
மனிதாபிமான நடவடிக்கை; மாலத்தீவுக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட் ஆதரவை வழங்கியது இந்தியா
செய்தி முன்னோட்டம்
ஒரு மனிதாபிமான நடவடிக்கையாக, மாலத்தீவு அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், 50 மில்லியன் அமெரிக்க டாலர் கருவூல மசோதா கடனை மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக இந்தியா வியாழக்கிழமை (செப்டம்பர் 19) தெரிவித்துள்ளது.
"மாலத்தீவு அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், எஸ்பிஐ மாலத்தீவு நிதியமைச்சகத்தால் வெளியிடப்பட்ட 50 மில்லியன் அமெரிக்க டாலர் அரசாங்க கருவூல செலவுகளுக்கு இன்னும் ஒரு வருட காலத்திற்கு சந்தா செலுத்தியுள்ளது.
முந்தைய சந்தாவின் முதிர்வு தேதி, செப்டம்பர் 19, 2024 ஆகும்." என்று மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
முந்தைய அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின்படி கருவூல மசோதாவை எஸ்பிஐ வாங்கியது. எஸ்பிஐ இதுவரை மொத்தம் 200 மில்லியன் அமெரிக்க டாலர்களை இதுபோல் வாங்கியுள்ளது.
கருவூல பில்கள்
ஒவ்வொரு ஆண்டும் கருவூல பில்களை நீட்டிக்கும் இந்திய அரசு
கருவூல பில்கள் முன்பு இந்திய அரசாங்கத்தால் செலுத்தப்படும் வட்டியுடன் ஆண்டுதோறும் நீட்டிக்கப்பட்டு வந்துள்ளன.
எனினும், இந்தியாவே வெளியேறு என்ற கோஷத்தை முன்வைத்து ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி முகமது முய்ஸுவின் அரசாங்கம் இந்த ஆண்டு ஜனவரியில் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை திருப்பிச் செலுத்தியது.
இதைத் தொடர்ந்து, மீதமுள்ள 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு இந்திய அரசிடம் மாலத்தீவு கோரிக்கை விடுத்திருந்தது.
இதனடிப்படையில் மே மாதத்தில் 50 மில்லியன் அமெரிக்க டாலர்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க இந்தியா ஒப்புக்கொண்டது மற்றும் தற்போது மற்றொரு 50 மில்லியன் டாலர்களுக்கான காலக்கெடுவையும் நீட்டித்துள்ளது.
இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் நன்றி தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
மூசா ஜமீரின் எக்ஸ் பதிவு
Sincere gratitude to External Affairs Minister @DrSJaishankar and the Government of #India for extending crucial budgetary support to the Maldives with the rollover of USD 50 million Treasury Bill.
— Moosa Zameer (@MoosaZameer) September 19, 2024
This generous gesture reflects the enduring bonds of friendship between…