NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பணயக்கைதிகளைக் கொல்லப் போவதாக இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்தது ஹமாஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பணயக்கைதிகளைக் கொல்லப் போவதாக இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்தது ஹமாஸ்
    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    பணயக்கைதிகளைக் கொல்லப் போவதாக இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்தது ஹமாஸ்

    எழுதியவர் Sindhuja SM
    Oct 10, 2023
    10:24 am

    செய்தி முன்னோட்டம்

    ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதிக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் நோக்கத்தோடு, காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை முழுமையாக துண்டிக்க இஸ்ரேல் நேற்று உத்தரவிட்டது.

    இந்நிலையில், இஸ்ரேலுக்கு மிரட்டல் விடுத்திருக்கும் பாலஸ்தீனப் போராளி குழுவான ஹமாஸ், எச்சரிக்கை விடுக்காமல் தங்கள் மீது தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலில் இருந்து பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளைக் கொன்றுவிடுவோம் என்றுகூறியுள்ளது.

    "எச்சரிக்கை விடுக்காமல் எங்கள் மக்களை குறி வைத்து தாக்கினால், எங்கள் மக்களின் ஒவ்வொரு இறப்புக்கும் பணயக் கைதிகளில் ஒருவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும்" என்று ஹமாஸின் ஆயுதப் பிரிவு எச்சரித்துள்ளது.

    காசாவில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த நான்கு இஸ்ரேலியர்கள் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களால் கொல்லப்பட்டதாகவும் ஹமாஸ் கூறியுள்ளது.

    தில்னவ்ஜ்க

    'இஸ்ரேல் மனிதாபிமான  சட்டத்தின்படி நடந்துகொள்ள வேண்டும்': ஐநா

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது அரசாங்கம் 3,00,000 துருப்புக்களை அணிதிரட்டுவதாகக் கூறப்படுகிறது.

    "இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ளது. இந்தப் போரை நாங்கள் விரும்பவில்லை. இது மிகவும் கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான முறையில் எங்கள் மீது திணிக்கப்பட்டது. ஆனால் இஸ்ரேல் இந்தப் போரைத் தொடங்கவில்லை என்றாலும், இஸ்ரேல் இதை முடித்து வைக்கும்" என்று பிரதமர் நெதன்யாகு இஸ்ரேல் மக்களிடம் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில், காசா பகுதியை முழுமையாக முடக்கப்போவதாக இஸ்ரேல் கூறுவது, மோசமான மனிதாபிமான மீறல் வழக்குகளை உருவாக்கும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

    "இராணுவ நடவடிக்கைகள் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின்படி கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என்பதை இஸ்ரேலுக்கு நினைவூட்டுகிறேன்" என்று ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்
    பாலஸ்தீனம்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    உலகம்

    சமீபத்திய

    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025

    இஸ்ரேல்

    குழந்தைக்கு டிக்கெட் இல்லாததால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர் உலகம்
    இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு உலக செய்திகள்
    2,000 கிமீ தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை சோதனை: ஈரான் அதிரடி உலகம்
    5,000 ராக்கெட்டுகளை ஏவிய காசா: போர் நிலையை அறிவித்தது இஸ்ரேல்  உலகம்

    பாலஸ்தீனம்

    இஸ்ரேல் மீது பெரும் தாக்குதலை நடத்த ஹமாஸ் ஏன் அக்டோபர் 6ஐ தேர்வு செய்தது? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு உதவி எண்கள் - தமிழக அரசு அறிவிப்பு  இஸ்ரேல்
    காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை முடக்க இருக்கிறது இஸ்ரேல்  இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போரால் இந்தியாவுக்கு என்ன பாதிப்புகள் ஏற்படும்? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு   அமெரிக்கா

    உலகம்

    'நாஜி' வீரரை ட்ரூடோ கௌரவித்ததால் பரபரப்பு: யூதர்களிடம் மன்னிப்பு கோரினார் நாடாளுமன்ற சபாநாயகர் கனடா
    மோதலுக்கு மத்தியில் இந்தியாவுடனான உறவுகள் 'முக்கியமானது' என்கிறார் கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் கனடா
    முற்றும் மோதல்; கனடா விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கிய இலங்கை இலங்கை
    பாஸ்வேர்டு பகிர்வைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகளை அமல்படுத்தும் டிஸ்னி ஓடிடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025