NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றார் கே.பி.சர்மா ஒலி: பிரதமர் மோடி வாழ்த்து 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றார் கே.பி.சர்மா ஒலி: பிரதமர் மோடி வாழ்த்து 

    நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றார் கே.பி.சர்மா ஒலி: பிரதமர் மோடி வாழ்த்து 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 15, 2024
    05:52 pm

    செய்தி முன்னோட்டம்

    நேபாளத்தின் மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான கே.பி.சர்மா ஒலி, நான்காவது முறையாக அந்நாட்டின் பிரதமராக இன்று பதவியேற்றார்.

    முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் தஹாலுக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைத் தொடர்ந்து புதிய கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ளது.

    நம்பிக்கையில்லா வாக்கெடுப்பைத் தொடர்ந்து புதிய கூட்டணி அரசாங்கத்தை வழிநடத்த ஒலியை ஜனாதிபதி ராம் சந்திர பவுடல் நியமித்தார்.

    இந்நிலையில், இன்று கே.பி.சர்மா ஒலியின் பதவியேற்பு விழா ஷிடல் நிவாஸில் நடந்தது. ஜனாதிபதி பவுடல் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இருக்கும் மிகப்பெரிய கட்சியான நேபாளி காங்கிரஸின் ஆதரவுடன் ஒலி மீண்டும் பிரதமராகி உள்ளார்.

    நேபாளம் 

    பிரதமர் ஒலியின் நியமனத்திற்கு இந்தியப் பிரதமர் வாழ்த்து

    அவர் நியமிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அதற்கான அரசியலமைப்பு ஆணையை எதிர்கொள்கிறார்.

    இந்த வாக்கெடுப்பில் அவர் வெற்றிபெற, 275 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஒலிக்கு குறைந்தபட்சம் 138 வாக்குகள் தேவைப்படும்.

    இதற்கிடையில், பிரதமர் ஒலியின் நியமனத்திற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்தியா மற்றும் நேபாளம் இடையே இருதரப்பு உறவுகள் வலுப்படும் என்று மேலும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

    "எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், முன்னேற்றம் மற்றும் செழுமைக்கான நமது பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தவும் நெருக்கமாக பணியாற்ற எதிர்நோக்குகிறோம்" என்று மோடி ட்விட்டரில் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நேபாளம்
    இந்தியா
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நேபாளம்

    ராமர் சிலை செதுக்குவதற்காக நேபாளத்தில் இருந்து வந்த அரிய வகை பாறைகள் உத்தரப்பிரதேசம்
    நேபாள விமான விபத்து: விமானி செய்த தவறினால் தான் விபத்து ஏற்பட்டதா உலகம்
    எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழக வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்
    இமயமலையில் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகள் இழப்பு உலக செய்திகள்

    இந்தியா

    அசாம் வெள்ளம்: 52 பேர் பலி, 24 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அசாம்
    ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது மத்திய பட்ஜெட் 2024 மத்திய அரசு
    இந்தியாவிலேயே அதிவேகமாக தயாரிக்கப்பட்ட 'ஜோராவார்' என்ற பீரங்கி அறிமுகம் இந்திய ராணுவம்
    2026இல் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது ஹூண்டாயின் இன்ஸ்டர் EV ஹூண்டாய்

    பிரதமர் மோடி

    தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் பதவிக்காலம் நீட்டிப்பு; பிரதமரின் முதன்மை செயலாளராக PK மிஸ்ரா தொடர்வார் மத்திய அரசு
    G7 உச்சி மாநாடு: பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரல் என்ன?  பிரதமர்
    G7 உச்சி மாநாடு: உலகப் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி என்ன விவாதித்தார் இந்தியா
    முக்கிய விஷயங்களில் இணைந்து பணியாற்றுவோம்: பிரதமர் மோடியை சந்தித்த பிறகு ட்ரூடோ பேச்சு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025