NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஆஸ்திரேலிய காவல்துறையினரால் தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற இந்திய வம்சாவளி நபர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆஸ்திரேலிய காவல்துறையினரால் தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற இந்திய வம்சாவளி நபர்
    ஆஸ்திரேலிய காவல்துறையினரால் தாக்கப்பட்ட இந்திய வம்சாவளி நபர்

    ஆஸ்திரேலிய காவல்துறையினரால் தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற இந்திய வம்சாவளி நபர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 03, 2025
    03:29 pm

    செய்தி முன்னோட்டம்

    அடிலெய்டின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் காவல்துறையினருடன் ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து, 42 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கௌரவ் குந்தி, தற்போது ஆஸ்திரேலியாவின் ராயல் அடிலெய்டு மருத்துவமனையில் உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கௌரவும், அவரது மனைவி அம்ரித்பால் கவுரும், பெய்னேஹாம் சாலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

    தனது கணவர் குடிபோதையில் சத்தமாக பேசுவதாக கவுர் தெளிவுபடுத்திய போதிலும், அந்த வழியாகச் சென்ற ஒரு ரோந்து போலீசார், அவர்களின் வாதத்தை குடும்ப வன்முறை என்று தவறாகக் கருதி இடைமறித்துள்ளார்.

    கைது விவரங்கள்

    கௌரவ், தான் கைது செய்யப்படுவதை எதிர்த்ததாக காவல்துறை கூறுகிறது

    கௌரவ், சுயநினைவை இழப்பதற்கு முன்பு கைது செய்வதை "வன்முறையாக எதிர்த்தார்" என்று போலீசார் 9நியூஸிடம் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தை ஆரம்பத்தில் படம் பிடித்துக் கொண்டிருந்த அவரது மனைவி கவுர், ஒரு அதிகாரி தனது கணவரின் கழுத்தில் முழங்காலில் குத்தியபோது தான் பீதியடைந்ததாகக் கூறினார்.

    அதிகாரிகள், கௌரவின் தலையை ஒரு போலீஸ் காரின் மீதும் சாலையின் மீதும் மோதியதால் பயந்து மொபைலில் படம்பிடிப்பதை நிறுத்தியதாக அவர் கூறினார்.

    மயக்கடைந்த கௌரவ் ராயல் அடிலெய்டு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார், அங்கு அவரது மூளை மற்றும் கழுத்து நரம்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    விசாரணை

    கௌரவின் நிலைமை கவலைக்கிடம்; போலீஸ் விசாரணை 

    "அவரது மூளை முற்றிலுமாக சேதமடைந்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒருவேளை அவரது மூளை வேலை செய்தால் அவர் விழித்துக் கொள்வார், அல்லது ஒருவேளை அவர் விழித்துக் கொள்ளாமல் போகலாம்" என்று கவுர் கூறினார்.

    இந்த சம்பவம் குறித்து தெற்கு ஆஸ்திரேலிய காவல்துறை உள் விசாரணையைத் தொடங்கியுள்ளது மற்றும் உடல்-கேமரா காட்சிகளை மதிப்பாய்வு செய்து வருகிறது.

    முதற்கட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தனது அதிகாரிகள் சட்டப்பூர்வமாக செயல்பட்டதாக தாம் நம்புவதாகவும், ஆனால் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொறுப்பு உதவி ஆணையர் ஜான் டிகாண்டியா கூறினார்.

    குடும்பத்தினரின் வேண்டுகோள்

    அதிகாரிகளின் செயல்களை ஆதரிக்கும் காவல் ஆணையர்

    "நான் பார்த்த அந்த ஆதாரத்திலிருந்து, அந்த Body-cam வீடியோவிலிருந்து நான் அதைச் சொல்ல முடியும். ஆனால் அது ஒரு பகுதி மட்டுமே, ஆனால் சம்மந்தப்பட்டுள்ளது ஒரே ஒரு போலீஸ் அதிகாரி மட்டுமே," என்று அவர் கூறினார்.

    தெற்கு ஆஸ்திரேலிய காவல்துறை ஆணையர் கிராண்ட் ஸ்டீவன்ஸும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பாதுகாத்து, body-cam காட்சிகளை மதிப்பாய்வு செய்த பிறகு அவர்கள் தங்கள் பயிற்சிக்கு ஏற்ப செயல்பட்டதாகக் கூறினார்.

    எந்த குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஆஸ்திரேலியா
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    ஆபரேஷன் சிந்தூர் தங்கள் நாட்டில் குறிப்பிடப்படாத மேலும் பல தளங்களைத் தாக்கியதாக கதறும் பாகிஸ்தான் பாகிஸ்தான்
    'லியோ' படத்தின் சம்பளபாக்கி ₹35 லட்சம் தவறாக பயன்படுத்தியதாக தினேஷ் மாஸ்டர் மீது புகார் நடன இயக்குனர்
    தவறு செய்தால் மட்டுமே மன்னிப்பு..தவறாக புரிந்து கொண்டதற்கு எதற்கு மன்னிப்பு: தக் லைஃப் காட்டிய கமல் கமல்ஹாசன்
    ஆஸ்திரேலிய காவல்துறையினரால் தாக்கியதில் கோமா நிலைக்கு சென்ற இந்திய வம்சாவளி நபர் ஆஸ்திரேலியா

    ஆஸ்திரேலியா

    ஸ்போர்ட்ஸ் ரவுண்டு அப்: இன்றைய ட்ரெண்டிங் விளையாட்டு செய்திகள் விளையாட்டு
    ஆஸ்திரேலியாவில் கொலை செய்யப்பட்ட ஹைதராபாத் பெண்: அவரது கணவர் குழந்தையுடன் இந்தியாவுக்கு தப்பி ஓட்டம்  ஹைதராபாத்
    5 பேர் கத்திக்குத்தால் பலி, ஒருவர் சுட்டுக் கொலை; சிட்னி மாலில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்  உலகம்
    சிட்னியில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்; தேவாலயத்தில் கத்தி குத்து, பலர் காயம் உலகம்

    காவல்துறை

    போக்குவரத்து விதிமீறலுக்கு அதிக அபராதம் போட்டிருக்கா? இதை செய்தால் அபராதம் குறையலாம் போக்குவரத்து விதிகள்
    லஞ்சமாக உருளைக் கிழங்கை கேட்ட உத்தரபிரதேச சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் உத்தரப்பிரதேசம்
    காவல்துறையில் பெண்களுக்கு 20% இட ஒதுக்கீடு; உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு உத்தரப்பிரதேசம்
    கொல்கத்தா மருத்துவர் மரணத்தில் பெற்றோர்கள் தவறாக வழிநடத்தப்பட்டதாக CBI அறிக்கை  கொல்கத்தா

    காவல்துறை

    அரிதிலும் அரிதான இரத்த வகை; தாயின் உயிரைக் காப்பாற்றிய காவல்துறை; மகாராஷ்டிராவில் நெகிழ்ச்சி மகாராஷ்டிரா
    சென்னையில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்; காவல்துறை பலத்த பாதுகாப்பு விநாயகர் சதுர்த்தி
    சென்னையில் அதிகரிக்கும் சைபர் மோசடி; சென்னை காவல் ஆணையர் முக்கிய அறிவுறுத்தல் சென்னை
    மும்பையில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு; மத்திய உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு மும்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025