NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'என்னை 10 ஆண்டுகள் சிறை வைக்க திட்டமிடுகிறார்கள்': இம்ரான் கான் குற்றச்சாட்டு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'என்னை 10 ஆண்டுகள் சிறை வைக்க திட்டமிடுகிறார்கள்': இம்ரான் கான் குற்றச்சாட்டு 
    இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்

    'என்னை 10 ஆண்டுகள் சிறை வைக்க திட்டமிடுகிறார்கள்': இம்ரான் கான் குற்றச்சாட்டு 

    எழுதியவர் Sindhuja SM
    May 15, 2023
    02:34 pm

    செய்தி முன்னோட்டம்

    தேச துரோகக் குற்றச்சாட்டின் கீழ் தன்னை அடுத்த 10 ஆண்டுகளுக்கு சிறையில் வைத்திருக்க அந்நாட்டின் ராணுவம் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

    "இப்போது முழுமையான லண்டன் திட்டம் அம்பலமாகி உள்ளது. நான் சிறைக்குள் இருந்தபோது வன்முறையை சாக்காகப் பயன்படுத்தி, அவர்கள் நீதிபதி, ஜூரி மற்றும் மரணதண்டனை செய்பவர் போன்றவர்கள் மூலம் செயல்பட்டனர். புஷ்ரா பேகத்தை(கானின் மனைவி) சிறையில் அடைத்து என்னை அவமானப்படுத்துவதே இப்போது அவர்களது திட்டம். மேலும் சில தேசத்துரோகச் சட்டத்தைப் பயன்படுத்தி அடுத்த பத்து வருடங்களுக்கு என்னை உள்ளே வைத்திருக்க திட்டமிட்டுள்ளனர்." என்று அவர் கூறியுள்ளார்.

    details

    இம்ரான் கான் மேலும் கூறி இருப்பதாவது:

    யாரும் அவர்களை எதிர்த்துவிடாமல் இருக்க, அவர்கள் இரண்டு விஷயங்களைச் செய்திருக்கிறார்கள்--முதலில் PTI தொழிலாளர்கள் மீது மட்டுமல்லாமல், சாதாரண குடிமக்கள் மீதும் வேண்டுமென்றே பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இரண்டாவதாக, ஊடகங்கள் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

    நாளை என்னை கைது செய்யும்போது, மக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என்பதை உறுதிசெய்ய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சியே இது. நாளை அவர்கள் மீண்டும் இணைய சேவைகளை நிறுத்தி சமூக ஊடகங்களை தடை செய்வார்கள். இதற்கிடையில், வீடுகள் உடைக்கப்பட்டு, போலீசாரால் வீடுகளில் உள்ள பெண்கள் தவறாக கையாளப்படுகிறார்கள்.

    பாகிஸ்தான் மக்களுக்கு எனது செய்தி என்னவென்றால், கடைசித் துளி ரத்தம் இருக்கும் வரை ஹக்கீகி ஆசாதிக்காக நான் போராடுவேன். இந்த ஏமாற்றுக்காரர்களுக்கு அடிமையாக இருப்பதை விட மரணிப்பதே மேல்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    இம்ரான் கான்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    பாகிஸ்தான்

    விக்கிபீடியா தடையை நீக்கிய பாகிஸ்தான் உலகம்
    துருக்கி நிலநடுக்கம்: உதவி செய்ய உலக நாடுகள் எடுத்த நடவடிக்கைகள் சீனா
    சென்னையில் மூளை சாவு அடைந்த பாகிஸ்தானியர்-உடல் உறுப்பு தானம் செய்ய அனுமதி மறுப்பு சென்னை
    புல்வாமா தாக்குதலின் 4ஆம் ஆண்டு நினைவு நாள்: பிரதமர் மோடி அஞ்சலி இந்தியா

    இம்ரான் கான்

    இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில் பாகிஸ்தான்
    ஏழு வழக்குகளில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன்: பாகிஸ்தான் நீதிமன்றம் பாகிஸ்தான்
    முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது  பாகிஸ்தான்
    வீடியோ: இம்ரான் கான் எப்படி கைது செய்யப்பட்டார் பாகிஸ்தான்

    உலகம்

    1 கிலோ கஞ்சா கடத்த முயற்சித்தவரை தூக்கிலிட்டது சிங்கப்பூர்   சிங்கப்பூர்
    இந்தியாவில் தயாரித்த இருமல் மருந்துகளால் மீண்டும் பிரச்சனை: WHO எச்சரிக்கை  இந்தியா
    மாட்ரிட் ஓபன் 2023 தொடரிலிருந்து கடைசி நேரத்தில் விலகிய பிரபல வீராங்கனை விளையாட்டு
    சூடானில் இருந்து 1100 இந்தியர்கள் மீட்பு; 360 பேர் இந்தியா வந்தடைந்தனர்  இந்தியா

    உலக செய்திகள்

    முன்னாள் சிஇஓ-வை ஏன் பணிநீக்கம் செய்தது காக்னிசன்ட் நிறுவனம்?  அமெரிக்கா
    அலறிய பயணிகள்? அவசரமாக சென்னையில் தரையிறக்கப்பட்ட கத்தார் ஏர் லைன்ஸ் விமானம்!  சென்னை
    2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஜோ பைடன்: அதிகாரபூர்வ அறிவிப்பு  அமெரிக்கா
    ஆபரேஷன் காவேரி: சூடானில் இருந்து 278 இந்தியர்கள் மீட்பு  சூடான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025