NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிலிப்பைன்ஸ் கப்பலில் தீ விபத்து: ஒரு குழந்தை உட்பட 31 பேர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிலிப்பைன்ஸ் கப்பலில் தீ விபத்து: ஒரு குழந்தை உட்பட 31 பேர் பலி
    தீ விபத்தால் 31 பேர் உயிரிழந்தனர்

    பிலிப்பைன்ஸ் கப்பலில் தீ விபத்து: ஒரு குழந்தை உட்பட 31 பேர் பலி

    எழுதியவர் Sindhuja SM
    Mar 31, 2023
    10:52 am

    செய்தி முன்னோட்டம்

    தெற்கு பிலிப்பைன்ஸ் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தால் 1 குழந்தை உட்பட 31 பேர் உயிரிழந்தனர் என்றும் 230 பேர் மீட்கப்பட்டனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    லேடி மேரி ஜாய் 3 என்ற கப்பல், மிண்டனாவ் தீவில் உள்ள ஜாம்போங்கா நகரத்திலிருந்து சுலு மாகாணத்தில் உள்ள ஜோலோ தீவுக்குச் சென்று கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டது.

    தீயில் இருந்து தப்பிக்க பலர் கடலுக்குள் குதித்தனர்.

    பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படை மற்றும் உள்ளூர் மீனவர்கள் அடங்கிய மீட்புப் படையினர் 195 பயணிகளையும் 35 பணியாளர்களையும் காப்பாற்றினர்.

    காணாமல் போன ஏழு பயணிகளைத் தேடும் மீட்புப் பணி வியாழக்கிழமை வரை தொடர்ந்து நடைபெற்று வந்தது..

    உலகம்

    படகுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 18 உடல்கள்

    எரிந்த கப்பல் பசிலனின் கரையோரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது.

    அதன் பிறகு, கடலோர காவல்படை பணியாளர்கள் மற்றும் பிற அதிகாரிகள், பயணிகள் கேபினின் பட்ஜெட் பிரிவில் இருந்து மேலும் 18 உடல்களைக் கண்டுபிடித்தனர்.

    குறைந்தது 23 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அடிக்கடி ஏற்படும் புயல்கள், மோசமாக பராமரிக்கப்படும் படகுகள், நெரிசல் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை கவனக்குறைவாக செயல்படுத்துதல், போன்ற காரணங்களால் பிலிப்பைன்ஸ் தீவுகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும்.

    டிசம்பர் 1987 இல், டோனா பாஸ் என்ற படகு எரிபொருள் டேங்கருடன் மோதியதால் மூழ்கியது. உலகின் மிக மோசமான இந்த பேரழிவில் 4,300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    பிலிப்பைன்ஸ்

    சமீபத்திய

    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025

    உலகம்

    இதுவே காலநிலை மாற்றத்தை தடுப்பதற்கான கடைசி வாய்ப்பு: ஐ.நா.வின் காலநிலை அறிக்கை உலக செய்திகள்
    'நீதிமன்ற வளாகத்தில் என்னை கொலை செய்ய பார்த்தார்கள்': இம்ரான் கான் பாகிஸ்தான்
    கொரோனா மிருங்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம்: ஆய்வில் தகவல் சீனா
    912 வாரங்களுக்கு பிறகு டென்னிஸ் தரவரிசையில் பின்தங்கிய ரஃபேல் நடால் விளையாட்டு

    பிலிப்பைன்ஸ்

    பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி உலகம்
    இந்திய-சீக்கிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் பிலிப்பைன்ஸில் கைது இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025