NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சீனா: உய்குர் முஸ்லீம்கள் ரம்ஜானுக்கு நோன்பு இருக்க தடை 
    சீனா: உய்குர் முஸ்லீம்கள் ரம்ஜானுக்கு நோன்பு இருக்க தடை 
    உலகம்

    சீனா: உய்குர் முஸ்லீம்கள் ரம்ஜானுக்கு நோன்பு இருக்க தடை 

    எழுதியவர் Sindhuja SM
    April 13, 2023 | 05:05 pm 0 நிமிட வாசிப்பு
    சீனா: உய்குர் முஸ்லீம்கள் ரம்ஜானுக்கு நோன்பு இருக்க தடை 
    சட்டத்தை மீறியவர்களுக்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை.

    புனித ரம்ஜான் மாதத்தில் உய்குர் முஸ்லீம்கள் நோன்பு நோற்காமல் இருப்பதற்கு சீன போலீசார் உளவாளிகளை வைத்து கண்காணித்து வருகின்றனர். "எங்களிடம் பல ரகசிய உளவாளிகள் உள்ளனர்" என்று ரேடியோ ஃப்ரீ ஏசியாவிடம் பேசிய சீன போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ​​முதன்முதலில், 2017ஆம் ஆண்டு சின்ஜியாங்கில் உள்ள முஸ்லீம்கள் ரம்ஜான் நோன்பு நோற்க கூடாது என்று சீனா தடை விதித்தது. உய்குர் முஸ்லீம்களின் கலாச்சாரம், மொழி மற்றும் மதத்தை ஒடுக்குவதற்காக சீனா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனாவில் உள்ள உய்குர் முஸ்லீம்கள் "மறு கல்வி" முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் ரம்ஜான் தடைகள் தளர்த்தப்பட்டிருந்தது. 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் நோன்பு இருக்க சீன அரசு அனுமதித்தது.

    சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட உய்குர் முஸ்லீம்கள்

    உய்குர்களின் வீடுகளில் சோதனை நடத்துவது மற்றும் தெருக்களில் ரோந்து செல்வது ஆகியவை கடந்த இரண்டு வருடங்களாக குறைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு, முஸ்லீம்கள் யாரும் நோன்பு இருக்க கூடாது என்று சீன அரசு தடை விதித்துள்ளதாக டர்பன் நகர காவலர் ஒருவர் கூறியிருக்கிறார். ரம்ஜானின் முதல் வாரத்தில், சீன அதிகாரிகள் 56 உய்குர் குடியிருப்பாளர்களையும், முன்னாள் கைதிகளையும் அழைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். விசாரணையின் போது அவர்கள் நோன்பு இருந்தது தெரியவந்தது. அதனால், அவர்கள் சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டது. சட்டத்தை மீறியவர்களுக்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை. கடந்த சில ஆண்டுகளாக சீனா ஒரு மில்லியனுக்கும் அதிகமான உய்குர்களை அவர்களின் விருப்பத்திற்கு மாறாக தடுத்து வைத்துள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் நம்புகின்றன.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சீனா
    உலகம்
    உலக செய்திகள்

    சீனா

    AI தொழில்நுட்பங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த சீனா!  செயற்கை நுண்ணறிவு
    சாட்ஜிபிடி-க்கு போட்டியாக சீனா உருவாக்கியிருக்கும் புதிய AI செயற்கை நுண்ணறிவு
    அருணாச்சல் விவகாரம்: 'ஒரு அங்குல நிலத்தை கூட யாராலும் கைப்பற்ற முடியாது': அமித்ஷா இந்தியா
    ராணுவ படைகளை அனுப்பி தைவானை பயமுறுத்தும் சீனா: என்ன நடக்கிறது  அமெரிக்கா

    உலகம்

    'இந்தியா மிகவும் வலுவான பொருளாதாரம்': IMF புகழாரம்  இந்தியா
    பெண்கள் பசுமையான உணவகங்களுக்கு செல்ல தடை: தலிபான் அரசு  ஆப்கானிஸ்தான்
    ஆசியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை உருவாக்கம் - முக்கிய நோக்கம் என்ன? உலக செய்திகள்
    பூட்டான் கல்வி முறையை மாற்ற பாடுபட்ட கேரள ஆசிரியர்கள் பூட்டான்

    உலக செய்திகள்

    கூகுள் மீது நடவடிக்கை.. தென் கொரிய நீதிமன்றம் உத்தரவு!  கூகுள்
    ஒரு வருடத்திற்கான பணம் தரோம்... ஊழியர்களிடம் கெஞ்சும் கூகுள் அமேசான்! ஆட்குறைப்பு
    TCS ஊழியர்களுக்கு புதிய ஷாக் - ஊதிய உயர்வு குறைக்கப்படுகிறதா?  ஆட்குறைப்பு
    இமயமலையில் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகள் இழப்பு இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023