NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சீனா: 'போலி செய்திகளை' பரப்பியதற்காக ஒரு மாதத்தில் ஒரு லட்சம் கணக்குகள் முடக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சீனா: 'போலி செய்திகளை' பரப்பியதற்காக ஒரு மாதத்தில் ஒரு லட்சம் கணக்குகள் முடக்கம்
    போலி செய்திகளை பரப்பிய 107,000 கணக்குகள் மற்றும் 835,000 போலி தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளன

    சீனா: 'போலி செய்திகளை' பரப்பியதற்காக ஒரு மாதத்தில் ஒரு லட்சம் கணக்குகள் முடக்கம்

    எழுதியவர் Sindhuja SM
    May 17, 2023
    06:57 pm

    செய்தி முன்னோட்டம்

    தவறான செய்திகள் மற்றும் வதந்திகளை தடுப்பதற்கான முயற்சிகளை சீனா தீவிரப்படுத்தியுள்ளது.

    இதன் முதற்கட்டமாக, கடந்த மாதத்தில் 100,000க்கும் மேற்பட்ட சமூக வலைதள கணக்குகளை சீனா முடக்கியுள்ளது.

    முடக்கப்பட்ட கணக்குகள் செய்தி அறிவிப்பாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை தவறாக சித்தரிப்பதாக சீனாவின் சைபர்ஸ்பேஸ் கட்டுப்பாட்டாளர் கூறியுள்ளார்.

    சைபர்ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷன் ஆஃப் சீனா(CAC) ஆன்லைன் தகவல்களைச் சுத்தப்படுத்த ஒரு சிறப்புப் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.

    இந்த பிரச்சாரம், "போலி செய்திகளை" பரப்பும் மற்றும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களைப் போல ஆள்மாறாட்டம் செய்யும் சமூக ஊடக கணக்குகளின் மேல் கவனம் செலுத்துகிறது.

    details

    அரசு செய்தி நிறுவனங்கள் போல் ஆள்மாறாட்டம் செய்த சமூக வலைதள கணக்குகள் 

    ஏப்ரல் 6 முதல், போலி செய்திகளை பரப்பிய 107,000 கணக்குகள் மற்றும் 835,000 போலி தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இணையத்தில் பரப்பப்படும் போலி செய்திகளுடன் உலக நாடுகள் போராடி வரும் நிலையில், அதை தடுப்பதற்காக சீனா இந்த முடிவை எடுத்துள்ளது.

    இணையத்தில் போலி செய்திகள் அதிகரித்து வருவதால், அதை தடுப்பதற்காக பல நாடுகளில் புதிதாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, சீன சமூக ஊடகங்கள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே செயல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    அரசு செய்தி நிறுவனங்கள் போல் ஆள்மாறாட்டம் செய்து செய்திகளை வெளியிடும் சமூக வலைதள கணக்குகள் கண்டறியப்பட்டதாக CAC தனது மதிப்பாய்வில் கூறியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சீனா
    உலகம்
    உலக செய்திகள்

    சமீபத்திய

    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025

    சீனா

    சீனாவில் பெய்த 'புழுக்கள்' மழை: வைரலாகும் வீடியோ உலகம்
    ரஷ்யாவுக்கு பயணம் செய்ய இருக்கும் ஜி ஜின்பிங் உலகம்
    உலக ஒழுங்குக்கு சீனா சவாலாக உள்ளது: ரிஷி சுனக் உலகம்
    அடுத்த வாரம் ரஷ்யாவுக்கு பயணம் செய்ய இருக்கும் ஜி ஜின்பிங் உலகம்

    உலகம்

    காளி தேவியை அவமதிக்கும் படத்தை ட்வீட் செய்ததற்கு மன்னிப்பு கேட்டது உக்ரைன் அரசாங்கம்  இந்தியா
    உக்ரைன் போர்: 5 மாதத்தில் 20,000 ரஷ்ய வீரர்கள் பலி உக்ரைன்
    பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் வீசப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள்: ஒருவர் கைது  லண்டன்
    14 வயது சிறுவன் பள்ளியில் நடத்திய துப்பாக்கிசூடு: 8 குழந்தைகள் பலி உலக செய்திகள்

    உலக செய்திகள்

    இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்தால் அமெரிக்க வணிகங்கள் பலனடையும்: USIBC இந்தியா
    காலிங் பெல்லை அடித்ததற்காக 3 சிறுவர்களை கொன்ற அமெரிக்க-இந்தியர்  இந்தியா
    அமெரிக்காவிற்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது  இந்தியா
    முடிசூட்டு விழாவில் பிரிட்டன் சார்லஸ் அணியும் விலையுர்ந்த தங்க ஆடைகள்! பிரிட்டன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025