ஹமாஸ் தளபதி இஸ்ரேலின் வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டார்
கிப்புட்ஸ் நிரிம் கிராமத்தில் நடைபெற்ற படுகொலைக்கு காரணமான ஹமாஸ் தளபதி பிள்ளல் அல்- கெதிர, வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் ராணுவ படையினர் தெரிவித்துள்ளனர். வடக்கு காஸாவில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் பிள்ளல், இஸ்ரேல் ராணுவத்தினரால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கொல்லப்பட்ட பிள்ளல் நுக்பா படையின் தளபதியாவார். நுக்பா படை ஹமாஸின் சிறப்புப் படைப் பிரிவான "இஸ் அட்-தின் அல்-கஸ்ஸாம்" படைப்பிரிவின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்படை கமாண்டோ பிரிவாகும். இஸ்ரேல் படையினர் ஆலிவ், கான் யூனிஸ் மற்றும் மேற்கு ஜபாலியா உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஹமாஸ் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி, ராணுவ டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள், ஏவுத்தளங்கள் உள்ளிட்டவற்றை அழித்தது.
கிப்புட்ஸ் நிரிம் படுகொலை
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று பாலஸ்தீனிய ஆயுத குழுவான ஹமாஸ் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இன்று தாக்குதலுக்கு பின், ஹமாஸ் ஆயுத குழுவினர் எல்லை வழியாக இஸ்ரேலுக்குள் வந்து தாக்குதலை தொடுத்தனர். அந்த தாக்குதலில், காஸா எல்லைக்கு ஒரு மையில் தூரத்திற்கும் குறைவாக இருந்த கிப்புட்ஸ் நிரிம் கிராமத்தில் படுகொலைகளை நிகழ்த்தினார். இஸ்ரேல் அதிகாரிகள் அளித்த தகவலில் இந்த கிராமத்தில் பலர் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் தளபதி பிள்ளல், இஸ்ரேல் விமானப்படையால் கொள்ளப்பட்டுள்ளார். காஸா எல்லையில் வாழும் நிரிம் மக்கள், தொடர்ந்து ஹமாஸ் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.