NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 26 வயது இந்திய பிஹெச்டி மாணவர் அமெரிக்காவில் காரில் சுட்டுக்கொலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    26 வயது இந்திய பிஹெச்டி மாணவர் அமெரிக்காவில் காரில் சுட்டுக்கொலை
    சுட்டுக் கொல்லப்பட்ட ஆதித்யா அட்லாகா.

    26 வயது இந்திய பிஹெச்டி மாணவர் அமெரிக்காவில் காரில் சுட்டுக்கொலை

    எழுதியவர் Srinath r
    Nov 24, 2023
    12:11 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவின் ஒகையோ மாகாணத்தில், முனைவர் பட்டம் படித்து வந்த 26 வயது இந்திய மாணவர் காரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தை மருத்துவ பல்கலைக்கழகம் "திடீர், சோகம் மற்றும் அர்த்தமில்லாதது" எனக் கூறியுள்ளது.

    மருத்துவ பல்கலைக்கழகம் வெளியிட்டதாக டபிள்யுஎக்ஸ்ஐஎக்ஸ்(WXIX- TV) தொலைக்காட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    ஆதித்யா அட்லாகா, சின்சினாட்டி பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் மூலக்கூறு மற்றும் வளர்ச்சி உயிரியல் திட்டத்தில், நான்காம் ஆண்டு முனைவர் பட்ட மாணவராக படித்து வந்ததாக கூறப்பட்டுள்ளது.

    ஹாமில்டன் கவுண்டி கரோனர் அலுவலகத்தின் படி, ஆதித்யா அட்லாகா இந்த மாத தொடக்கத்தில் யூசி மருத்துவ மையத்தில் இறந்தார்.

    2nd card

    துப்பாக்கிச் சூடு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை

    கடந்த நவம்பர் 9 ஆம் தேதி வெஸ்டர்ன் ஹில்ஸ் வையாடக்ட் பகுதியில், சுவற்றில் மோதிய காரில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவரின் உடலை அதிகாரிகள் கண்டறிந்ததாக, சின்சினாட்டி போலீஸ் லெப்டினன்ட் ஜொனாதன் கன்னிங்காம் தெரிவித்தார்.

    துப்பாக்கி சூடுகளை கண்டறியும் சேவையான ஷாட்ஸ்பாட்டர், அந்த பகுதியில் காலை 6:20 மணி அளவில், துப்பாக்கி சூடு நடைபெற்றதாக கூறியதாக காவல்துறை கூறுகின்றனர்.

    அந்த வழியாக சென்ற ஓட்டுநர்கள், 911க்கு தொடர்பு கொண்டு காரில் ஒருவர் சுடப்பட்டு நிலையில் இருப்பதாக தகவல் தெரிவித்ததாக கன்னிங்காம் கூறினார்.

    யூசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஆதித்யா அட்லாகா, இரண்டு நாள் சிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்தார்.

    இச்சம்பவத்தில், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    ௩ர்ட கார்டு

    யார் இந்த ஆதித்யா அட்லாகா?

    டெல்லி பல்கலைக்கழகத்தின் ராம்ஜாஸ் கல்லூரியில் விலங்கியல் படித்த ஆதித்யா அட்லாகா, டெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் 2020 ஆம் ஆண்டில் உடலியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

    இந்நிலையில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள, அமெரிக்க சென்றிருந்த நிலையில் அங்கு சுட்டுக் கொல்லப்பட்டார்.

    "அவர் மிகவும் நேசிக்கப்பட்டார், மிகவும் அன்பானவர் மற்றும் நகைச்சுவையானவர், புத்திசாலி மற்றும் கூர்மையானவர்" என அவர் பயின்ற பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    துப்பாக்கி சூடு
    இந்தியா
    காவல்துறை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    அமெரிக்கா

    புதிய எலக்ட்ரிக் டிரக்கை அறிமுகம் செய்தது ராம் நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்கள்
    காசாவில் தாக்குதலை தீவிரப்படுத்திய இஸ்ரேல்-ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு நோக்கி வெளியேறினர் இஸ்ரேல்
    இந்திய மாணவர் அமெரிக்காவில் கொலை - கொலையாளி கூறிய விசித்திர காரணம் என்ன? கொலை
    காசாவில் தினசரி நான்கு மணி நேர போர் இடைநிறுத்தத்தைத் இஸ்ரேல் தொடங்கும்- அமெரிக்கா அறிவிப்பு காசா

    துப்பாக்கி சூடு

    பிபா மகளிர் உலகக்கோப்பை : கால்பந்து அணிகள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகே துப்பாக்கிச் சூடு கால்பந்து
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிளால் 4 பேர் சுட்டுக் கொலை ரயில்கள்
    சென்னையில் பதற்றம் - என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட 2 ரவுடிகள்  சென்னை
    ஜெய்ப்பூர்-மும்பை ரயிலில் நடந்த துப்பாக்கி சூடு: உண்மையில் என்ன நடந்தது? மகாராஷ்டிரா

    இந்தியா

    உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி பெற பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து  ஒருநாள் உலகக்கோப்பை
    அதிக ரேஞ்சுடன் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் டாப் 5 எலெக்ட்ரிக் கார்கள் எலக்ட்ரிக் கார்
    இந்தியாவில் விற்பனையாகி வரும் சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் ஸ்மார்ட்போன்
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா

    காவல்துறை

    சென்னை பாரிமுனை கோயிலில் பெட்ரோல் குண்டுவீச்சு; குற்றவாளி கைது  கைது
    லட்சக்கணக்கில் மதிப்புடைய புடவைகளை திருடி சென்ற பெண்கள் - விஜயவாடா விரையும் காவல்துறை  கைது
    4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர் - ராஜஸ்தானில் அதிர்ச்சி ராஜஸ்தான்
    திரையரங்கில் அமைச்சர் மகன் ரமேஷ் தாக்கப்பட்ட விவகாரம் - போலீசார் விசாரணை சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025