Page Loader
தாய்லாந்து நிலநடுக்கத்தால் பாதிப்பா? இந்தியர்களுக்கு உதவ அவசர உதவி எண்கள் தூதராகத்தால் வெளியீடு
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்தியர்களுக்கு உதவ அவசர உதவி எண்கள் தூதராகத்தால் வெளியீடு

தாய்லாந்து நிலநடுக்கத்தால் பாதிப்பா? இந்தியர்களுக்கு உதவ அவசர உதவி எண்கள் தூதராகத்தால் வெளியீடு

எழுதியவர் Sekar Chinnappan
Mar 28, 2025
08:13 pm

செய்தி முன்னோட்டம்

வெள்ளிக்கிழமை (மார்ச் 28) தாய்லாந்து மற்றும் மியான்மரை 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியது. இதனால் பாங்காக்கில் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டது மற்றும் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்காக அவசர உதவி எண்ணை வெளியிட்டுள்ளது. தாய்லாந்து அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், இதுவரை இந்திய குடிமக்கள் சம்பந்தப்பட்ட எந்த சம்பவங்களும் பதிவாகவில்லை என்றும் தூதரகம் உறுதியளித்தது. எந்தவொரு அவசரத் தேவை ஏற்பட்டாலும் தாய்லாந்தில் உள்ள இந்தியர்கள் +66 618819218 என்ற அவசர எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு தூதரகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம்

கடுமையான சேதத்தை ஏற்படுத்திய நிலநடுக்கம்

நிலநடுக்கம் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மியான்மரில், கட்டுமானத்தில் உள்ள ஒரு உயரமான கட்டிடம் இடிந்து விழுந்து டஜன் கணக்கான மக்கள் சிக்கிக் கொண்டனர். மியான்மரின் இராணுவ அரசாங்கம் தலைநகர் நேபிடாவ் மற்றும் மண்டலே உட்பட ஆறு பிராந்தியங்களில் அவசரகால நிலையை அறிவித்துள்ளது. இருப்பினும், நாடு தொடர்ந்து உள்நாட்டு அமைதியின்மையை எதிர்கொள்வதால், நிவாரணப் பணிகள் தளவாட சவால்களை எதிர்கொள்கின்றன. மின்கம்பிகள் அறுந்து விழுந்ததாலும் உள்கட்டமைப்பு சேதம் ஏற்பட்டதாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அடைவதில் சிரமங்கள் இருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. மண்டலே, சகாயிங் மற்றும் தெற்கு ஷான் மாநிலம் ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடங்கும். தாய்லாந்து மற்றும் மியான்மர் ஆகிய இரு நாடுகளிலும் உள்ள அதிகாரிகள் பேரழிவின் முழு தாக்கத்தையும் தொடர்ந்து மதிப்பிடுகின்றனர்.