NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / நாஜி வதை முகாம்களுக்கு தனது வம்சாவளியினரை அழைத்து சென்ற அமெரிக்கா அதிபர் பைடன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாஜி வதை முகாம்களுக்கு தனது வம்சாவளியினரை அழைத்து சென்ற அமெரிக்கா அதிபர் பைடன்

    நாஜி வதை முகாம்களுக்கு தனது வம்சாவளியினரை அழைத்து சென்ற அமெரிக்கா அதிபர் பைடன்

    எழுதியவர் Srinath r
    Oct 12, 2023
    03:11 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது மகன்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் 14 வயதை அடையும் போது, டாச்சுவில் உள்ள நாஜிகளின் வதை முகாமுக்கு அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார்.

    அமெரிக்க வெள்ளை மாளிகையில் யூத எதிர்ப்புக்கு எதிரான செயல் திட்டங்களை வகுக்கும் நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் பைடன் பங்கேற்றார்.

    அங்கு கூடியிருந்த யூத மத தலைவர்கள் மத்தியில் பேசிய பைடன், ஹோலோகாஸ்டின் கொடுமைகள் குறித்து தனது வம்சாவளியினர் தெரிந்து கொள்வதற்காகவே இவ்வாறு செய்வதாக கூறினார்.

    மேலும் ஹோலோகாஸ்டின் கொடுமைகள் அவர்களுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் பேசினார். ஹமாஸ் ஆயுதக்குழு நடத்தும் தாக்குதலில், இஸ்ரேலில் உள்ள யூத மக்கள் கொல்லப்படுவதை சுட்டிக்காட்டியே, அதிபர் நாஜி காலத்து வதை முகாம்களை நினைவு கூர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    2nd card

    இந்நிகழ்வு யூதர்களுக்கு ஹாலோ கேஸ்ட்- அதிபர் பைடன்

    அந்நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசியவர், "இந்நிகழ்வு யூதர்களுக்கும், ஹோலோகாஸ்ட்கும் மோசமான நாள். மனித வரலாற்றிலேயே மிகவும் மோசமான பக்கமான இது, என் தந்தையிடம் நான் கற்றுக்கொண்ட ஒரு சொற்தொடரை ஞாபகப்படுத்துகிறது."

    "மௌனமாக இருப்பது தவறுக்கு உடந்தையாக இருப்பதாகும். அதனால் தான் நான் மௌனமாக இருக்க மறுக்கிறேன்" என்றார்.

    பின்னர் சத்தமாக மற்றும் உணர்ச்சிவசத்துடன் பேசிய பைடன், "அதனால் தான் என் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளை டாச்சுக்கு அழைத்துச் செல்கிறேன். சிலர் 14 வயது குழந்தைகளை அங்கு அழைத்துச் செல்வதில் பயனில்லை என நினைத்தார்கள்".

    "ஆனால் அது அவர்களிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் இன்னும் மூன்று பேரப்பிள்ளைகளை அழைத்துச் செல்ல இருக்கிறேன். அது மிகவும் முக்கியம்" என அவர் பேசி முடித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமெரிக்கா
    குடியரசு தலைவர்
    ஜோ பைடன்
    இஸ்ரேல்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    அமெரிக்கா

    'இந்திய-ரஷ்ய உறவுகள் மிகவும் விதிவிலக்கானது': வெளியுறவுத்துறை அமைச்சர்  ரஷ்யா
    வெள்ளத்தில் மூழ்கிய நியூயார்க் நகரம்: மெட்ரோ மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு  நியூயார்க்
    வெள்ளத்தில் தத்தளிக்கும் நியூயார்க் நகரம்: வைரலாகும் வீடியோக்கள் ஒரு பார்வை  நியூயார்க்
    கடைசி நிமிடத்தில் கையெழுத்தானது நிதி மசோதா- அமெரிக்க அரசு முடங்குவது தவிர்ப்பு ஜோ பைடன்

    குடியரசு தலைவர்

    சென்னை பல்கலைக்கழக 165வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற இந்திய ஜனாதிபதி மு.க ஸ்டாலின்
    அரசுமுறை பயணத்தினை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு  தமிழ்நாடு
    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவு தினம்; தலைவர்கள் அஞ்சலி பிரதமர்
    ஜி 20 மாநாட்டை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு தடை ஜி20 மாநாடு

    ஜோ பைடன்

    திடீரென்று உக்ரைனுக்கு சென்ற அமெரிக்க அதிபர் உக்ரைன் ஜனாதிபதி
    அமெரிக்க வரலாற்றின் இருண்ட காலம் இது: பைடன் அரசாங்கத்தின் மீது டிரம்ப் பாய்ச்சல் உலகம்
    2024 அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் ஜோ பைடன்: அதிகாரபூர்வ அறிவிப்பு  அமெரிக்கா
    ஜூன் மாதம் அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் விருந்து ஏற்பாடு  இந்தியா

    இஸ்ரேல்

    தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்ரேலுக்கு துணையாக நிற்போம்- பிரதமர் மோடி தீவிரவாதம்
    போர் நிலை அறிவிப்பு: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஏன் மோதிக் கொள்கின்றன? உலகம்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் தீவிரமடைந்ததால் 500க்கும் மேற்பட்டோர் பலி  உலகம்
    பாலஸ்தீனியம், இஸ்ரேல் வாழ் தமிழர்களுக்கு உதவி எண்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025