில் கொடுமைப்படுத்திய கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்றதற்காக மகளின் காலை வெட்டிய தந்தை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தானில் கொடுமைப்படுத்திய கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்றதற்காக மகளின் காலை வெட்டிய தந்தை 

    பாகிஸ்தானில் கொடுமைப்படுத்திய கணவனிடம் இருந்து விவாகரத்து பெற்றதற்காக மகளின் காலை வெட்டிய தந்தை 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 27, 2024
    01:07 pm

    செய்தி முன்னோட்டம்

    தன்னை கொடுமைப்படுத்திய கணவனிடம் இருந்து விவாகரத்து பெற முயற்சித்த சோபியா படூல் ஷா என்ற பாகிஸ்தானியப் பெண்ணை அவரது தந்தை மற்றும் மாமாக்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொடுபடுத்திய கணவரிடமிருந்து விவாகரத்து கோரியதால் தனது கால்கள் துண்டிக்கப்பட்டதாக அந்த பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

    இனி அந்த பெண்ணால் நடக்கவே முடியாமல் போகலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    தாக்குதல் நடத்தியவர்கள் சோபியாவின் தந்தை சையத் முஸ்தபா ஷா மற்றும் அவரது மாமாக்கள் சையத் குர்பான் ஷா, எஹ்சான் ஷா, ஷா நவாஸ் மற்றும் முஷ்டாக் ஷா என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    தாக்குதலைத் தொடர்ந்து, அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    பாகிஸ்தான் 

     குடும்பத்தை அவமதிப்பதாக குற்றம் சாட்டிய அவரது பெற்றோர் 

    சிறிது நேரத்தில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோபியாவை நவாப் ஷா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    போலீசாருடன் பேசிய சோபியா, ​​​​தனது கணவர் தன்னைத் தொடர்ந்து அடித்து கொடுமைப்படுத்தியதாகவும், தங்களது இரண்டு குழந்தைகளையும் புறக்கணித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    காவல்துறையின் கூற்றுப்படி, விவாகரத்து கோரி அவர் மனு தாக்கல் செய்ததனால் கோபமடைந்த சோபியாவின் பெற்றோர் அவர் தனது கணவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதன் மூலம் குடும்பத்தை அவமதிப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

    மேலும், அவர் தனது வழக்கை வாபஸ் பெற மறுத்ததால் அவர்கள் சோபியாவை கோடரிகளால் தாக்கினர்.

    முஷ்டாக் என்ற சந்தேக நபரை தற்போது கைது செய்துள்ள போலீசார், பிற சந்தேக நபர்களை கண்டுபிடிக்க தற்போது சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்: நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கூட்டணி அமைக்க வாய்ப்பு  தேர்தல் முடிவு
    பாகிஸ்தான் பிரதமர் வேட்பாளராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் பெயர் பரிந்துரைப்பு பிரதமர்
    ஷெஹ்பாஸ் ஷெரீப் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் பிரதமராகவும், மரியம் நவாஸ் பஞ்சாப் முதல்வராகவும் தேர்வு பிரதமர்
    Honey Trap-ல் சிக்கி ஐ.எஸ்.ஐ-க்கு உளவு பார்த்த இந்திய தூதரக அதிகாரி மாஸ்கோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025