NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பினான்ஸ் கிரிப்டோ தளத்தின் மீது புகார்களை அடுக்கிய SEC.. என்ன நடந்தது?
    அடுத்த செய்திக் கட்டுரை
    பினான்ஸ் கிரிப்டோ தளத்தின் மீது புகார்களை அடுக்கிய SEC.. என்ன நடந்தது?
    பினான்ஸின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான சாங்பெங் சௌ

    பினான்ஸ் கிரிப்டோ தளத்தின் மீது புகார்களை அடுக்கிய SEC.. என்ன நடந்தது?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 06, 2023
    10:41 am

    செய்தி முன்னோட்டம்

    சீனாவைச் சேர்ந்த சாங்பெங் சௌ என்பவரால் 2017-ல் உருவாக்கப்பட்ட கிரிப்டோ வர்த்தக தளம் பினான்ஸ்(Binance).

    இவரும் இவரது நிறுவனமும் பல்வேறு சட்டங்களை மீறியிருப்பதாக 13 குற்றச்சாட்டுக்களை சுமத்தி வழக்கு பதிவு செய்யப்பபட்டிருக்கிறது.

    கிரிப்டோவின் வர்த்தக அளவை பொய்யாகக் கையாண்டது, வாடிக்கையாளர்களின் பணத்தை இரகசியான முறையில் தன்னுடைய விருப்பத்திற்கு முதலீடு செய்தது உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகளை அவர் மீதும், அவரது நிறுவனத்தின் மீதும் சுமத்தியிருக்கிறது அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம்.

    ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் நீதித்துறையானது, குற்றச்செயல்களுக்கு பணம் வழங்கியது மற்றும் பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகளை இவர் மீது சுமத்தி விசாரணை நடத்தி வருகிறது.

    உலகின் பெரிய மற்றும் முன்னணி கிரிப்டோ வர்த்தக தளமாக பினான்ஸ் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

    கிரிப்டோ

    யார் இந்த சாங்பெங் சௌ? 

    சீனாவில் பிறந்த சாங்பெங் சொ, 1989-ல் தன்னுடைய 12 வயதில் கனடாவிற்கு குடிபெயர்கிறார். டோக்கியோ, நியூயார்க் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வேலை பார்த்துவிட்டு 2017-ல் ஷாங்காயில் தன்னுடைய புதிய கிரிப்டோ வர்த்தகத் தளமான பினான்ஸைத் தொடங்குகிறார்.

    ஆறே மாதத்தில் உலகின் முன்னணி கிரிப்டோ வர்த்தகத் தளமாக உருவெடுக்கிறது பினான்ஸ். தற்போது உலகில் வர்த்தகம் செய்யப்படும் 60% கிரிப்டோக்கள் இந்த பினான்ஸ் தளத்திலேயே வர்த்தகம் செய்யப்படுகின்றன.

    கிரிப்டோவின் மீது சீனா கடுமையான விதிமுறைகள் விதித்ததையடுத்து சீனாவில இருந்த வெளியேறி வேறு இடத்தில் தன்னுடைய புதிய நிறுவனத்தை அமைக்கிறார் சாங்பெங். ஆனால், இந்த நிறுவனத்தின் இருப்பிடம் குறித்த தகவல்களை அவர் இப்போது வரை பகிர்ந்து கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    சீனா
    கிரிப்டோகரண்ஸி

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    அமெரிக்கா

    நிலவுக்குச் விண்கலத்தை அனுப்பும் நாசாவின் புதிய திட்டம்!  நாசா
    எவரெஸ்ட் சிகரத்தில் மலையேறிய அமெரிக்கர் மரணம்! சீசனில் 4வது உயிரிழப்பு உலக செய்திகள்
    உக்ரைன் போர்: 5 மாதத்தில் 20,000 ரஷ்ய வீரர்கள் பலி உக்ரைன்
    உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு சாதகமான இடமாக இந்தியா வளர்ந்து வருகிறது இந்தியா

    சீனா

    இதுக்கெல்லாமாடா லீவு! சீனாவின் கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது உலகம்
    அருணாச்சல் பிரதேசத்தில் இருக்கும் 11 பகுதிகளுக்கு பெயரிட்ட சீனா அருணாச்சல பிரதேசம்
    அருணாச்சல் பகுதிகளுக்கு 'மறுபெயரிட்ட' சீனா: இந்தியா கடும் எதிர்ப்பு அருணாச்சல பிரதேசம்
    இமயமலையில் 570 மில்லியன் யானைகளின் எடைக்கு சமமான பனிப்பாறைகள் இழப்பு உலக செய்திகள்

    கிரிப்டோகரண்ஸி

    'பிட்காயின் கொடுத்த மஹிந்திரா கார்களை வாங்க முடியுமா'.. பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா!  பிட்காயின்
    கிரிப்டோகரன்சி பதிவுகள் : வாஷிங்டன் சுந்தரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதா?  கிரிக்கெட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025