NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / காசா மீது இரண்டாவது கட்டத் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    காசா மீது இரண்டாவது கட்டத் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்
    பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், மலேசியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள். புகைப்படம்-ராய்ட்டர்ஸ்

    காசா மீது இரண்டாவது கட்டத் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல்

    எழுதியவர் Srinath r
    Oct 29, 2023
    09:21 am

    செய்தி முன்னோட்டம்

    காசா உடனான போர் 'இரண்டாம் கட்டத்திற்கு' நகர்ந்துள்ளதாக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

    கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி, ஹமாஸ் நடத்திய திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு பின், இஸ்ரேல் பாலஸ்தீன் இடையே போர் மூண்டது.

    தற்போது 23வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், காசாவிற்குள் புகுந்து இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

    மேலும் வடக்கு காசா பகுதியில் உள்ள மக்களை, வெளியேற வலியுறுத்தி இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் துண்டு பிரசுரங்களையும் வீசி வருகிறது.

    2nd card

    போர் நீண்டதாகவும் கடுமையானதாகவும் இருக்கும்-  நெதன்யாகு 

    காசா உடனான தற்போது நடைபெற்று வரும் போர், நீண்டதாகவும் கடுமையானதாக இருக்கும் எனவும் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் தொலைக்காட்சி வாயிலாக பத்திரிகையாளர்களை சந்தித்த நெதன்யாகு, "தரைக்கு மேல் மற்றும் தரைக்கு கீழ் உள்ள எதிரிகள் அழிக்கப்படுவார்கள்".

    "நாம் இப்போது சோதனையை எதிர்கொண்டு உள்ளோம். இது எப்படி முடியும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. நாம் வெற்றி பெறுவோம்" என தெரிவித்தார்.

    முன்னதாக, ஹமாஸ் அமைப்பால் பிணையத் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து, அவர்களுக்கு நெதன்யாகு ஆறுதல் தெரிவித்தார்.

    மேலும் பிணையக் கைதிகளை மீட்பது, ராணுவ நடவடிக்கையின் மிக முக்கிய பகுதி என தெரிவித்தார்.

    3rd card

    ஹமாஸ் மீதான இரண்டாம் கட்ட தாக்குதல் என்றால் என்ன?

    கடந்த வாரம், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட், பாராளுமன்றக் குழுவிடம் போர் மூன்று கட்டங்களாக நடைபெறும் என கூறினார்.

    ஹமாஸ் அமைப்பை தோற்கடித்து, முழுவதுமாக அழிப்பது முதல் கட்டம் என்றும்,

    சிறு எதிர்ப்பை கூட விட்டு வைக்காமல் அழிப்பது இரண்டாவது கட்டம் என்றும்,

    மூன்றாவது கட்டமாக, காசாவில் வாழ்பவர்கள் மீதான இஸ்ரேலின் பொறுப்பை நீக்கி, இஸ்ரேல் மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்வது என தெரிவித்தார்.

    இப்போரில் 8,000 பாலஸ்தீன் மக்கள் கொள்ளப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், இஸ்ரேலின் இரண்டாம் கட்ட தாக்குதல் உயிரிழப்புகளை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஹமாஸ்
    பிரதமர்

    சமீபத்திய

    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக

    இஸ்ரேல்

    சுரங்கப்பாதைகளை வைத்து இஸ்ரேலுக்கு டிமிக்கி கொடுக்கும் ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஹமாஸ் மருத்துமனை தாக்குதல் எதிரொலி: அமெரிக்க அதிபரின் அரபு தலைவர்களுடனான சந்திப்பு ரத்து அமெரிக்கா
    மருத்துவமனை தாக்குதலில் இஸ்ரேல் குற்றம் சாட்டும் இஸ்லாமிய ஜிகாத் என்பது யார்? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேலை அடைந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்; இஸ்ரேல் பிரதமருடன் இணைந்து கூட்டறிக்கை அமெரிக்கா
    பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் பயணம் பிரதமர்
    காஸாவுக்கு நிவாரண உதவிகளை அனுப்ப எகிப்து ஒப்புதல்- பைடன் தகவல் ஜோ பைடன்
    பாலஸ்தீனியத்திற்கு ஆதரவளிக்கும் அரபு நாடுகள் அகதிகளை ஏற்க மறுப்பது ஏன்? ஹமாஸ்

    ஹமாஸ்

    காஸாவில் அதிகரித்து வரும் மனித நெருக்கடியை தீர்ப்பதற்கே முன்னுரிமை- பைடன் அமெரிக்கா
    வீடியோ: பணயக் கைதிகளான குழந்தைகளை பராமரிக்கும் ஆயுதம் ஏந்திய பாலஸ்தீன பயங்கரவாதிகள்  இஸ்ரேல்
    இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார் ஹமாஸ் வான்வழிப் படைகளின் தலைவர் இஸ்ரேல்
    'ஆப்ரேஷன் அஜய்'- இஸ்ரேலில் இருந்து தமிழகம் திரும்பிய 28 தமிழர்கள் இஸ்ரேல்

    பிரதமர்

    நிலவை 'இந்து ராஜ்ஜியம்' என்று அறிவிக்க வேண்டும்: பிரபல மத குரு கோரிக்கை  இந்தியா
    நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: என்னென்ன எதிர்பார்க்கலாம்? சந்திரயான் 3
    மோடியை அதிபராக்குவதற்கான சதி திட்டம் தான் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' - மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    வாட்ஸ்அப் சேனலில் இணைந்த பிரதமர் நரேந்திர மோடி  வாட்ஸ்அப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025