NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / உலகம் செய்தி / குழந்தைக்கு டிக்கெட் இல்லாததால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர்
    உலகம்

    குழந்தைக்கு டிக்கெட் இல்லாததால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர்

    குழந்தைக்கு டிக்கெட் இல்லாததால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர்
    எழுதியவர் Sindhuja SM
    Feb 02, 2023, 04:37 pm 1 நிமிட வாசிப்பு
    குழந்தைக்கு டிக்கெட் இல்லாததால் குழந்தையை விமான நிலையத்திலேயே விட்டு சென்ற பெற்றோர்
    குழந்தைக்கு டிக்கெட் வாங்கத் தவறியதால் குழந்தையை அப்படியே விட்டுவிட்டு பெற்றோர்

    இஸ்ரேலில் உள்ள டெல்-அவிவ் விமான நிலையத்தில் குழந்தையை அப்படியே செக்-இன் கவுண்டரில் விட்டு சென்ற பெற்றோரால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தைக்கு டிக்கெட் வாங்கத் தவறியதால் குழந்தையை அப்படியே விட்டுவிட்டு அவர்கள் மட்டும் விமானத்தில் ஏற முயற்சித்தாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பெல்ஜிய பாஸ்போர்ட்டை வைத்திருந்த ஒரு பெற்றோர், டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையத்திற்கு பிரஸ்ஸல்ஸ் என்ற இடத்திற்கு செல்வதற்காக தங்கள் குழந்தையுடன் வந்திருந்தனர். ஆனால், அவர்கள் செக்-இன் கவுண்டர் மூடப்பட்ட பிறகு, டெர்மினல்-1க்கு தாமதமாக வந்து சேர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர்களிடம் குழந்தைக்கான டிக்கெட் இல்லை. அதை அவர்களால் வாங்க முடியவில்லையா அல்லது அவர்களுக்கு வாங்க விருப்பம் இல்லையா என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார் விமான நிலைய அதிகாரி ஒருவர்.

    விமானத்தை பிடித்தே ஆகவேண்டும் என்று குழந்தையை கைவிட்டனர்

    பின், அவர்கள் விமானத்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக குழந்தையை அப்படியே செக்-இன் கவுண்டர் அருகே விட்டுவிட்டு விமானத்தில் ஏறுவதற்கான வரிசைக்கு சென்றிருக்கின்றனர். கைவிடப்பட்ட குழந்தையை கவனித்த விமான நிலைய ஊழியர்கள், குழந்தையின் பெற்றோரைப் பின்தொடர்ந்து சென்று குழந்தையையும் அழைத்து செல்லுமாறு வற்புறுத்தி இருக்கின்றனர். அதன்பின், குழந்தையின் பெற்றோர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனம் சேனல் 12 தெரிவித்துள்ளது. கடைசியில், தம்பதியும் அவர்களது குழந்தையும் விமானத்தில் ஏறவில்லை என்று இஸ்ரேல் டுடே செய்தியில் கூறப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    உலகம்
    வைரல் செய்தி
    இஸ்ரேல்

    சமீபத்திய

    இன்று உலக தியேட்டர் தினம் 2023 : மேடை கலையின் முக்கியத்துவத்தை கொண்டாடுவோம் உலகம்
    இயக்குனர் ஷங்கர்- நடிகர் ராம்சரண் படத்தின் டைட்டில் வெளியீடு திரைப்பட அறிவிப்பு
    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்' இந்தியா
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்

    உலகம்

    ரூ.2 லட்சம் மதிப்பிலான ஜாக்கெட்டை அணிந்திருந்த வட கொரிய அதிபரின் மகள் வட கொரியா
    பொன்னியின் செல்வன்-2 ட்ரைலர் குறித்த அறிவிப்பு லைகா
    அமெரிக்காவில் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியர்கள் நடத்திய அமைதி பேரணி இந்தியா
    ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் 'காந்திய தத்துவத்திற்கு இழைத்த துரோகம்': அமெரிக்க எம்பி இந்தியா

    வைரல் செய்தி

    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! மேற்கு வங்காளம்
    80-களின் பிரபல ஹீரோயின் மாதவி, 30 ஆண்டுகளாக இந்தியா வராதது குறித்து வெளியான தகவல் கோலிவுட்
    ஜம்மு காஷ்மீர் - புனித குர்ஆனை 4 மாதங்களில் தனது கையால் எழுதி முடித்த கல்லூரி மாணவி ஜம்மு காஷ்மீர்
    லண்டன் ஹோட்டலில் மயங்கி கிடந்த பிரபல பாடகி பம்பாய் ஜெயஸ்ரீ; மூளையில் ரத்த கசிவு எனத்தகவல் கோலிவுட்

    இஸ்ரேல்

    இஸ்ரேலில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு உலக செய்திகள்

    உலகம் செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    World Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023