NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 364 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு பாகிஸ்தான் விற்றதாக தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    364 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு பாகிஸ்தான் விற்றதாக தகவல்
    2022-23 நிதியாண்டில் பாகிஸ்தானின் ஆயுத ஏற்றுமதி 3,000% அதிகரித்துள்ளது

    364 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை உக்ரைனுக்கு பாகிஸ்தான் விற்றதாக தகவல்

    எழுதியவர் Sindhuja SM
    Nov 15, 2023
    11:10 am

    செய்தி முன்னோட்டம்

    ரஷ்ய-உக்ரைன் போரின் போது, உக்ரைனுக்கு ஆயுதங்களை விற்ற பாகிஸ்தான், கடந்த ஆண்டு இரண்டு தனியார் யுனைடெட் ஸ்டேட்ஸ் (யுஎஸ்) நிறுவனங்களுடனான ஆயுத ஒப்பந்தங்களில் இருந்து குறைந்தது 364 மில்லியன் டாலர்களைப் பெற்றதாக பிபிசி உருது தெரிவித்துள்ளது.

    பிரிட்டிஷ் ராணுவ சரக்கு விமானம், பாகிஸ்தானில் இருந்து ஐரோப்பாவிற்கு ஐந்து பயணங்களை மேற்கொண்டதாகவும், அப்போது உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகவும் பிபிசி உருது கூறியுள்ளது.

    ராவல்பிண்டியில் உள்ள பாகிஸ்தான் விமானப்படைத் தளமான நூர் கானில் இருந்து சைப்ரஸ், அக்ரோதிரியில் உள்ள பிரிட்டிஷ் தளத்திற்கும், பின்னர் ருமேனியாவுக்கும் அந்த பிரிட்டிஷ் ராணுவ சரக்கு விமானம் 5 முறை பயணம் செய்திருக்கிறது.

    ட்ஜ்வ்ல்க்

    பாகிஸ்தானின் ஆயுத ஏற்றுமதி 3,000% அதிகரிப்பு 

    ஆனால், பொருளாதார நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான், எந்த விதமான ஆயுதங்களையும் தாங்கள் உக்ரைனுக்கு விற்கவில்லை என்று இந்த செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளது.

    மேலும், அமெரிக்க நிறுவனங்களான குளோபல் மிலிட்டரி மற்றும் நார்த்ரோப் க்ரம்மன் ஆகியவற்றுடன் பாகிஸ்தான் தலா ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்கான ஆதாரங்கள் ஃபெடரல் ப்ரோக்யூர்மென்ட் டேட்டா சிஸ்டத்தில் இருப்பதாகவும் செய்தி வெளியாகி இருக்கிறது.

    கூடுதலாக, 2022-23 நிதியாண்டில் பாகிஸ்தானின் ஆயுத ஏற்றுமதி 3,000% அதிகரித்துள்ள விவரத்தை பாகிஸ்தானின் ஸ்டேட் வங்கியின் தரவுகள் காட்டுவதாகவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

    "2021-22ஆம் நிதியாண்டில் பாகிஸ்தான் $13 மில்லியன் மதிப்பிலான ஆயுதங்களை ஏற்றுமதி செய்தது. இந்த ஏற்றுமதி 2022-23ஆம் நிதியாண்டில் $415 மில்லியனை எட்டியது" என்று பிபிசி உருது தனது செய்தியில் கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    ரஷ்யா
    உக்ரைன்
    அமெரிக்கா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    'காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்': ஐநா சபையில் வைத்து பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா இந்தியா
    1 கோடி பாகிஸ்தானியர்கள் வறுமையில் வாடுகிறார்கள்: உலக வங்கி  உலக வங்கி
    3 மாதங்களாக தன்னை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை சுட்டு கொன்ற 14 வயது மகள்: பாகிஸ்தானில் கொடூரம்  உலகம்
    தொலைக்காட்சி நேரலையில் மாறி மாறி உதைத்துக்கொண்ட பாகிஸ்தான் தலைவர்கள்; வைரலாகும் காணொளி வைரல் செய்தி

    ரஷ்யா

    உக்ரைன் துறைமுகம் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல் - டன் கணக்கிலான தானியங்கள் சேதம்  உக்ரைன்
    ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் டேங்கர்களை தாக்கிய உக்ரைன்: பதிலடி கொடுக்க ரஷ்யா முடிவு  உக்ரைன்
    நிலவில் தண்ணீரின் இருப்பை ஆராய 'லூனா-25' விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது ரஷ்யா விண்வெளி
    77வது சுதந்திர தினம், இந்த 75 ஆண்டுகளில் இந்தியா சாதித்தது என்ன?-பகுதி 1 இந்தியா

    உக்ரைன்

    உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடியை நம்பி இருக்கிறதா அமெரிக்கா இந்தியா
    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன் ஜனாதிபதி
    உள்ளூர் மோதலை உலகளாவிய மோதலாக மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது: ரஷ்ய அதிபர் உலகம்
    உக்ரைனில் இருக்கும் வீரர்கள் மற்றும் ஆயுதங்களை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டும்: ரஷ்யா உலகம்

    அமெரிக்கா

    காசா நகரை சுற்றி வளைத்த இஸ்ரேல் படைகள், பைகளில் அனுப்பப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை ஹமாஸ்
    நோ ஷேவ் நவம்பர்: ஆண்கள் ஏன் இதை கடைபிடிக்கிறார்கள்? உலகம்
    அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 96,000 இந்தியர்கள் கைது இந்தியா
    ரஷ்யாவின் வாக்னர் குழு ஹெஸ்புல்லாவுக்கு அதிநவீன ஏவுகணைகளை அனுப்புகிறது- அமெரிக்கா இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025