NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஹெலிகாப்டர் விபத்தைத் தொடர்ந்து ஈரான் அதிபரின் உயிருக்கு ஆபத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஹெலிகாப்டர் விபத்தைத் தொடர்ந்து ஈரான் அதிபரின் உயிருக்கு ஆபத்து
    குறைந்தது 60 மீட்புக் குழுக்கள் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்துள்ளன

    ஹெலிகாப்டர் விபத்தைத் தொடர்ந்து ஈரான் அதிபரின் உயிருக்கு ஆபத்து

    எழுதியவர் Venkatalakshmi V
    May 20, 2024
    07:31 am

    செய்தி முன்னோட்டம்

    ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் சென்ற ஹெலிகாப்டர், வடமேற்கு ஈரானில் உள்ள ஜோல்பாவில் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதாக ஒரு செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.

    அஜர்பைஜானுடனான ஈரானின் எல்லைக்கு சென்று திரும்பும் வழியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தைத் தொடர்ந்து ரைசி மற்றும் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமிரப்டோலாஹியன் ஆகியோரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஒரு அதிகாரி கூறினார் என செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

    சம்பவத்திற்குப் பிறகு, குறைந்தது 60 மீட்புக் குழுக்கள் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்துள்ளன என்று மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    ஜனாதிபதி ரைசியின் பரிவாரங்களில் குறைந்தது இருவர் மீட்புக் குழுக்களைத் தொடர்பு கொண்டதாக செய்தி நிறுவனம் IRNA தெரிவித்துள்ளது.

    ஹெலிகாப்டர் விபத்து 

    பனிமூட்டம் காரணமாக மலையின் மீது மோதிய ஹெலிகாப்டர்

    அப்பகுதியில் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

    ஜனாதிபதியை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர், கிழக்கு அஜர்பைஜானில் உள்ள தெஹ்ரானில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ள ஜோல்பாவில் விபத்துக்குள்ளானது என்றும், ஹெலிகாப்டரின் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் தேடும் பணி தீவிரமடைந்துள்ளதாகவும் ஈரானின் உள்துறை அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார் .

    மோசமான வானிலை மற்றும் கடுமையான மூடுபனி காரணமாக ஈரானிய ரெட் கிரசண்ட் சொசைட்டியின் மீட்புக்குழுக்கள் சம்பவம் நடந்த பகுதிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியதாக பிரஸ் டிவி தெரிவித்துள்ளது. ட்ரோன் பிரிவுகளும் அவசர நடவடிக்கைக்கு உதவி வருகின்றன.

    ரைசியின் வாகனத் தொடரணியில் மூன்று ஹெலிகாப்டர்கள் இருந்தன, மற்ற இரண்டும் "பத்திரமாக தங்கள் இலக்கை அடைந்துவிட்டன" என்று தஸ்னிம் செய்தி நிறுவனம் கூறியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    விபத்து
    அஜர்பைஜான்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ஈரான்

    அமெரிக்காவின் 'இறுதி எச்சரிக்கை' புறக்கணிப்பு: செங்கடலில் ட்ரோன் படகை வெடிக்கச் செய்த ஹூதிகள் அமெரிக்கா
    ஈரான் ஆதரவு ஹூதி போராளிகளுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தாக்குதல் ஏமன்
    செங்கடலில் செல்லும் சர்வதேச வணிக கப்பல்களைத் தாக்கும் கூட்டம்: யாரிந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள்? ஏமன்
    பாகிஸ்தான் மீது ஈரான் தாக்குதல்: கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை  பாகிஸ்தான்

    விபத்து

    நாக்பூர் வெடிமருந்து தொழிற்சாலையில் வெடி விபத்து: 9 பேர் பலி, மூவர் காயம் மகாராஷ்டிரா
    இத்தாலி: ஒரே நாளில் தனித்தனி விமான விபத்துகளில் உயிர்தப்பிய தம்பதி இத்தாலி
    கோவை-பெங்களூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையின் சோதனை ஓட்டம் துவக்கம்  வந்தே பாரத்
    சென்னை தண்டையார்பேட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்து-ஒருவர் பலி  சென்னை

    அஜர்பைஜான்

    அஜர்பைஜான் எப்படி பலருக்கும் விருப்பமான சுற்றுலாதலமாக மாறியது? சுற்றுலா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025