Page Loader
நேசக்கரம் நீட்டுகிறதா கனடா? இந்தியாவிற்கு விமானத்தில் வருபவர்களுக்கான ஸ்க்ரீனிங் முறையை தளர்த்தியது
ஸ்க்ரீனிங் முறையை தளர்த்தியது கனடா

நேசக்கரம் நீட்டுகிறதா கனடா? இந்தியாவிற்கு விமானத்தில் வருபவர்களுக்கான ஸ்க்ரீனிங் முறையை தளர்த்தியது

எழுதியவர் Venkatalakshmi V
Nov 22, 2024
12:59 pm

செய்தி முன்னோட்டம்

இந்த வார துவக்கத்தில் இந்தியாவுக்குச் செல்லும் பயணிகளுக்கு கனடா அரசு அமல்படுத்தியிருந்த மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தற்போது நீக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து அமைச்சர் அனிதா ஆனந்தின் அலுவலகம் வியாழன் அன்று அரசாங்க வெளியீடான சிபிசி நியூஸிடம் அந்த நடவடிக்கைகள் "நீக்கப்பட்டுள்ளன" என்று கூறியது. அந்த நடவடிக்கைகள் குறைந்தபட்சம் கடந்த வார இறுதியில் இருந்து நடைமுறையில் இருப்பதாகத் தோன்றினாலும், திங்களன்று ஆனந்த், இந்தியாவிற்குப் பயணிக்கும் பயணிகளுக்கு "மிகவும் எச்சரிக்கையுடன்" கூடுதல் பாதுகாப்புத் திரையிடல் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாக ஏர் கனடா விமான நிறுவனமும் வார இறுதியில் இந்தியவிற்கு செல்லும் பயணிகளுக்கு அறிவிப்புகளை அனுப்பியது

நிஜ்ஜார் கொலை

நிஜ்ஜார் கொலைக்கும் பிரதமர் மோடிக்கும் சம்மந்தமில்லை என கனடா அறிக்கை

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொல்லும் சதித்திட்டம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியும் என்று ஊடகங்களில் வெளியான செய்திகளை கனேடிய அரசு நிராகரித்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் கனேடிய செய்தித்தாளில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டுகள், பெயரிடப்படாத தேசிய பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சதிக்கு மூளையாக இருப்பதாக குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டினை கனடா அரசு தவறானது என நிராகரித்துள்ளது. தற்போது விமான பயணிகளுக்கு இலகுவாக்கப்பட்ட சோதனை முயற்சிகள், கனடா இந்தியாவிடம் நேசக்கரம் நீட்டுகிறதா என்ற கேள்வியையும் எழுப்பாமல் இல்லை.