NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / கனடா நாட்டு தேர்தலில் இந்தியா தலையிட்டதாக கனேடிய உளவுத்துறை குற்றச்சாட்டு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கனடா நாட்டு தேர்தலில் இந்தியா தலையிட்டதாக கனேடிய உளவுத்துறை குற்றச்சாட்டு 

    கனடா நாட்டு தேர்தலில் இந்தியா தலையிட்டதாக கனேடிய உளவுத்துறை குற்றச்சாட்டு 

    எழுதியவர் Sindhuja SM
    Feb 03, 2024
    11:09 am

    செய்தி முன்னோட்டம்

    கனடா நாட்டின் தேர்தலில் இந்தியா தலையிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கனடாவின் மிக உயர்ந்த வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை, சமீபத்திய உளவுத்துறை அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

    இந்தியாவை "வெளிநாட்டு அச்சுறுத்தல்" என்று விவரித்திருக்கும் அந்த அமைப்பு, "கனடாவின் வலுவான ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாக்க அரசாங்கம் மேலும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

    கனேடிய ஊடகமான குளோபல் நியூஸ், இந்த ரகசிய ஆவணத்தை வெளியிட்டுள்ளது.

    அப்படி கனேடிய அரசாங்கம் இந்த விஷயத்தில் தலையிடவில்லை என்றால் இந்தியாவின் தலையீடு மோசமடையும் என்றும் அந்த உளவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    கனடா

    இது குறித்து விசாரணை நடத்த உத்தரவு 

    கனடா நாட்டு தேர்தலில் தலையிட்டதாக இந்தியா மீது குற்றம்சாட்டப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    கனேடிய அரசியலில் தலையிட்டதாக ஏற்கனவே சீனா மீதும் ரஷ்யா மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்தியா மீதும் அந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    பிப்ரவரி 24, 2023 தேதியிட்ட, 'வெளிநாட்டு தலையீடு குறித்த ஜனநாயக நிறுவனங்களின் அமைச்சருக்கு விளக்கமளித்தல்' என்ற தலைப்பிலான உளவுத்துறை ஆவணத்தில் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

    அந்த ஆவணத்தில் சீனாவின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்நாட்டு உளவுத்துறை சீனாவை மிகப்பெரும் அச்சுறுத்தல் என்று கூறியுள்ளது.

    மேலும், புதிதாக வெளியிடப்பட்ட உளவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனடா
    சீனா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    கனடா

    காலிஸ்தான் பயங்கரவாதியின் மிரட்டலை அடுத்து, விமானங்களுக்கு பாதுகாப்பு அதிகரித்த கனடா ஏர் இந்தியா
    'எப்போதும் சட்டத்தின் பக்கம் நிற்பேன்': மீண்டும் இந்தியா மீது குற்றம்சாட்டினார் கனேடிய பிரதமர் ட்ரூடோ  இந்தியா
    கனடாவில் தீபாவளி கொண்டாட்டத்தை சீர்குலைத்த காலிஸ்தானிகள் தீபாவளி
    காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதாக குற்றம் சாட்டிய ட்ரூடோ, பதிலளித்த நெதன்யாகு காசா

    சீனா

    சீன காய்ச்சல் எதிரொலி: மருத்துவமனைகளின் தயார்நிலையை உறுதி செய்ய மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு சுகாதாரத் துறை
    டிசம்பர் 1 முதல் இந்தியர்களுக்கு இலவச விசாவை அறிவித்தது மலேசியா மலேசியா
    டிசம்பரில் 5-ல் அறிமுகமாகும் ஒன்பிளஸின் ஃப்ளாக்ஷிப் 'ஒன்பிளஸ் 12' ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ்
    சீனாவில் அதிகரிக்கும் சுவாச நோய்த்தொற்றுகள்: உஷார் நிலையில் இந்திய மாநிலங்கள்  தமிழ்நாடு

    உலகம்

    வீடியோ: சிறையில் இருந்து தப்பித்த கைதிகள் துப்பாக்கிகளுடன் ஈக்வடார் டிவி ஸ்டூடியோவுக்குள் நுழைந்ததால் பரபரப்பு ஈக்வடார்
    மாலத்தீவுக்கான முன்பதிவுகளை நிறுத்திய இந்திய நிறுவனத்திடம் மாலத்தீவு சுற்றுலா அமைப்பு வேண்டுகோள் இந்தியா
    வீடியோ: யாருக்கும் தெரியாமல் புரூக்ளின் ஜெப ஆலயத்திற்கு கீழ் இரகசிய சுரங்கப்பாதை தோண்டிய கூட்டம்  அமெரிக்கா
    இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்  இங்கிலாந்து

    உலக செய்திகள்

    அமெரிக்காவின் ஹூதி எதிர்ப்புப் போரில் இணைந்தது இலங்கை  அமெரிக்கா
    'போயிங் 737 MAX 9' விமானங்களில் உள்ள கதவுகளின் போல்ட்கள் லூசாக இருந்ததாக சோதனையில் தகவல்  அமெரிக்கா
    நாய் இறைச்சிக்கு நிரந்தர தடை விதிக்கும் மசோதாவை நிறைவேற்றியது தென் கொரியா தென் கொரியா
    இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல் சீனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025