NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / போயிங் மீது கிரிமினல் வழக்கு போட வேண்டும் என அமெரிக்க வழக்கறிஞர்கள் பரிந்துரை
    அடுத்த செய்திக் கட்டுரை
    போயிங் மீது கிரிமினல் வழக்கு போட வேண்டும் என அமெரிக்க வழக்கறிஞர்கள் பரிந்துரை

    போயிங் மீது கிரிமினல் வழக்கு போட வேண்டும் என அமெரிக்க வழக்கறிஞர்கள் பரிந்துரை

    எழுதியவர் Sindhuja SM
    Jun 24, 2024
    03:31 pm

    செய்தி முன்னோட்டம்

    போயிங் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகளை நீதித்துறை (DOJ) கொண்டு வர வேண்டும் என்று அமெரிக்க வழக்கறிஞர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

    737 மேக்ஸ் விமானம் சம்பந்தப்பட்ட இரண்டு அபாயகரமான விபத்துக்கள் தொடர்பான ஒப்பந்தத்தை போயிங் மீறியதாக நீதித்துறை கூறியதை அடுத்து போயிங் மீது கிரிமினல் வழக்கு போட வேண்டும் என அமெரிக்க வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

    ஆனால், நீதித்துறையின் குற்றச்சாட்டை போயிங் மறுத்துள்ளது.

    வழக்கறிஞர்களின் பரிந்துரை குறித்து பிபிசி போயிங்கை தொடர்பு கொண்ட போது கருத்து தெரிவிக்க போயிங் மறுத்துவிட்டது. மேலும், இதற்கு DOJயும் உடனடியாக பதிலளிக்கவில்லை.

    வழக்கறிஞர்கள் பரிந்துரைக்க மட்டுமே செய்துள்ளனர். இதற்கான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

    உலகம் 

    போயிங்கிற்கு $25bn அபராதம் விதிக்க கோரிக்கை 

    போயிங் மீது வழக்குத் தொடர வேண்டுமா என்பது குறித்து DOJ ஜூலை 7 அன்று இறுதி முடிவை எடுக்க உள்ளது.

    விமானப் பாதுகாப்புக்கான அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநரும் போயிங்கின் முன்னாள் மூத்த மேலாளருமான எட் பியர்சன், "போயிங் விமானங்களில் சிக்கல்கள் உள்ளன. அந்த விமானங்களில் சிக்கல்களை நாங்கள் காண்கிறோம். நான் 737 மேக்ஸ் மற்றும் 787 பற்றி பேசுகிறேன்." என்று கூறியுள்ளார்.

    2018 இல் இந்தோனேசியாவிலும் 2019 இல் எத்தியோப்பியாவிலும் நடந்த 2 விபத்துகளில் மொத்தம் 346 பேர் கொல்லப்பட்டனர்.

    கடந்த வாரம், பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போயிங்கிற்கு $25bn (£14.6bn) அபராதம் விதிக்க வேண்டும் என்றும், போயிங் மீது குற்றவியல் வழக்கு தொடர வேண்டும் என்று வழக்கறிஞர்களிடம் வலியுறுத்தினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    அமெரிக்கா

    சித்து மூஸ்வாலா கொலைக்கு மூளையாக செயல்பட்ட கோல்டி ப்ரார் அமெரிக்காவில் கொலை கொலை
    உக்ரைன் போரில், உலகளாவிய இரசாயன ஆயுதங்கள் தடையை ரஷ்யா மீறியதா? உக்ரைன்
    200 முக்கிய குழு ஊழியர்களை பணிநீக்கம் செய்தது கூகுள்: இந்தியா, மெக்சிகோவிற்கு வேலைகளை மாற்ற திட்டம்  கூகுள்
    நைஜரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்திற்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழைந்தன ரஷ்யா

    உலகம்

    ஜார்ஜியாவில் கார் கவிழ்ந்ததால் 3 இந்திய-அமெரிக்க மாணவர்கள் பலி ஜார்ஜியா
    நடு வானில் ஆட்டம் கண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ஒருவர் பலி, பலர் காயம்  தாய்லாந்து
    வீடியோ: 5 நிமிடங்களில் 6,000 அடி சரிந்ததால் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான பயணிகள் மத்தியில் பதட்டம்  லண்டன்
    பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க உள்ளது நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து நார்வே

    உலக செய்திகள்

    விமான விபத்துக்கு மன்னிப்பு கோரினார் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிஇஓ சிங்கப்பூர்
    பப்புவா நியூ கினியாவில் பெரும் நிலச்சரிவு: 300க்கும் மேற்பட்டோர் பலி  ஆஸ்திரேலியா
    பாகிஸ்தானில் ஒரு கிறிஸ்தவரை அடித்து, அவரது வீட்டையும் தொழிற்சாலையையும் எரித்த கும்பல் பாகிஸ்தான்
    இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தது ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா அமைப்பு  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025