NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில்
    அவரது வீட்டிற்குள் போலீசார் நுழையும்போது இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பேகம் வீட்டில் இருந்தார் என்று கூறப்படுகிறது.

    இம்ரான் கான் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ்: என்ன நடக்கிறது பாகிஸ்தானில்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 18, 2023
    03:04 pm

    செய்தி முன்னோட்டம்

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கு விசாரணைக்காக இஸ்லாமாபாத்திற்கு இன்று(மார் 18) சென்று கொண்டிருந்த போது, ​​லாகூரில் உள்ள அவரது வீட்டுக்குள் போலீஸார் நுழைந்ததாக அவரது அரசியல் கட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அவரது வீட்டிற்குள் போலீசார் நுழையும்போது இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பேகம் தனியாக வீட்டில் இருந்தார் என்று கூறப்படுகிறது.

    "புஷ்ரா பேகம் தனியாக இருக்கும் ஜமான் பூங்காவில் உள்ள எனது வீட்டின் மீது பஞ்சாப் போலீசார் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். எந்த சட்டத்தின் கீழ் இதைச் செய்கிறார்கள்?" என்று இம்ரான் கான் ட்வீட் செய்துள்ளார்.

    பாகிஸ்தான்

    இம்ரான் கானின் கான்வாய் கவிழ்ந்தது

    இம்ரான் கானின் ஆதரவாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே பல நாட்களாக ஏற்பட்டு வரும் கடுமையான மோதல்களுக்கு இடையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், நீதிமன்றத்தில் ஆஜராக இஸ்லாமாபாத் சென்று கொண்டிருந்த இம்ரான் கானின் கான்வாயில் இருந்த ஒரு கார் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று அதிகாலை இம்ரான் கான் லாகூரில் உள்ள ஜமான் பார்க் இல்லத்தில் இருந்து இஸ்லாமாபாத் புறப்பட்டார்.

    ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் வருகையை முன்னிட்டு, இஸ்லாமாபாத்தின் நீதித்துறை வளாகத்தில் அமைதி மற்றும் ஒழுங்கை நிலைநாட்டவும், விரும்பத்தகாத எதுவும் நடக்காமல் தடுக்கவும் அப்பகுதி பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    உலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது இந்தியா
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மாற்றியமைக்க பாகிஸ்தானுக்கு நோட்டீஸ் அனுப்பிய இந்தியா இந்தியா
    பஞ்சாப் அமைச்சராக பதவியேற்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ்! கிரிக்கெட்
    ஒரே நாளில் வரலாறு காணாத கரன்ஸி வீழ்ச்சியை கண்ட பாகிஸ்தான்! உலகம்

    உலகம்

    திடீரென தலைவரையே பணிநீக்கம் செய்த ஜூம் நிறுவனம்! காரணம் என்ன? தொழில்நுட்பம்
    பசிபிக் பெருங்கடல் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு சொந்தமல்ல: வட கொரியா வட கொரியா
    பெண்களின் கதைகளை டாட்டூவாக வரையும் சீன கலைஞர் சீனா
    1000 நாய்களை பட்டினி போட்டு கொன்ற தென் கொரிய ஆசாமி தென் கொரியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025