லஷ்கர்-இ-தொய்பா இணை நிறுவனர் அமீர் ஹம்சா, லாகூர் செய்தி சேனல் அலுவலகத்திற்கு வெளியே சுடப்பட்டார்
செய்தி முன்னோட்டம்
லஷ்கர்-இ-தைபா (LeT) பயங்கரவாத அமைப்பின் இணை நிறுவனரான அமீர் ஹம்சா, பாகிஸ்தானின் லாகூரில் அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டார். இந்த சம்பவம், நகரில் உள்ள ஒரு செய்தித் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வெளியே நிகழ்ந்தது. பலத்த காயங்களுடன் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். கிடைத்த தகவல்களின்படி, 66 வயதான அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
பயங்கரவாத பின்னணி
ஹம்ஸா, ஹாஃபிஸ் சயீதுடன் இணைந்து லஷ்கர்-இ-தொய்பாவை நிறுவினார்
ஹம்சா, ஹாஃபிஸ் சயீதுடன் இணைந்து லஷ்கர்-இ-தொய்பாவை நிறுவினார். இந்தியாவில் நடந்த தாக்குதல்கள் உட்பட பல பயங்கரவாத நடவடிக்கைகளுடன் அவருக்கு தொடர்பு உண்டு. அவர் ஆப்கானிஸ்தான் முஜாஹிதீன்களின் மூத்த உறுப்பினர் ஆவார். மேலும், ஒரு காலத்தில் லஷ்கர்-இ-தொய்பாவின் அதிகாரப்பூர்வ வெளியீட்டின் ஆசிரியராக இருந்து, லஷ்கரின் பிரச்சாரத்தை மேற்பார்வையிட்டார். அவர் 'கஃபிலா தஃவத் அவுர் ஷஹாதத்' (மதமாற்றம் மற்றும் தியாகத்தின் பயணம்) மற்றும் 'ஷஹ்ரா-இ-பஹிஷ்த்' (சொர்க்கத்திற்கான பாதை) போன்ற நூல்களை எழுதியுள்ளார். அதன் தீவிரவாத இலக்கியத்திற்கு அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.
புதிய அமைப்பு
ஹம்சா ஜெய்ஷ்-இ-மன்கஃபா என்ற பிரிவுக் குழுவை உருவாக்கினார்
2018-ல், பாகிஸ்தான் அதிகாரிகள் லஷ்கர்-இ-தொய்பாவுடன் தொடர்புடைய தொண்டு நிறுவனங்கள் மீது நிதி நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகு, ஹம்சா லஷ்கர் அமைப்பிலிருந்து தன்னை விலக்கி கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர், தீவிரவாத நடவடிக்கைகளைத் தொடர்வதற்காக ஜெய்ஷ்-இ-மன்கஃபா என்ற ஒரு பிரிவுக் குழுவை உருவாக்கினார். இந்தக் குழு பாகிஸ்தானில் சுதந்திரமாக செயல்படுவதாகவும், ஹம்சா லஷ்கர்-இ-தொய்பா தலைமையுடன் தொடர்பில் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. 2012-ல் ஹம்சாவை அமெரிக்கா ஒரு உலகளாவிய பயங்கரவாதியாக அறிவித்தது.