NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'என்னை 10 ஆண்டுகள் சிறை வைக்க திட்டமிடுகிறார்கள்': இம்ரான் கான் குற்றச்சாட்டு 
    'என்னை 10 ஆண்டுகள் சிறை வைக்க திட்டமிடுகிறார்கள்': இம்ரான் கான் குற்றச்சாட்டு 
    1/2
    உலகம் 1 நிமிட வாசிப்பு

    'என்னை 10 ஆண்டுகள் சிறை வைக்க திட்டமிடுகிறார்கள்': இம்ரான் கான் குற்றச்சாட்டு 

    எழுதியவர் Sindhuja SM
    May 15, 2023
    02:34 pm
    'என்னை 10 ஆண்டுகள் சிறை வைக்க திட்டமிடுகிறார்கள்': இம்ரான் கான் குற்றச்சாட்டு 
    இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்

    தேச துரோகக் குற்றச்சாட்டின் கீழ் தன்னை அடுத்த 10 ஆண்டுகளுக்கு சிறையில் வைத்திருக்க அந்நாட்டின் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். "இப்போது முழுமையான லண்டன் திட்டம் அம்பலமாகி உள்ளது. நான் சிறைக்குள் இருந்தபோது வன்முறையை சாக்காகப் பயன்படுத்தி, அவர்கள் நீதிபதி, ஜூரி மற்றும் மரணதண்டனை செய்பவர் போன்றவர்கள் மூலம் செயல்பட்டனர். புஷ்ரா பேகத்தை(கானின் மனைவி) சிறையில் அடைத்து என்னை அவமானப்படுத்துவதே இப்போது அவர்களது திட்டம். மேலும் சில தேசத்துரோகச் சட்டத்தைப் பயன்படுத்தி அடுத்த பத்து வருடங்களுக்கு என்னை உள்ளே வைத்திருக்க திட்டமிட்டுள்ளனர்." என்று அவர் கூறியுள்ளார்.

    2/2

    இம்ரான் கான் மேலும் கூறி இருப்பதாவது:

    யாரும் அவர்களை எதிர்த்துவிடாமல் இருக்க, அவர்கள் இரண்டு விஷயங்களைச் செய்திருக்கிறார்கள்--முதலில் PTI தொழிலாளர்கள் மீது மட்டுமல்லாமல், சாதாரண குடிமக்கள் மீதும் வேண்டுமென்றே பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இரண்டாவதாக, ஊடகங்கள் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. நாளை என்னை கைது செய்யும்போது, மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்பதை உறுதிசெய்ய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சியே இது. நாளை அவர்கள் மீண்டும் இணைய சேவைகளை நிறுத்தி சமூக ஊடகங்களை தடை செய்வார்கள். இதற்கிடையில், வீடுகள் உடைக்கப்பட்டு, போலீசாரால் வீடுகளில் உள்ள பெண்கள் தவறாக கையாளப்படுகிறார்கள். பாகிஸ்தான் மக்களுக்கு எனது செய்தி என்னவென்றால், கடைசித் துளி ரத்தம் இருக்கும் வரை ஹக்கீகி ஆசாதிக்காக நான் போராடுவேன். இந்த ஏமாற்றுக்காரர்களுக்கு அடிமையாக இருப்பதை விட மரணிப்பதே மேல்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    பாகிஸ்தான்
    இம்ரான் கான்
    உலகம்
    உலக செய்திகள்

    பாகிஸ்தான்

    அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது  உலகம்
    தோஷகானா வழக்கில் இம்ரான் கான் மீதான குற்றப்பத்திரிக்கைக்கு தடை: உயர்நீதிமன்றம் இம்ரான் கான்
    இம்ரான் கான் விடுவிப்பு: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் உலகம்
    "நீதிமன்ற அவமதிப்பு": இம்ரான் கான் கைது குறித்து பேசிய பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இம்ரான் கான்

    இம்ரான் கான்

    வீடியோ: இம்ரான் கான் எப்படி கைது செய்யப்பட்டார் பாகிஸ்தான்
    முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது  பாகிஸ்தான்
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான்
    இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் பாகிஸ்தான்

    உலகம்

    சர்வேதேச செவிலியர்கள் தினம்: இரவுபகலாக உழைக்கும் செவிலியர்களுக்கு உடல் சோர்வை நீக்க சில குறிப்புகள் உடல் நலம்
    இத்தாலியில் திடீரென்று வெடித்த வேன்: பல வாகனங்கள் சேதம்  உலக செய்திகள்
    ஒரே பாலின உறவுகள் குற்றமற்றது: இந்தியாவை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட இலங்கை இலங்கை
    இங்கிலாந்து அரசர் சார்லஸின் வீங்கி போன விரல்கள்: காரணம் என்ன  இங்கிலாந்து

    உலக செய்திகள்

    கங்காருக்கள் பட்டினியால் இறப்பதற்கு முன் அவற்றை அழிக்க வேண்டும்: ஆஸ்திரேலிய அதிகாரிகள்  ஆஸ்திரேலியா
    ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதல்: உக்ரைனில் பரபரப்பு  ரஷ்யா
    எல் நினோ என்றால் என்ன; அது உலக வானிலையை எவ்வாறு பாதிக்கிறது உலகம்
    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை விட இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் குறைவு  இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023