NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பாகிஸ்தானில் உள்ள இந்து கோவில் மீது ராக்கெட் தாக்குதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாகிஸ்தானில் உள்ள இந்து கோவில் மீது ராக்கெட் தாக்குதல்
    இந்த கோவில், நேற்று தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து இழுத்து மூடப்பட்டது.

    பாகிஸ்தானில் உள்ள இந்து கோவில் மீது ராக்கெட் தாக்குதல்

    எழுதியவர் Sindhuja SM
    Jul 17, 2023
    01:57 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் நேற்று(ஜூலை 16) ஒரு இந்து கோவில் மீது ராக்கெட் லாஞ்சர்களால் தாக்குதல் நடத்தப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    சிந்து மாகாணத்தின் காஷ்மோர் பகுதியில் உள்ள இந்துக்களுக்கு சொந்தமான சிறிய கோவில் மற்றும் அதை ஒட்டிய வீடுகள் மீது தாக்குதல்காரர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதை அடுத்து, காஷ்மோர்-கந்த்கோட் எஸ்எஸ்பி இர்பான் சம்மோ தலைமையிலான போலீஸ் பிரிவு சம்பவ இடத்திற்கு விரைந்தது.

    பாக்ரி இந்து சமூகத்தால் நடத்தப்படும் வழிபாடுகளுக்காக ஆண்டுதோறும் திறக்கப்படும் இந்த கோவில், நேற்று தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து இழுத்து மூடப்பட்டது.

    சிஜி

    ஆயுதமேந்திய எட்டு அல்லது ஒன்பது பேர் சேர்ந்து நடத்திய தாக்குதல் 

    "ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்தத் தாக்குதல் நடந்தது. காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது அவர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு ஓடிவிட்டனர். நாங்கள் அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்" என்று எஸ்எஸ்பி இர்பான் சம்மோ கூறியுள்ளார்.

    ஆயுதமேந்திய எட்டு அல்லது ஒன்பது பேர் தாக்குதல் நடத்தி இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கணித்துள்ளனர்.

    தாக்குதல்காரர்களால் ஏவப்பட்ட ராக்கெட் லாஞ்சர்கள் வெடிக்கத் தவறியதால் உயிர் சேதம் ஏற்படவில்லை என்று பாக்ரி சமூகத்தைச் சேர்ந்த டாக்டர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

    இச்சம்பவம் குடியிருப்பாளர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளதாக கூறிய சுரேஷ், சமூகத்தை பாதுகாக்க காவல்துறைக்கு அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார்.

    மேலும், எஸ்எஸ்பி சாமு இந்து சமூக உறுப்பினர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று உறுதியளித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் காவல் நிலையத்தில் குண்டு வெடிப்பு: 13 பேர் பலி உலகம்
    SCO உச்சி மாநாடு: இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் சந்திக்க வாய்ப்பில்லை இந்தியா
    SCO பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்: ராஜ்நாத் சிங் தலைமை தாங்கினார் இந்தியா
    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டெடுப்பது அரசின் செயல்திட்டத்தில் உள்ளது: மத்திய அமைச்சர் இந்தியா

    உலகம்

    'கொரோனா வைரஸை திட்டமிட்டு பரப்பியது சீனா': சீன ஆராய்ச்சியாளர் வெளியிட்ட பரபரப்பு தகவல் சீனா
    வேஸ் மற்றும் கூகுள் மேப்பை ஒன்றிணைக்கத் திட்டமிட்டிருக்கும் கூகுள் கூகுள்
    ரஷ்ய கிளர்ச்சி: பெலாரஸுக்கு நாடு கடத்தப்பட்டார் வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் ரஷ்யா
    பிரான்ஸ் நாட்டில் 4 நாட்களாக தொடரும் கலவரம்: காரணம் என்ன? காவல்துறை

    உலக செய்திகள்

    கிரீஸ் கடற்கரையில் புலம்பெயர்ந்தவர்களின் கப்பல் கவிழ்ந்தது: 79 பேர் பலி  உலகம்
    இந்தியா-அமெரிக்கா இடையே மெகா ஜெட் எஞ்சின் ஒப்பந்தம் இந்தியா
    இந்தியாவுக்கான அடுத்த ஆஸ்திரேலிய தூதர்: யாரிந்த பிலிப் கிரீன் இந்தியா
    வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 1 இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025