NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / மனிதாபிமான நடவடிக்கை; மாலத்தீவுக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட் ஆதரவை வழங்கியது இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை
    மனிதாபிமான நடவடிக்கை; மாலத்தீவுக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட் ஆதரவை வழங்கியது இந்தியா
    மாலத்தீவுக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட் ஆதரவை வழங்கியது இந்தியா

    மனிதாபிமான நடவடிக்கை; மாலத்தீவுக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட் ஆதரவை வழங்கியது இந்தியா

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 20, 2024
    11:36 am

    செய்தி முன்னோட்டம்

    ஒரு மனிதாபிமான நடவடிக்கையாக, மாலத்தீவு அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், 50 மில்லியன் அமெரிக்க டாலர் கருவூல மசோதா கடனை மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக இந்தியா வியாழக்கிழமை (செப்டம்பர் 19) தெரிவித்துள்ளது.

    "மாலத்தீவு அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், எஸ்பிஐ மாலத்தீவு நிதியமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 50 மில்லியன் அமெரிக்க டாலர் அரசாங்க கருவூல செலவுகளுக்கு இன்னும் ஒரு வருட காலத்திற்கு சந்தா செலுத்தியுள்ளது.

    முந்தைய சந்தாவின் முதிர்வு தேதி, செப்டம்பர் 19, 2024 ஆகும்." என்று மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

    முந்தைய அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி கருவூல மசோதாவை எஸ்பிஐ வாங்கியது. எஸ்பிஐ இதுவரை மொத்தம் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை இதுபோல் வாங்கியுள்ளது.

    கருவூல பில்கள்

    ஒவ்வொரு ஆண்டும் கருவூல பில்களை நீட்டிக்கும் இந்திய அரசு

    கருவூல பில்கள் முன்பு இந்திய அரசாங்கத்தால் செலுத்தப்படும் வட்டியுடன் ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வந்துள்ளன.

    எனினும், இந்தியாவே வெளியேறு என்ற கோஷத்தை முன்வைத்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி முகமது முய்ஸுவின் அரசாங்கம் இந்த ஆண்டு ஜனவரியில் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை திருப்பிச் செலுத்தியது.

    இதைத் தொடர்ந்து, மீதமுள்ள 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு இந்திய அரசிடம் மாலத்தீவு கோரிக்கை விடுத்திருந்தது.

    இதனடிப்படையில் மே மாதத்தில் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க இந்தியா ஒப்புக்கொண்டது மற்றும் தற்போது மற்றொரு 50 மில்லியன் டாலர்களுக்கான காலக்கெடுவையும் நீட்டித்துள்ளது.

    இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் நன்றி தெரிவித்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    மூசா ஜமீரின் எக்ஸ் பதிவு

    Sincere gratitude to External Affairs Minister @DrSJaishankar and the Government of #India for extending crucial budgetary support to the Maldives with the rollover of USD 50 million Treasury Bill.

    This generous gesture reflects the enduring bonds of friendship between…

    — Moosa Zameer (@MoosaZameer) September 19, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாலத்தீவு
    இந்தியா
    பட்ஜெட்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மாலத்தீவு

    பிரதமர் மோடி குறித்து தரக்குறைவாக பேசிய மாலத்தீவு அமைச்சர்கள்: அந்நாட்டு தூதருக்கு இந்தியா சம்மன்  இந்தியா
    பிரதமர் மோடியின் பயணத்திற்கு பிறகு லட்சத்தீவுக்கான தேடல் 3,400% உயர்வு இந்தியா
    'இந்தியாவை எதிர்ப்பது மாலத்தீவு அரசாங்கத்தின் குறுகிய பார்வையை காட்டுகிறது': மாலத்தீவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் லட்சத்தீவு
    இந்தியா-மாலத்தீவு பிரச்சனைக்கு மத்தியில் அதிக சுற்றுலா பயணிகளை அனுப்புமாறு சீனாவிடம் மாலத்தீவு அதிபர் வலியுறுத்தல் சீனா

    இந்தியா

    91 ஆண்டு கால இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறை; இப்படியொரு சாதனையா! டெஸ்ட் கிரிக்கெட்
    மிஷன் மௌசம்: இந்தியாவில் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த ரூ.2,000 கோடியில் புதிய திட்டம் வானிலை அறிக்கை
    இந்திய கடற்படையுடன் இணைந்து VLSRSAM ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது டிஆர்டிஓ டிஆர்டிஓ
    திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரவிந்த் கெஜ்ரிவால்

    பட்ஜெட்

    விக்கிரவாண்டி தேர்தலுக்காக முன்கூட்டியே முடிக்கப்படும் சட்டசபை கூட்டம் சட்டப்பேரவை
    பட்ஜெட் 2024-இல் தேசிய ஜவுளி நிதி அறிவிக்கப்படலாம்; ஏற்றுமதி வரி விலக்கு அதிகரிக்க வாய்ப்பு வணிகம்
    வரி விலக்கு கட்டாயமா? பட்ஜெட் 2024க்கு ஏன் நிலையான விலக்கு உயர்வு தேவை நிதியமைச்சர்
    ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது மத்திய பட்ஜெட் 2024 மத்திய அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025