NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இலங்கை வரலாற்றில் முதல்முறையாக இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை; தேர்தல் விதிமுறை சொல்வது என்ன?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இலங்கை வரலாற்றில் முதல்முறையாக இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை; தேர்தல் விதிமுறை சொல்வது என்ன?
    இலங்கை வரலாற்றில் முதல்முறையாக இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை

    இலங்கை வரலாற்றில் முதல்முறையாக இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை; தேர்தல் விதிமுறை சொல்வது என்ன?

    எழுதியவர் Sekar Chinnappan
    Sep 22, 2024
    05:32 pm

    செய்தி முன்னோட்டம்

    ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 22, 2024) நடந்த இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் எந்தவொரு வேட்பாளரும் 50% வாக்குகளுக்கு மேல் பெறாததால், இலங்கை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக வாக்கு எண்ணிக்கை இரண்டாவது சுற்றுக்குச் சென்றது.

    முன்னதாக, முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் எண்ணப்பட்ட வாக்குகளில் மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் பரந்த முன்னணியான தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திசநாயக்க 39.52% வாக்குகளைப் பெற்றுள்ளதாக சமீபத்திய முடிவுகள் காட்டுகின்றன.

    சமகி ஜன பலவேகயவின் சஜித் பிரேமதாச மொத்த வாக்குகளில் கிட்டத்தட்ட 34.28% பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.

    2022இல் பொருளாதாரச் சரிவுக்குப் பின் இலங்கையில் சனிக்கிழமை (செப்டம்பர் 21) நடந்த முதல் தேர்தலில் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்காக இலங்கை மக்கள் வாக்களித்தனர்.

    இரண்டாவது சுற்று

    இரண்டாவது சுற்று விருப்ப வாக்கு எண்ணிக்கை

    திசநாயக்க மற்றும் பிரேமதாச ஆகியோர் 2024 ஜனாதிபதித் தேர்தலில் முதல் சுற்றில் அதிகபட்ச வாக்குகளைப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

    எனினும், இருவருமே 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறாததால், முதல் இரண்டு இடங்களை பிடித்த வேட்பாளர்களின் இரண்டாவது விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றியாளர் அறிவிக்கப்படுவார் என்று அவர் கூறினார்.

    இலங்கையில் உள்ள வாக்காளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் மூன்று வேட்பாளர்களை தரவரிசைப்படுத்தி ஒரு வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.

    ஒரு வேட்பாளர் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றால், அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

    இல்லையெனில், இரண்டாவது மற்றும் மூன்றாவது தேர்வு வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இரண்டாவது சுற்று எண்ணும் பணி தொடங்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இலங்கை
    தேர்தல்
    தேர்தல் முடிவு
    உலகம்

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்

    இலங்கை

    இலங்கை- சீனா 4.2 பில்லியன் டாலர் கடனை மறுவரையறை செய்ய ஒப்புதல் சீனா
    உலகளாவிய பசி குறியீடு கணக்கிடப்பட்ட முறையில் தவறை கண்டறிந்த மத்திய அரசு இந்தியா
    தமிழகம்-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி தமிழ்நாடு
    உலகக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி தொடர் - டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு  கிரிக்கெட்

    தேர்தல்

    அமேதி, ரேபரேலி உள்ளிட்ட 49 தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம் பொதுத் தேர்தல் 2024
    வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த ஜெகன் ரெட்டி கட்சி எம்எல்ஏ: தேர்தல் ஆணையம் கண்டனம்  ஆந்திரா
    தமிழக அமைச்சரவையில் மாற்றமா?உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பா? தமிழக அரசு
    வாக்குச் சாவடி வாரியான வாக்குப் பதிவு விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் மறுப்பு வாக்கு சாவடி

    தேர்தல் முடிவு

    மிசோரம் தேர்தல் முடிவுகள்: ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? மிசோரம்
    மூன்று மாநில தேர்தல்களில் பாஜகவின் வெற்றியைத் தொடர்ந்து இன்று ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தைகள் பங்குச் சந்தை
    மிசோரம் தேர்தல் முடிவுகள்: ZPM பெரும்பான்மையைக் கடந்து 26 இடங்களில் முன்னிலை  மிசோரம்
    இதுவரை 27 இடங்களில் வெற்றி; மிசோரத்தில் புதிய ஆட்சியை அமைக்க உள்ளது ZPM  மிசோரம்

    உலகம்

    ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் பிரான்ஸ் நாட்டு ரயில்கள் மீது பெரும் தாக்குதல்  பிரான்ஸ்
    அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்தார் பராக் ஒபாமா  அமெரிக்கா
    உலகளாவிய IT செயலிழப்பு: $500M இழப்புக்கு CrowdStrike, மைக்ரோசாப்ட் காரணம் என டெல்டா குற்றச்சாட்டு மைக்ரோசாஃப்ட்
    பனிப்போருக்கு பிந்தைய மிகப்பெரிய கைதி பரிமாற்றம்; ரஷ்ய உளவாளிகளின் சுவாரஸ்ய பின்னணி ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025