Loading...
'இந்தியா அன்றே எச்சரித்தது, நாங்கள்தான் கேட்கவில்லை!' பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வேவர் பகிரங்க ஒப்புதல்
இந்தியா எச்சரித்ததை கேட்கவில்லை என பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வேவர் பகிரங்க ஒப்புதல்

'இந்தியா அன்றே எச்சரித்தது, நாங்கள்தான் கேட்கவில்லை!' பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வேவர் பகிரங்க ஒப்புதல்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 04, 2026
06:54 pm

செய்தி முன்னோட்டம்

சர்வதேச வர்த்தகத்தில் பிற முக்கிய வல்லரசு நாடுகளை சார்ந்திருப்பதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து இந்திய பிரதமர் மோடி ஐரோப்பிய நாடுகளுக்கு நீண்ட காலத்திற்கு முன்பே எச்சரிக்கை விடுத்தார் என்றும், ஆனால் ஐரோப்பிய நாடுகள் அதை அலட்சியப்படுத்திவிட்டன என்றும் பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வேவர் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். தற்பொழுது தான் ஐரோப்பாவிற்கு இந்த விழிப்புணர்வு வந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-

ஐரோப்பா

ஐரோப்பா சந்திக்கும் விழிப்புணர்வும் சவால்களும்

இது குறித்துப் பேசிய பெல்ஜியம் பிரதமர், "நாங்கள் ஒரே மாதிரியான சவால்களை சந்திக்கிறோம்.

ஒரே மாதிரியான அதிகார வரம்புகளின் அழுத்தங்களை எதிர்கொள்கிறோம்.

உங்கள் பிரதமர் இதுகுறித்து நீண்ட காலத்திற்கு முன்பே ஐரோப்பாவை எச்சரித்தார்.

ஆனால் அவர் அலட்சியப்படுத்தப்பட்டார். அப்போது நாங்கள் கேட்கவில்லை, ஆனால் இப்போது நாங்கள் கவனமாகக் கேட்கிறோம்." எனக் கூறினார்.

ஐரோப்பாவிற்கு இந்த விழிப்புணர்வு ஏற்பட சற்று தாமதமானாலும், தற்போது அது நடந்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

கூட்டணி

வர்த்தக சங்கிலி மற்றும் உத்திசார் கூட்டணி

உலகளாவிய வர்த்தகம் துண்டாடப்பட்டு வரும் சூழலில், இந்தியாவும் ஐரோப்பாவும் தங்களின் உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என பெல்ஜியம் பிரதமர் வலியுறுத்தினார்.

பொருளாதார சார்ந்திருப்பு அரசியல் அழுத்தங்களாகவோ அல்லது அச்சுறுத்தல்களாகவோ மாறக்கூடும் என்பதால், விநியோக சங்கிலி மீள்தன்மை, தொழில்நுட்பம் மற்றும் முதலீடுகளில் இருதரப்பும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.

ADVERTISEMENT

எதிர்காலம்

இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய உறவுகளின் எதிர்காலம்

பெரிய அதிகார வர்க்கப் பிரிவுகளால் தங்களை அச்சுறுத்த முடியாத வகையில், பகிரப்பட்ட பொருளாதாரப் பாதுகாப்பை உருவாக்குவதே இருதரப்பின் முதன்மை நோக்கமாகும்.

மரபுசார் வர்த்தகத்தைத் தாண்டி, தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர பொருளாதார நலன்களை மையமாகக் கொண்டு இந்தியாவும் ஐரோப்பாவும் தங்களின் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த அனுபவம் ஒரு வலுவான அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT