அமெரிக்காவின் பழமைவாய்ந்த சட்டப்பத்திரிக்கை தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நியமனம்
அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் சட்டப்பள்ளியின் ஒரு பகுதியாக 1887ம் ஆண்டு துவங்கப்பட்டது ஹார்வர்ட் சட்டப் பத்திரிக்கை. இது சட்டம் பயிலும் மாணவர்களுக்கு சட்டம் சார்ந்த தகவல்களை அளித்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த சட்ட பத்திரிக்கை மிக பிரபலமானது. இந்த பத்திரிக்கையின் தலைமை பதவி நபருக்கான தேடல் அண்மையில் நடந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த பதவிக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அப்சரா அய்யர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சட்ட பத்திரிக்கை துவங்கி 136 ஆண்டுகால வரலாற்றில் இந்திய பெண் ஒருவர், அதன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.
இந்திய வம்சாவளி பெண்ணிற்கு அமெரிக்கா அளித்துள்ள மிக பெரிய கவுரவம்
சட்டப்பத்திரிக்கை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அப்சரா அய்யர், அமெரிக்காவில் உள்ள சட்ட கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். தொல்லியல் மற்றும் பழங்குடி சமூகம் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.ஃபில். படித்துள்ளார் என்று தெரிகிறது. வல்லரசு நாடான அமெரிக்காவின் பழமைவாய்ந்த ஹார்வர்ட் சட்டப் பத்திரிக்கை தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அப்சரா அய்யருக்கு வயது 29 ஆகும். அமெரிக்க பிரபல சட்டப்பத்திரிக்கை தலைவராக பொறுப்பேற்கவுள்ள அப்சராவிற்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இந்திய வம்சாவளியான இவருக்கு அமெரிக்கா அளித்துள்ள மிக பெரிய கவுரவம் இது என்றும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.