NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / குழந்தைக்கு டிக்கெட் இல்லாததால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    குழந்தைக்கு டிக்கெட் இல்லாததால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர்
    குழந்தைக்கு டிக்கெட் வாங்கத் தவறியதால் குழந்தையை அப்படியே விட்டுவிட்டு பெற்றோர்

    குழந்தைக்கு டிக்கெட் இல்லாததால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 02, 2023
    04:37 pm

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேலில் உள்ள டெல்-அவிவ் விமான நிலையத்தில் குழந்தையை அப்படியே செக்-இன் கவுண்டரில் விட்டு சென்ற பெற்றோரால் பரபரப்பு ஏற்பட்டது.

    குழந்தைக்கு டிக்கெட் வாங்கத் தவறியதால் குழந்தையை அப்படியே விட்டுவிட்டு அவர்கள் மட்டும் விமானத்தில் ஏற முயற்சித்தாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    பெல்ஜிய பாஸ்போர்ட்டை வைத்திருந்த ஒரு பெற்றோர், டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையத்திற்கு பிரஸ்ஸல்ஸ் என்ற இடத்திற்கு செல்வதற்காக தங்கள் குழந்தையுடன் வந்திருந்தனர்.

    ஆனால், அவர்கள் செக்-இன் கவுண்டர் மூடப்பட்ட பிறகு, டெர்மினல்-1க்கு தாமதமாக வந்து சேர்ந்ததாக கூறப்படுகிறது.

    மேலும், அவர்களிடம் குழந்தைக்கான டிக்கெட் இல்லை. அதை அவர்களால் வாங்க முடியவில்லையா அல்லது அவர்களுக்கு வாங்க விருப்பம் இல்லையா என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார் விமான நிலைய அதிகாரி ஒருவர்.

    இஸ்ரேல்

    விமானத்தை பிடித்தே ஆகவேண்டும் என்று குழந்தையை கைவிட்டனர்

    பின், அவர்கள் விமானத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக குழந்தையை அப்படியே செக்-இன் கவுண்டர் அருகே விட்டுவிட்டு விமானத்தில் ஏறுவதற்கான வரிசைக்கு சென்றிருக்கின்றனர்.

    கைவிடப்பட்ட குழந்தையை கவனித்த விமான நிலைய ஊழியர்கள், குழந்தையின் பெற்றோரைப் பின்தொடர்ந்து சென்று குழந்தையையும் அழைத்து செல்லுமாறு வற்புறுத்தி இருக்கின்றனர்.

    அதன்பின், குழந்தையின் பெற்றோர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனம் சேனல் 12 தெரிவித்துள்ளது.

    கடைசியில், தம்பதியும் அவர்களது குழந்தையும் விமானத்தில் ஏறவில்லை என்று இஸ்ரேல் டுடே செய்தியில் கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உலகம்
    வைரல் செய்தி

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    உலகம்

    இந்திய-சீன பிரச்சனைகளை வளர்க்க முயல்கிறது நேட்டோ: ரஷ்யா இந்தியா
    பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவண படத்திற்கு கடும் எதிர்ப்பு இந்தியா
    இந்திய எல்லைக்கு அருகில் அணை கட்டும் சீனா: செயற்கைகோள் படங்கள் இந்தியா-சீனா மோதல்
    ட்விட்டர் ப்ளூடிக் கட்டணம் 8 இல் இருந்து உயர்வு! ட்விட்டர்

    வைரல் செய்தி

    பீட்சா வாங்கியதால் போலீஸில் சிக்கிய பிரபலம்! யாரிந்த ஆண்ட்ரூ டேட்? உலகம்
    கடவுள் விஷ்ணுவை மணந்த ராஜஸ்தான் பெண் - சம்மதம் தெரிவிக்காத பெற்றோர் உலக செய்திகள்
    கிரேட்டா துன்பெர்கின் பதிவால் கைதானார் பாக்ஸர் ஆண்ட்ரூ டேட் - 9 மாதங்களாக போலீசாரால் தேடப்பட்டவர் உலக செய்திகள்
    தொடர் சர்ச்சைகளில் சிக்கும் டிடிஎஃப் வாசன் - நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்ததால் கார் பறிமுதல் டிடிஎஃப் வாசன்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025