NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஈரான் ஹிஜாப் போராட்டத்தில் கலந்துகொண்ட 22 ஆயிரம் பேருக்கு மன்னிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரான் ஹிஜாப் போராட்டத்தில் கலந்துகொண்ட 22 ஆயிரம் பேருக்கு மன்னிப்பு
    இதுவரை 82,000 பேர் மன்னிக்கப்பட்டுள்ளனர், இதில் 22,000 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆவர்

    ஈரான் ஹிஜாப் போராட்டத்தில் கலந்துகொண்ட 22 ஆயிரம் பேருக்கு மன்னிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Mar 13, 2023
    06:32 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈரானில் நடந்த சமீபத்திய போராட்டங்களில் கைது செய்யப்பட்ட 22,000 பேருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதாக ஈரானின் நீதித்துறை தலைவர் கூறியுள்ளார்.

    ரமலானை முன்னிட்டு 22 ஆயிரம் பேருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதாக ஈரான் அரசாங்க செய்தி நிறுவனம் IRNA தெரிவித்துள்ளது. வேறு எந்த பத்திரிகையாலும் இதை சரிபார்க்க முடியவில்லை.

    கடந்த மாத தொடக்கத்தில் ஈரான் தலைவர் அலி கமேனி ஹிஜாப் போராட்டத்தில் கலந்துகொண்ட கைதிகள் உட்பட "பல்லாயிரக்கணக்கான" கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கியதாக அரசு ஊடகம் தெரிவித்தது.

    "இதுவரை 82,000 பேர் மன்னிக்கப்பட்டுள்ளனர், இதில் 22,000 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆவர்" என்று ஈரானின் நீதித்துறை தலைவர் கூறியுள்ளார்.

    ஈரான்

    ஈரானின் பெரும் புரட்சியான ஹிஜாப் போராட்டங்கள்

    எந்த காலக்கட்டத்தில் மன்னிப்பு வழங்கப்பட்டது அல்லது மக்கள் மீது குற்றம் சாட்டப்பட்டதா போன்ற தகவல்கள் குறிப்பிடபடவில்லை.

    கடந்த செப்டம்பரில் ஈரானிய குர்திஷ் இளம் பெண் ஒருவர், அந்நாட்டு அறநெறிப் போலீஸாரின் காவலில் இருந்தபோது உயிரிழந்ததையடுத்து, ஈரானில் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    1979 புரட்சிக்குப் பின்னர் இஸ்லாமியக் குடியரசின் பெரும் புரட்சியான ஹிஜாப் போராட்டங்களில் லட்சக்கணக்கான ஈரானியர்கள் பங்கு பெற்றுள்ளனர்.

    ஈரானிய பெண்கள் மீது புகுத்தப்படும் ஒடுக்குமுறை, ஆடை சுதந்திரம் இல்லாதது போன்ற விஷயங்களை எதிர்த்து இவர்கள் போராடி வருகின்றனர்.

    இந்த போராட்டங்களில் பலர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் தூக்கிலிடப்பட்டுள்னர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரான்
    உலகம்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    ஈரான்

    ஈரான் போராட்டம்: பெண்களின் மார்பு, பிறப்புறுப்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு உலகம்
    ஹிஜாப் போராட்டம்: இரண்டாவது தூக்கு தண்டனையை நிறைவேற்றிய ஈரான் உலகம்
    ஹிஜாப் அணியாததற்காக ஆஸ்கர் விருது பெற்ற நடிகைக் கைது! உலகம்
    சீனா-பிரச்சனைகளுக்கு நடுவே ஈரான் அதிபரை சந்தித்தார் சீன அதிபர் சீனா

    உலகம்

    அபாயம்: AI மூலம் போலி LinkedIn சுயவிவரத்தை பயன்படுத்தி நிதியுதவி! செயற்கை நுண்ணறிவு
    டென்னிஸ் தரவரிசையில் நீண்ட காலம் முதலிடம் : ஸ்டெபி கிராஃப் சாதனையை முறியடித்த ஜோகோவிச் விளையாட்டு
    இன்று, மார்ச் 1, பாகுபாடுகள் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது எய்ட்ஸ்
    32 வயது தமிழக இளைஞர், ஆஸ்திரேலியா போலீஸாரால் சுட்டு கொலை ஆஸ்திரேலியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025