NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஈரான் ஹிஜாப் போராட்டத்தில் கலந்துகொண்ட 22 ஆயிரம் பேருக்கு மன்னிப்பு
    ஈரான் ஹிஜாப் போராட்டத்தில் கலந்துகொண்ட 22 ஆயிரம் பேருக்கு மன்னிப்பு
    1/2
    உலகம் 1 நிமிட வாசிப்பு

    ஈரான் ஹிஜாப் போராட்டத்தில் கலந்துகொண்ட 22 ஆயிரம் பேருக்கு மன்னிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Mar 13, 2023
    06:32 pm
    ஈரான் ஹிஜாப் போராட்டத்தில் கலந்துகொண்ட 22 ஆயிரம் பேருக்கு மன்னிப்பு
    இதுவரை 82,000 பேர் மன்னிக்கப்பட்டுள்ளனர், இதில் 22,000 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆவர்

    ஈரானில் நடந்த சமீபத்திய போராட்டங்களில் கைது செய்யப்பட்ட 22,000 பேருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதாக ஈரானின் நீதித்துறை தலைவர் கூறியுள்ளார். ரமலானை முன்னிட்டு 22 ஆயிரம் பேருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதாக ஈரான் அரசாங்க செய்தி நிறுவனம் IRNA தெரிவித்துள்ளது. வேறு எந்த பத்திரிகையாலும் இதை சரிபார்க்க முடியவில்லை. கடந்த மாத தொடக்கத்தில் ஈரான் தலைவர் அலி கமேனி ஹிஜாப் போராட்டத்தில் கலந்துகொண்ட கைதிகள் உட்பட "பல்லாயிரக்கணக்கான" கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கியதாக அரசு ஊடகம் தெரிவித்தது. "இதுவரை 82,000 பேர் மன்னிக்கப்பட்டுள்ளனர், இதில் 22,000 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆவர்" என்று ஈரானின் நீதித்துறை தலைவர் கூறியுள்ளார்.

    2/2

    ஈரானின் பெரும் புரட்சியான ஹிஜாப் போராட்டங்கள்

    எந்த காலக்கட்டத்தில் மன்னிப்பு வழங்கப்பட்டது அல்லது மக்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதா போன்ற தகவல்கள் குறிப்பிடபடவில்லை. கடந்த செப்டம்பரில் ஈரானிய குர்திஷ் இளம் பெண் ஒருவர், அந்நாட்டு அறநெறிப் போலீஸாரின் காவலில் இருந்தபோது உயிரிழந்ததையடுத்து, ஈரானில் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 1979 புரட்சிக்குப் பின்னர் இஸ்லாமியக் குடியரசின் பெரும் புரட்சியான ஹிஜாப் போராட்டங்களில் லட்சக்கணக்கான ஈரானியர்கள் பங்கு பெற்றுள்ளனர். ஈரானிய பெண்கள் மீது புகுத்தப்படும் ஒடுக்குமுறை, ஆடை சுதந்திரம் இல்லாதது போன்ற விஷயங்களை எதிர்த்து இவர்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டங்களில் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் தூக்கிலிடப்பட்டுள்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ஈரான்
    உலகம்

    ஈரான்

    ஈரான் விஷவாயு பிரச்சனை: மன்னிக்க முடியாத குற்றம் என்கிறார் ஈரான் தலைவர் உலகம்
    பெண்களை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்க பள்ளிகளில் விஷவாயுவை பரப்பியதா ஈரான் உலகம்
    கடற்படை ஏவுகணையை உருவாக்கியுள்ள ஈரான் உலகம்
    சீனா-பிரச்சனைகளுக்கு நடுவே ஈரான் அதிபரை சந்தித்தார் சீன அதிபர் உலகம்

    உலகம்

    கிரீஸிற்க்கு சுற்றுலா செல்கிறீர்களா? நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் இதோ சுற்றுலா
    மின் கழிவுகளை ரோபோடிக் கையாக மாற்றிய கென்ய கண்டுபிடிப்பாளர்கள் உலக செய்திகள்
    இண்டிகோ விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த போதே உயிரிழந்த பயணி பாகிஸ்தான்
    சீனாவில் பெய்த 'புழுக்கள்' மழை: வைரலாகும் வீடியோ சீனா
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023