ஈரானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?
செய்தி முன்னோட்டம்
தெற்கு ஈரானின் ஃபார்ஸ் மாகாணத்தில் உள்ள கோஞ்ச் நகருக்கு அருகே செவ்வாய்க்கிழமை காலை 10:24 மணியளவில் (உள்ளூர் நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3 அலகுகளாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. கெராஷ் நகருக்கு வடமேற்கே 55 கி.மீ தொலைவில் இதன் மையம் அமைந்திருந்தது. இது மிதமான நிலநடுக்கம் என்பதால், பெரிய அளவிலான கட்டிடச் சேதங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் இல்லை. சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. ஈரான் நில அதிர்வு அதிகம் உள்ள பகுதியில் அமைந்துள்ளதால், இங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது சாதாரணமான ஒன்று என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
BREAKING: Magnitude 4.3 earthquake strikes Gerash in Iran
— Al Jazeera Breaking News (@AJENews) March 3, 2026
🔴 LIVE updates: https://t.co/CLo4FCGqvP pic.twitter.com/6kypIuoNf8
தாக்குதல்
அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல்?
நிலநடுக்கம் ஒருபுறம் இருக்க, ஈரானின் நடன்ஸ் பகுதியில் உள்ள நிலத்தடி யுரேனியம் செறிவூட்டும் மையத்தின் நுழைவாயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 'அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனம்' வெளியிட்டுள்ள வணிக ரீதியான செயற்கைக்கோள் புகைப்படங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. முன்னாள் ஐநா அணுசக்தி ஆய்வாளர் டேவிட் ஆல்பிரைட் இந்த தகவலை தெரிவித்துள்ளார். ஞாயிறு மதியம் முதல் திங்கள் காலை வரையிலான காலப்பகுதியில் இந்தத் தாக்குதல்கள் நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இருப்பினும், இந்தத் தாக்குதல்களை அமெரிக்கா நடத்தியதா அல்லது இஸ்ரேல் நடத்தியதா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. அதேசமயம், இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கும் இந்த ராணுவ நடவடிக்கைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.