NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 14 மணிநேரத்தில் 800 நிலநடுக்கங்கள்: அவசரநிலையை அறிவித்தது ஐஸ்லாந்து 
    அடுத்த செய்திக் கட்டுரை
    14 மணிநேரத்தில் 800 நிலநடுக்கங்கள்: அவசரநிலையை அறிவித்தது ஐஸ்லாந்து 
    அந்த பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் முதல் சுமார் 24,000 அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

    14 மணிநேரத்தில் 800 நிலநடுக்கங்கள்: அவசரநிலையை அறிவித்தது ஐஸ்லாந்து 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 11, 2023
    05:15 pm

    செய்தி முன்னோட்டம்

    ஐஸ்லாந்தின் தென்மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் தொடர்ச்சியாக சிறு/நடுத்தர பூகம்பங்கள் ஏற்பட்டதை அடுத்து ஐஸ்லாந்து இன்று 'அவசரகால நிலையை' அறிவித்தது.

    இந்த நில அதிர்வுகளால் நாட்டில் எரிமலை வெடிப்புகளும் ஏற்படலாம் என்று ஐஸ்லாந்து அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிக்கையில் எச்சரித்துள்ளனர்.

    "தேசிய காவல்துறைத் தலைவர் ... கிரிண்டாவிக்க்கு வடக்கே சுந்த்ஞ்சுகாகிகரில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக சிவில் பாதுகாப்புக்கான அவசர நிலையைப் பிரகடனம் செய்கிறார்" என்று ஐஸ்லாந்தின் குடிமைப் பாதுகாப்பு மற்றும் அவசரநிலை மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது.

    "நிலநடுக்கங்கள் ஏற்கனவே ஏற்பட்டதை விட பெரியதாக ஏற்படலாம். இந்த தொடர் நிகழ்வுகள் எரிமலை வெடிப்புக்கு வழிவகுக்கும்" என்று நிர்வாகம் அந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ளது.

    ட்ஜகிவ்

    அக்டோபர்  மாதம் முதல் சுமார் 24,000 அதிர்வுகள் பதிவாகியுள்ளன

    ஐஸ்லாந்தில் எரிமலை வெடிப்புகள் சில நாட்களில் நிகழலாம் என்று ஐஸ்லாந்து வானிலை அலுவலகம் (IMO) தெரிவித்துள்ளது.

    வெள்ளியன்று, தென்மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பம் சுமார் 4,000 சிறிய/நடுத்தர பூகம்பங்களால் தாக்கப்பட்டது.

    அப்படி ஏற்பட்டதிலேயே மிகப்பெரும் நிலநடுக்கம் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள கிரின்டாவிக் கிராமத்திற்கு வடக்கே 5.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.

    அந்த பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் முதல் சுமார் 24,000 அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

    அதில் அதிகப்படியாக நேற்று, 14 மணிநேரத்திற்குள் அந்த பகுதியில் 800 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.

    இதனால் எரிமலை வெடிப்பு ஏற்படக்கூடும் என்பதால், ஐஸ்லாந்தின் மிகப்பெரிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான புளூ லகூன் புவிவெப்ப ஸ்பா மூடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    உலக செய்திகள்
    நிலநடுக்கம்
    ஐரோப்பா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    உலகம்

    இந்திய-கனட பிரச்சனை: கனடாவுக்கு ஆதரவு தெரிவித்தது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கனடா
    4 ஆண்டுகளுக்கு பிறகு நாடு திரும்பினார் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: மசூதிக்கு சென்ற கனேடிய பிரதமர் ட்ரூடோவை அவமானப்படுத்திய மக்கள்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சனைகளுக்கும் ஈரானுக்கும் என்ன தொடர்பு: ஒரு வரலாற்று பார்வை  ஈரான்

    உலக செய்திகள்

    ரஷ்யாவிற்கு ஆயுதங்களை அனுப்பிய வடகொரியா: சாட்டிலைட் ஆதாரங்களை வெளியிட்டது அமெரிக்கா ரஷ்யா
    இஸ்ரேலுக்கு எதிராக போரிட ஹமாஸுடன் இணைவதற்கு தயாராகும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா குழு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த போவதை முன்பே கணித்த அமெரிக்க உளவுத்துறை  அமெரிக்கா
    இஸ்லாமிய தாக்குதல்: 7000 வீரர்களை கொண்டு பாதுகாப்பை பலப்படுத்துகிறது பிரான்ஸ்  பிரான்ஸ்

    நிலநடுக்கம்

    துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு காணவில்லை! கால்பந்து
    துருக்கி: 90 மணி நேர போராட்டத்திற்கு பின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நாய் துருக்கி
    சிக்கிமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு இந்தியா
    வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த நியூஸிலாந்தில் நிலநடுக்கம் உலகம்

    ஐரோப்பா

    கிரீஸ் கடற்கரையில் புலம்பெயர்ந்தவர்களின் கப்பல் கவிழ்ந்தது: 79 பேர் பலி  உலகம்
    ஐரோப்பாவில் விருது பெற்ற இந்திய நிறுவனத்தைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார் எலக்ட்ரிக் வாகனங்கள்
    டச்சு பிரதமர் ராஜினாமா: நெதர்லாந்தில் என்ன நடக்கிறது? உலகம்
    'பழைய வடிவமைப்பை மீண்டும் கொண்டு வாருங்கள்', ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய சட்டம் உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025