
ஆஸ்திரேலிய காவல்துறையினரால் தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற இந்திய வம்சாவளி நபர்
செய்தி முன்னோட்டம்
அடிலெய்டின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் காவல்துறையினருடன் ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து, 42 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கௌரவ் குந்தி, தற்போது ஆஸ்திரேலியாவின் ராயல் அடிலெய்டு மருத்துவமனையில் உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
கௌரவும், அவரது மனைவி அம்ரித்பால் கவுரும், பெய்னேஹாம் சாலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.
தனது கணவர் குடிபோதையில் சத்தமாக பேசுவதாக கவுர் தெளிவுபடுத்திய போதிலும், அந்த வழியாகச் சென்ற ஒரு ரோந்து போலீசார், அவர்களின் வாதத்தை குடும்ப வன்முறை என்று தவறாகக் கருதி இடைமறித்துள்ளார்.
கைது விவரங்கள்
கௌரவ், தான் கைது செய்யப்படுவதை எதிர்த்ததாக காவல்துறை கூறுகிறது
கௌரவ், சுயநினைவை இழப்பதற்கு முன்பு கைது செய்வதை "வன்முறையாக எதிர்த்தார்" என்று போலீசார் 9நியூஸிடம் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை ஆரம்பத்தில் படம் பிடித்துக் கொண்டிருந்த அவரது மனைவி கவுர், ஒரு அதிகாரி தனது கணவரின் கழுத்தில் முழங்காலில் குத்தியபோது தான் பீதியடைந்ததாகக் கூறினார்.
அதிகாரிகள், கௌரவின் தலையை ஒரு போலீஸ் காரின் மீதும் சாலையின் மீதும் மோதியதால் பயந்து மொபைலில் படம்பிடிப்பதை நிறுத்தியதாக அவர் கூறினார்.
மயக்கடைந்த கௌரவ் ராயல் அடிலெய்டு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார், அங்கு அவரது மூளை மற்றும் கழுத்து நரம்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விசாரணை
கௌரவின் நிலைமை கவலைக்கிடம்; போலீஸ் விசாரணை
"அவரது மூளை முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒருவேளை அவரது மூளை வேலை செய்தால் அவர் விழித்துக் கொள்வார், அல்லது ஒருவேளை அவர் விழித்துக் கொள்ளாமல் போகலாம்" என்று கவுர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து தெற்கு ஆஸ்திரேலிய காவல்துறை உள் விசாரணையைத் தொடங்கியுள்ளது மற்றும் உடல்-கேமரா காட்சிகளை மதிப்பாய்வு செய்து வருகிறது.
முதற்கட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தனது அதிகாரிகள் சட்டப்பூர்வமாக செயல்பட்டதாக தாம் நம்புவதாகவும், ஆனால் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொறுப்பு உதவி ஆணையர் ஜான் டிகாண்டியா கூறினார்.
குடும்பத்தினரின் வேண்டுகோள்
அதிகாரிகளின் செயல்களை ஆதரிக்கும் காவல் ஆணையர்
"நான் பார்த்த அந்த ஆதாரத்திலிருந்து, அந்த Body-cam வீடியோவிலிருந்து நான் அதைச் சொல்ல முடியும். ஆனால் அது ஒரு பகுதி மட்டுமே, ஆனால் சம்மந்தப்பட்டுள்ளது ஒரே ஒரு போலீஸ் அதிகாரி மட்டுமே," என்று அவர் கூறினார்.
தெற்கு ஆஸ்திரேலிய காவல்துறை ஆணையர் கிராண்ட் ஸ்டீவன்ஸும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பாதுகாத்து, body-cam காட்சிகளை மதிப்பாய்வு செய்த பிறகு அவர்கள் தங்கள் பயிற்சிக்கு ஏற்ப செயல்பட்டதாகக் கூறினார்.
எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.